இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும்.
சிலர் வீட்டில் பணவரவு அதிகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பணமானது செலவாகி கொண்டே இருக்கும்.
என்னதான் பணம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவதொரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை.
பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது. இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையை மாற்றி, வீட்டில் பணவரவு தங்க, சக்தி வாய்ந்த பரிகார முறையை பற்றி பார்க்கலாம் வாங்க..
💷 வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.
💷 வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு தான் உண்டு.
💷 தொழில் புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு கடவுள்களுக்கு ஊதுபத்தியை ஏற்றுவதன் மூலம் பணவரவு உண்டாகும்.
💷 வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர, வீட்டில் நிதி நிலைமை கட்டுக்குள் வரும்.
💷 பணத்தை வைக்க நாம் உபயோகிக்கும் பர்ஸ், பணப்பெட்டி, சிறிய டப்பா போன்றவை எப்போ தும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் தான் லட்சுமி எப்போதும் தங்க விரும்புவாள்.
💷 நமது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து இதில் அதிகம் பணம் சேர வேண்டும் என வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும். பெண்கள் பொதுவாக சமையலறையில் ஏதாவது ஒரு டப்பாவில் பணத்தை சேமிப்பர் அவர்களுக்கும் இது பொருந்தும்.
💷 இலவங்கப்பட்டையை நம் பணப்பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
💷 பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.
💷 வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த முறைகளை கடைபிடித்து பணவரவை அதிகரிப்போம்.. நலமுடன் வாழ்வோம்..!