Showing posts with label ராமசீதா புராணத்தில் வரும் மாரீசன். Show all posts
Showing posts with label ராமசீதா புராணத்தில் வரும் மாரீசன். Show all posts

Wednesday, February 23, 2022

ராமசீதா புராணத்தில் வரும் மாரீசன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், மேலசெம்மங்குடி சிவன்கோயில்.

Melasemmangudi sivan temple 

பாபநாசம்- திருக்கருகாவூர் சாலையில் உள்ள வெட்டாற்றினை தாண்டாமல் அதன் மேற்கு நோக்கி செல்லும் அதன் வடகரையில் நான்கு கிமி தூரம் பயணித்தால் கோடுகிழி எனும் கிராமம் உள்ளது. அங்கிருந்து வடக்கில் இரண்டு கிமி தூரத்தில் மேலசெம்மங்குடி உள்ளது. சுற்றிலும் பசுமையான நெல் வயல்கள், அதில் ஆங்காங்கே நின்றிற்கும் மரங்களில் குடியிருக்கும் மயில்களின் அகவல்களும், தவிட்டுகுருவிகளின் சொல்லாடல்களும் நம்மை பரவசப்படுத்துகின்றன.  

ராமசீதா புராணத்தில் வரும் மாரீச மானை பிடிக்கும் படலத்தில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது மாரீசன் எனும் மான் மேய்ந்த ஊர் பொன்மான் மேய்ந்த நல்லூர். மான்தங்கியஅகரம்(மாதாகரம்), மான்நல்லூர்(மானல்லூர்), புள்ளமான்குடி (புள்ளமாங்குடி), மான்மேய்ந்ததிடல்(மட்டியாந்திடல்), பெருமான் குடி(பெருமாங்குடி),பெருமான்கள் நல்லூர் (பெருமாக்கநல்லூர்) மான் குண்டு(மாங்குண்டு), மான்தங்கிய கரை (மாதங்கரை), மாயமான்பேட்டை(நாயகன்பேட்டை) மான்குடி (மாங்குடி) ராமன் சோர்ந்த இடம் சோர்ந்தமங்கலம் (சோத்தமங்கலம்) மானை வளைத்த மங்கலம் (வலத்தமங்கலம்)லட்சுமணன் பர்ணசாலையினை தாண்டி சீதை வரக்கூடாது என ஒரு கோடு கிழிக்கிறார். அந்த இடம் தான் இந்த கோடுகிழி. 

அவ்வகையில் இவ்வூர் பெயர் செம்மான்குடி தற்போது மேலசெம்மங்குடி.

சிறிய கிராமம் ஊரின் மையத்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஐயனார் கோயிலும், ஒரு சிவன் கோயிலும் இருந்தனவாம். சிவாலயம் முற்றிலும் சிதைந்துவிட லிங்கம் மட்டுமே தற்போது உள்ளது. கோவை அரன்பணி அறக்கட்டளை மற்றும் கிராமத்தினரின் உதவியுடன் புதியகோயில் உருவாகிறது. பெரிய லிங்கமூர்த்தி. ஆதலால் அவருக்கு கோயிலும் அப்படித்தானே அமையவேண்டும். உயர்ந்த அதிட்டானம் அதன்மீது நெடிதுயர்ந்து நிற்கும் விமானம். கஜபிருஷ்ட வடிவில் அமைகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வடபாகத்தில் சண்டேசர் சன்னதியும் கட்டப்பட்டு வருகிறது. நகாசு வேலைகள் மற்றும் முகப்பு மண்டபம் இவை அமைந்துவிட்டால் உடன் குடமுழுக்கு தான். 

வயிற்றுக்கு உணவிடும் கிராமத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு அவர்கள் ஆன்மீக நாட்டத்துடன் வாழ கிராம சிவாலயங்களை புதுப்பித்து கொடுத்தலே ஆகும். 

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...