Friday, April 22, 2022

கழுகு போதிக்கும் போதனைகள்:

 வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்:

வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து கொண்டு வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.
கழுகு எப்போதும் இறந்த உயிரினத்தின் மாமிசத்தை உண்ணாது.. மாறாக அவை தன் இரையை ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக கணக்கிட கூரான பார்வை உடையது..
தன் இரையை உயிருடன் எடுத்து சென்று உண்ணும்..
கடும் புயல், தொடர் மழை, இடி, மின்னல் என எச்சுழலிலும் தன் வாழ்க்கை முறையை மாற்றி துணிவுடன் எதிர் நீச்சல் அடித்து வெல்லும்.
வியூகம் :
கழுகின் எதிரி பாம்பு தான்..
பாம்பிடம் நேரடியாக தரையில் போரிடமால், தன்னுடைய அலகால் பாம்பை தூக்கி க்கொண்டு மேலே உயரமான மேகக்கூட்டங்களுக்கு மேல் பறந்து சென்று, பாம்பிற்கு பயம் வரவைத்து, சோர்வு மற்றும் பலவீனப்படுத்தி மேலிருந்து கீழே பாம்பை போட்டுவிடும்..
கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை. ஆனால், அவற்றிற்கு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும்போது உடலில் பலவித மாற்றங்க்கள் நிகழ்கின்றன.
நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.
பலம் பொருந்திய அலகு, இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும். அதற்கும் மேலாகப், பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக்கொண்டு,
எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய்விடும்.
இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள்
ஒன்று, இந்த வேதனைகள் பொறுக்க முடியாமல் இறந்து போவது;
இரண்டாவது , முடிந்த வரையில் முயன்று பார்த்து, உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது....
வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா?
உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டுவிடும்.
பொறுமையுடன், புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும்.
பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு,
தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும். திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும்.
அடுத்ததாக, புதிய, கூரிய, வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன், நகங்களாலும், அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும்.
அடர்ந்த, கறுத்த, பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும்.
புது அலகு,
புது நகங்கள்,
புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் உருவாகிய மகிழ்ச்சியில் மேலே உயரே, உயரே பறக்க ஆரம்பிக்கும்…
நீங்கள் துவர்ந்து விடாமல்,சோர்ந்து விடாமல் நிதானமாக உங்கள் மனநிலையை திடமாக்கி,
உங்களது அன்றாட சிறு சிறு வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செயல்பட்டு வந்தால், உங்கள் பெரும் பிரச்சினைகள், சில நாட்கள் கழித்து உங்களுக்கு சிறியதாக தோன்றும்..
உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு உங்கள் தன்னம்பிக்கை என்ற சிறகால் நீங்கள் வாழ்வில் உயரே பறந்து மற்றவர்களுக்கும்,உங்களை ஏளனமாக பேசியவர்களும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக பேசுமளவிற்கு வாழ்வில் உயர்வீர்கள்...
இவையணைத்தும் கழுகிடமிருந்து
நாம் கற்ற வேண்டியவையாகும்..

கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

 கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

முருங்கை மரத்தை பாருங்கள். முருங்கை மரம் என்ன செய்தது அமைதியாக தான் இருந்தது. ஆனால் அதில் கம்பளி பூச்சிகள் ஏறி அந்த முருங்கை இலைகளையும் அந்த முருங்கை மரத்தையும் அழித்து விடுகிறது அல்லவா.
இதுவே நீங்கள் ரோஜா செடியை பாருங்கள் ரோஜா செடி ஒரு அன்பான நறுமண மணத்தை வெளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் உட்காரக்கூடிய பூச்சி இனத்தை பாருங்கள். ரோஜா செடி இனம் அவ்வளவு எளிதாக அழிந்து விடுவதில்லை.
இதுபோல நீங்கள் நல்ல குணம் கொண்ட மனிதர்களாக திகழ்ந்தாலும் கூட நீங்கள் ஒரு சில நேரத்தில் கோபப்பட்டு சண்டையிடும் பொழுதும், பொருந்தாத வார்த்தைகளை கூறி பேசிக்கொள்ளும் பொழுதும், உங்களது எதிரே இருக்கக்கூடிய நபரின் கோபம் சார்ந்த உணர்ச்சியை நீங்கள் சுவாசித்து அவரது மூச்சுக்காற்றுகுள் சிக்கிக்கொண்டு அந்த உணர்வுகளை சிறிது சிறிதாக உள்வாங்கி உள்வாங்கி உங்களுக்குள் கலக்கப்படுகிறது.
இது உங்களது இரத்தத்தில் கலந்து உங்களது உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் கலக்கிறது. இந்த அணுக்கள் விஷமாக மாறுகிறது. பிறகு நீங்கள் சண்டையிட்ட அந்த நபரை போன்ற கோபம் சார்ந்த மனிதனாக மாறி கொண்டு வருவீர்கள். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் கலக்கப்படுகிறது. இது உங்களுடைய நல்ல குணத்தை சிறிது சிறிதாக நாளடைவில் சிதைத்து விடுகிறது. இந்த கோபம், இன்னும் பெரிதாக வளர்ந்து உங்களுடைய மற்ற நல்ல நல்ல குணங்களை எல்லாம் சிதைத்து விடுகிறது.
இந்த எதிர்மறை உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இதுபோன்ற நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் எதிரே இருப்பவர் தவறு செய்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்.
அவர் நல்ல குணத்தை பெற வேண்டும்.
அவர் நல்ல உணர்வை பெற வேண்டும்.
அவர்கள் இறைவனின் ஆசியை பெறவேண்டும்.
அவரது உடலில் இருக்கக்கூடிய வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்க வேண்டும் இறைவா என்று உங்களது மனதில் ஏங்கி உணர்ந்து கூறிவிட்டு நீங்கள் கடந்து செல்லுங்கள்.
முருங்கை மரத்தின் உணர்வுகளின் தன்மைக்கு ஏற்ப தான் கம்பளி பூச்சிகள் வருகிறது. ஒரு ரோஜா செடியின் குணத்தின் தன்மைக்கேற்ப தான் அதற்கான பூச்சியினங்கள் வருகிறது. நீங்கள் எப்படி உங்களது குணத்தின் தன்மையை மாற்றுகிறீர்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு பொருந்தாத நபர்கள் விலகிவிடுவார்கள். பொருந்தக்கூடிய நபர்கள் உங்களிடம் கலந்து விடுவார்கள்.
உணர்வுகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு உயிரினங்களும் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரினங்களும் அழிக்கவும் படுகின்றன.
இப்படிப்பட்ட உணர்வுகளுக்குள் சிக்க கூடாது

ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.

 தான் வெற்றி பெற்று விட்டேன் என்கிற கொண்டாட்டத்தில், பிறர் தோற்று விட்டதாக ஏளனமாக பேசுவது தவறானது.

யாருக்கு என்ன திறமை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது ஆனால், ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்...

கிரிவலம்

 



சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் வெளியூர் உள்ளூர் வெளிமாநில பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்
மேலும் கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையிலும் திருவண்ணாமலையும் தூய்மையாக வைத்திருக்க அன்போடு வேண்டுகிறோம்.

கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

 கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

இருக்கு இல்லை என்று மறுப்பதற்கு இல்லை ஆனால் அதையே நம்பிக்கிட்டு இருந்தால், அதாவது எண்ணி கொண்டே இருந்தா நல்ல நேரமும் வீணாகி போய் விடும்.
அதாவது நமக்கு இருக்கிற நேரத்தை நாம் வீண்டித்து விடுவோம்.
என்ன செய்யலாம்.
நடப்பவை நல்லவிதமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கை கொண்டு தீவிர படுத்தினால் கெட்ட நேரத்தில் ஒரு நல்ல நேரம் உதயமாகும்.
அதனால் இனி என்ன இருக்கு என்ற ஏக்கமோ விரக்தியோ வேண்டாம்.
எல்லாமே நலமாகும்.


தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம்

 ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொல்லிவிட்டு சென்று விட்டார். எனவே, ஆசைகளை அகற்றுவதற்கு உங்களுக்கு வேறு ஒரு குரு தேவைப்படுகிறார்.*

*உடலும் மனமும் தானென எண்ணும், நமது தாத்தா பாட்டி அப்பா அம்மா இவர்களை ரோல் மாடலாக எண்ணியே நாமும், வாழ தொடங்குகிறோம். அவர்கள் பயணித்த இந்த தவறான பாதையில் தான் நாமும் நீண்ட தூரம் பயணித்து விட்டோம் !!! நீங்களே சொல்லுங்கள் !!!! தவறான பாதையில் நீண்ட தூரம் பயணிப்பவன் இறுதியில் காணாமல் போவானல்லவா? அவ்வாறு தான், நம்மில் நாமே தொலைத்து விட்டோம்.*
*நான் இந்த உடல் என்கிற தமோ குணமும், நானிந்த மனம் என்கிற ரஜோ குணமும், போன்ற தவறான குணங்கள், பசுமரத்தாணி போல நச்சென்று நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதன்காரணமாகவே சாத்வீக குணத்தில் நமக்கு பஞ்சம்/பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது*
*ஆக, இந்த தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம் !!!*
*இவ்வுடலும் நானல்ல !!! இந்த மனமும் நானல்ல என்கிற அறியாமையில் வாழ்ந்ததெல்லாம் போதுமடா சாமி !!! ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவதிப் பட்டதெல்லாம் போதுமடா சாமி !!!*
*உன்னுள் உயிர்ப்பாய் இருப்பதும், உடலை முறையாக இயக்கி, சீராக வளர்ப்பதும் இந்த உயிர் தானே !!! அந்த உயிர்தான் ஆத்மா !!! அந்த ஆத்மாவே நீ !!! THATS ALL.!!!*
*HERE, THE SOUL WISDOM BEGINS: தமோ ரஜோ குணங்களிலிருந்து விடுபட்ட ஒருவன் சாத்வீக குணத்தை அடைவதும் இங்கேதான் !!! ஆசைகளில் இருந்து விடுபட்டவன் ஆத்ம ஞானத்தை அடைவதும் இங்கே தான் !!!*
*உன்னுடைய உடல் உட்பட, இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஐம்பூதங்களால் (நிலம்நீர் தீக்காற்றாகாயம்) அழிவு உண்டு !!! ஆனால், உயிர் எனப்படும் ஆன்மாவை கத்தியால் வெட்ட முடியாது !!! நீரால் மூழ்கடிக்க முடியாது !!! நெருப்பால் வேகவைக்க முடியாது !!! காற்றால் உலர வைக்க முடியாது என கீதை கூறுகிறது.*
*எனவே, அந்த ஆத்மாவையும் ஆத்மஞானியையும் எவராலும் வீழ்த்தவே முடியாது !!!*
*நீங்களே சொல்லுங்கள் !!! வீழ்த்தவே முடியாதவருக்கு (ஆத்மஞாணிக்கு= உனக்கு) எதிரிகள் எவ்வாறு இருக்க முடியும் ?*
*எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு பயம் எவ்வாறு இருக்கும்?*
*எதற்கும் பயப்படாத ஆத்மஞாணி எங்ஙனம் கவலை கொள்வான் ?*
*ஆம் !!! கவலையற்ற ஆத்மஞானி எப்போதும் மனம்-நிரைந்தவனாக தன்னில் சந்தோஷமாக இருப்பான்.*
*ஆக, 1. நான் உடலல்ல என்ற ஞானம் உடல்மீதுள்ள பற்றை குறைத்து கவலைகளை நீக்கும்.*
*நான் இந்த மனமல்ல என்ற ஞானம் நான், எனது போன்ற possessive ness தன்னலத்தைக் குறைத்து அகந்தையை அழிக்கின்றது !!!*
*3. நான் ஆத்மா என்ற ஞானம் நான் மரணமற்றவன் + நான் எதிரியற்றவன் + நான் பயமற்றவன் + நான் கவலையற்றவன் + நான் மரணகவலை இல்லாதவன் + நானர மனநிறைவு கொண்டவன் + நான் தன்னில் ஆனந்தமாக இருப்பவன் போன்ற நல்லுணர்வுகளை இந்த அந்த ஆத்ம ஞானம் தருகின்றன !!!*
*எந்தவொரு ஞானத்தை நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை என்கிற பரிபூரண-மனநிறைவை உனக்கு தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும் !!!*
*எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்*
*உன் மரணத்தின் போது கூட உன்மனம் சந்தோஷமாக இருக்குமோ* ... —> *ஆச்சர்யத்தைத் தரும் அந்த ஞானமே ஆத்மஞானமாகும் !!!*
*அந்த ஆத்மாவைப் பற்றிய ஞானம் தான் எது ? அதாவது, ... ஆத்மா என்றால் என்ன ? ஞானம் என்றால் என்ன ?*
*மொத்தத்தில், ஆத்மஞானம் என்றால் என்ன ? LET US LISTEN CAREFULLY THE 2 EQUATIONS !!!*
*ஆத்மா = உயிர் !!! (1)*
*ஞானம் =அறிவு !!! (2)*
--------------------------------
*Adding, (1) + (2) we get,*
*ஆத்மஞானம் = உயிரைப் பற்றிய அறிவு.*
--------------------------------
*Yes, It Remains To Learn About The Soul !!!*
*இப்போதிருக்கும் உனது இந்த உடலில் தங்கியிருக்கும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*மனித-ஜீவன்களின் உடல்களிலும்*, ...
*அனைத்து விலங்கு உடல்களிலும், வாசம் செய்து கொண்டு இருப்பதும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*பஹவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரமாத்மாவும் அஃதே !!!*
*அந்த ஆத்மாவே நான் !!! ஆக, ஒருவன் தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் பரமனை அறிதலும் ஒன்றுதான் !!!*
*ஆம் !!! எனதருமை ஆன்மீக ஆன்மாக்களே !!! முதலில் தன்னை அறிய முயல்பவன் நானாத்மா என உணர்ந்து, இறுதியில் 'தானே' பராமாத்மாவின் ஒரு அங்கம் என உணர்கிறான்*
*ஆக ஒருவன்,பொருட்கள் மீது பற்றில்லாமல், எதன்மீதும் வெறுப்பின்றி, பிறருக்கு ஹிம்சை செய்யாமல், கருணையோடு உதவுகின்ற எண்ணங்களோடு தன் மனதை கட்டுப்படுத்தினால், நான் ஆன்மா என உணர்வதும் சாத்தியம் !!! அவன் இறைவனை அடைவதும் சத்தியம் !!!*
*இங்கு, நாமே, நம்முயிரைப் பற்றி கற்கும் ஞானம்தான் ஆத்ம ஞானம் !!!*
*ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை* (3)
*நானே ஆத்மாவாக இருக்கின்றேன்(4) என இவ்விரண்டையும் 4 முறை சொல்லிப் பாருங்கள் !!!*
*அதாவது, எந்த ஆத்மாவுக்கு என்றுமே அழிவில்லையோ ... அந்த அழிவற்ற ஆத்மாவாகவே நான் இருக்கின்றேன் !!!*
*ஆனால், எல்லோரையும் போல, ... எப்போதும் போல பிடிவாதமாக, நானே உடல் என்கிறீர்களா ?*
*Wait A Minute Bro !!! "உடலை - நான்" என்பவனுக்கு நிச்சயம் மரணமுண்டு !!! மரண-பயமும் உண்டு !!! மரணக் கவலையும் உண்டு !!! உடல்மீது அதீத பற்றுதல் உள்ள காரணத்தால், அவனது மரணம் கொடுமையாகவும் இருக்கும் !!!*
*எனவே, மரண பயத்தை தவிர்க்க வேண்டுமா ? It Is Very Simple !!!*
*இத்தகைய சிக்கலான பிரச்சனைக்கும், ஆன்மீகத்தில் மிக எளிமையான தீர்வு உள்ளது !!! Such A Complicated Problem Also Has A Very Simple Solution In Spirituality !!!*
*இவ்வுடல் நானல்ல & நானிந்த மனமல்ல". என்கிற ஞானத்தை உடனே அப்பியாசம் செய்ய வேண்டும் !!!* (அடிக்கடி நினைவு கூர்ந்து அதை மனதில் நிலை நிறுத்துதல்)* *That's All.*
*எவ்வாறு செய்வது? ஆத்மா நிறமற்றவது !!! குணமற்றது என்ற நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*1. நிறமுமற்றவன் !!!*
*2. குணமுமற்றவன் !!! என்று சொல்ல வேண்டும் !!!*
*ஆத்மா ஆணுமல்ல !!!* *பெண்ணுமல்ல !!! இரண்டும் அல்லாததும் அல்ல என்று நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்*....
*ஆணுமல்ல.*
*பெண்ணுமல்ல.*
*இரண்டும் அல்லாததும் அல்ல என்று சொல்ல வேண்டும்.*
3. *ஆத்மா சிவப்பானவனும் அல்ல கருப்பானவனும் அல்ல நெட்டையானவனும் அல்ல குட்டையான வனும் அல்ல, என்று சொன்னால், உடனே நீங்கள்* ... ... ... *என்று சொல்ல வேண்டும் !!!*
4. *இதைப் போலவே, நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*பொறாமை, ஹிம்சை செய்தல், சுயநலம், தற்பெருமை, கர்வம் என அனைத்து தீயகுணங்களும் இல்லாதவன் என்று சொல்ல வேண்டும் !!!*
*பொறாமை, ... , கர்வம் என அனைத்து தீயகுணங்களும் நம் மனதிற்கு தான் அவ்வப்போது தோன்றுவது உண்டு !!! ஆனால், ஆன்மா குணமற்றது !!! எனவே, ஆன்மாவாகிய நானும் எந்த குணமும் இல்லாதவன் !!!*
*ஒன்றும் இல்லாதவனாகிய ... அதே சமயத்தில், எங்கும் நிறைந்தவனாகிய ... எல்லாமுமாகிய* ... *ஆன்மாவாகிய நான் எதன்மீதும் எவர் மீதும் பற்று கொள்ளாதவன். அந்த ஆன்மாவாகிய நான் எவர்மீதும் விருப்பு வெறுப்பு கொள்ளாதவன் !!!*
*ஞானம் இருப்பது என்பது வேறு !!! ஞானம் நிலைப்பது என்பது வேறு !!!*
*எனவே, இந்த ஆத்ம ஞானத்தை அறிவதோடு நில்லாமல் ... இந்த ஞானத்தில் என்றும் நம் மனம் நிலைத்து நிற்குமேயானால் (அதற்கான பயிற்சியே நிதித்தியாசனம்) நான் என்கிற நீ ஒரு ஆத்மஞாணி ஆவாய் !!!*
*இவ்வாறாக, அத்மஞானத்தில் உன்மனம் நிலைபெற்று, எந்த கவலையுமில்லாமல் (இதுவே உயிரோடு இருக்கும் போதே மோட்சம் பெறுவது) "தன்னுள்" ஆனந்தமாக வாழ்வதே ஜீவன் முக்தி !!!*

Eye cleaning methods

 

கண் கழுவும் முறை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே
மிகவும் நல்லது
கண் பார்வை மேம்படும்
கண்ணாடி கழட்டி விடலாம்
கண் ஒளி பெறும்
கண் குளிர்ச்சி பெரும்
குறிப்பாக கணினியில் வேலை செய்பவர்கள் கட்டாயம் கண் கழுவும் முறையை செய்ய வேண்டும்
இப்போது கண் கழுவும் முறை பற்றி கூறுகிறேன்
மிகவும் எளிமையானது
நாம் தினமும் குளிக்கும் போது வாளியில் உள்ள தண்ணீரில் தலையை உட்டு கண்களை திறந்து விழிகளை சுழற்ற வேண்டும் பிறகு கண்களை சிமுட்ட வேண்டும் இப்படியாக ஒரு 5 அல்லது 10 முறை செய்ய வேண்டும்
கண் கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் எந்த வித கெமிக்கலும் கலந்து இருக்க கூடாது குளோரின் கலக்காத தண்ணீராக இருக்க வேண்டும்
சுடு தண்ணீரில் கண்களை கழுவக்கூடாது
சாதாரண குழாய் தண்ணீர் சிறந்தது
இந்த முறையில் தொடர்ந்து கண்களை கழுவிப் பாருங்கள் ஆச்சர்யமாக இருக்கும்
மருந்தில்லா மருத்துவம் ஒரு அரிய பொக்கிஷம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

அனுபவம் நல்லதாக, நல்லதிற்காக இருக்க வேண்டும்

 நமது வாழ்க்கையை நாம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக, பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்கிறோம் என்பதைப் பொருத்தே, நமக்கு வாழ்க்கையும் அமைகிறது.

அதில், நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வாழ்க்கை பார்க்கும் நமது கண்ணோட்டம், அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் என ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் குறிப்பாக நமது அனுபவம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
"ஒரு அனுபவம் நமக்குப் பாடமாகும்
ஒன்றிலேயே கிடைக்கும்
ஆயிரம் அனுபவம் நமக்கு ஒரு திறமையாகும்."
திறமை கிடைத்து விட்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லை.
அனுபவம் கிடைத்தாலும் அதை நாம் சரியான அனுபவமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அது நம் வாழ்க்கையை சரியாக நகர்த்திச் செல்லும்.
அந்த அனுபவம் நல்லதாக, நல்லதிற்காக இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.
எனவே,
நல்லதையே எண்ணுவோம்!
நல்லதையே பேசுவோம்!
நல்லதையே சிந்திப்போம்!
நல்லதையே உணர்வோம்!
நல்லதையே செய்வோம்!
நல்லதே நடக்கும்...!

கடவுளை வணங்கும் போது . கண்களில் கண்ணீர்

 #கடவுளை வணங்கும் போது

🙏
கண்களில் கண்ணீர் வந்தால் என்ன பொருள் தெரியுமா?..
🙏தெய்வீக ரகசியம்🙏.
பெரும்பாலும் நம் மனம் மனச்சோர்வடைந்து அல்லது அமைதியற்ற நிலையில் இருக்கும்போது, ​​நாம் கடவுளை நினைவில் கொள்கிறோம் அல்லது கோயிலுக்கு செல்ல முயற்சிக்கிறோம்.
🙏கடவுளை வணங்கும் போதோ அல்லது கோயிலுக்குச் செல்லும் போதோ, ​​ஒரு விதமான மன அமைதியை நாம் உணர்கிறோம். அதனால்தான் சிலர் பெரும்பாலும் கோவிலுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
🙏உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வணங்கும் போது, எப்போதாவது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும். இதன் பொருள் என்ன என்பதை அறியலாம்.
🙏கடவுளின் வழிபாட்டின் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், கடவுளின் தெய்வீக சக்தி, ஏதோ ஒரு குறிப்பை தருகிறது என்று அர்த்தம். கடவுள் உங்களுக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கிறது என்று பொருள்.. நீங்கள் அவற்றைப் புரிந்து கொண்டால், உங்கள் பிரச்சினைகள் நீங்கிவிடும் என்றும், உங்கள் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாம்..
🙏மேலும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்கள் வழிபாடு வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று பொருள். இப்போது உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
🙏 அழகர் மலையானே போற்றி 🙏

உயர்ந்த நிலைக்கு

வாழ தெரியாமல் யாரும் வாழ்வதில்லை ஆனால் முன் ஜென்ம கர்மா பலன் வாழ விடுவதில்லை.
எண்ணங்களை திசைமாற்றி நல்லதை மறைத்து தீயவைகளை நல்லவை போல காட்டி சிதைத்து சின்னபின்னமாக்கி விடுகிறது.
இதில் இருந்து விடுபட முதலில் இதில் நம்பிக்கை வேண்டும்.
இதை பற்றிய உணர்தல் புரிதல் வேண்டும்.
இவை இருந்தால் மட்டுமே எண்ணங்களை நேர்மையாக எண்ண வேண்டும் என்ற உயர் சிந்தனை உங்கள் மனம் ஏற்று கொள்ளும்.
ஏற்று கொண்டாலும் அதன் மீது தீவிர தேடுதல் கொண்டு எண்ணங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு போக போக மாற்றம் வரும்.

இன்ப துன்பங்களுக்கு காரணம்.

 உனது எண்ண அலைகளே உனக்கான இன்ப துன்பங்களுக்கு காரணம்.

உனது எண்ணங்களை உனக்கான உயர் நிலைக்கு கொண்டு செல்.
எண்ணங்கள் உயர்ந்து நிற்க நிற்க உன்னை சுற்றி நல்ல நேர்மையான அதிர்வுகள் வலம் வர தொடங்கும்.

நலமாக வாழ = மெய்பிரான் ஞான சித்தர்

 இறைவன் ஞானவெளி மெய்பிரான் ஞான சித்தர் அவர்கள் அருளியது.

3. நலமாக வாழ
என் உறவே...
நீ நலமாக வாழவேண்டும்
வாழ்ந்து வாழ்வை
வெல்ல வேண்டும்.
உன் தேவைகளுக்கு
உதவ நான் தயார்
நீ தேடிக்கொண்டிருந்தவன்
இதோ நான்.
உற்றுப் பார்
வானத்தைத் தொட்டுவிடலாம்.
கற்றுப் பார் தமிழை
காலத்தை முடக்கிவிடலாம்.
உன் உயிர் சுரத்தை மீட்டும்
ராக சுரங்களைக் கொண்டது தமிழ்.
பற்றோடு படி
பற்றிப்பிடி
அத்துப்படி ஆகும்
ஆயக்கலையும்.
சாகா கலையை
நோகாமல் சொல்லும்
தந்திரம் தெரியும்
தமிழுக்கு.
கற்க
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
சுழுமுனை ஏற்றத்தை
சுருதி காட்டும்
சூத்திரம் பார்.
இல்லாததில்லை
இந்த தமிழில்.
கல்லாதவனுக்கோ
சொல்லத் தெரியவில்லை.
கற்பனைக்கு இடமே இல்லை.
மனதை ஆளவிடவில்லை
அருந்தமிழன்
மனதை ஆண்டவன்.
அறிந்தடங்கிப் போனதினால்
மௌனியானான்.
வாய் பேசத் தெரியாத
ஊமை இல்லை
கண் பேசத் தெரிந்த
காந்தர்வன்.
மாயத்தை மாயத்தால் மறைக்கும்
மதி உண்டு
சதி இல்லை
கதியின்றி கிடக்கவில்லை
காட்டாறு.
நாட்டாரை வாழவைத்துப் பார்க்க
சிறுத்து ஓடும்
சிறுத்தை யல்ல சிங்கம்
வேண்டலே வேண்டாமென்று
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்
ஆதியும் இவனே
அந்தமும் இவனே
ஆருயிரை மீட்கும்
அருமருந்து தேனே
அகமகிழ்ந்து வாழ
அருள்கொண்ட வள்ளல்
பொருள் தேடி பிழைக்க
ஊர்நாடிச் செல்லான்
கருதேடி ஆய்ந்து
கருத்தாளன் ஆனான்
உன் குலம்
சித்த குலம்
மனித இனத்தில்
தோற்ற குலமல்ல
மனித இனத்தின்
தோற்ற குலம்.

what is tamil ?

என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதுல? - ன்னு கேள்வி கேட்கட்டும்.
இது தான் பதில்.:
இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!
1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !
1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!
1.கம்பராமாயணம்-வழிநூல்.
1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..
1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!
சமய குரவர்கள்
----------------------------
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------
தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்
மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------
அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.
சித்தர்கள்: பதினெண் சித்தர்:
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்
இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.
பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.
இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய இனிய மொழி எம் தாய்மொழி தமிழ்..!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம்
1

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...