சித்தார்த்தன் புத்தனாவதற்காக அவனது மனைவியையும் குழந்தையையும் அரண்மனையில் விட்டு நீங்கிய போது அவர்களுக்கு என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது.
விக்ரம் பட்டாச்சார்யாவின் விளக்கம் அந்தக் கதையை சொல்கிறது.
***********************************************
இருந்தும் அவள் யாரிடமும் குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. சித்தார்த்தனை இழந்த அவளது வாழ்க்கை அர்த்தமற்றதாகிப் போனது. அவளது மகன், அவள் தொடர்ந்து வாழ்வதற்கான ஒரே காரணமாகிப் போனான். உலகமே உற்று நோக்கும் சிறந்த மனிதனாக தனது மகனை வளர்க்க உறுதி பூண்டாள்.
அவளது உறவினர்களும் நட்புக்களும் அவளை உதறிவிட்டுச் சென்றவனை மறந்து, வாழ்வை முதலில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்க அறிவுறுத்தினார்கள்.
மற்றொரு திருமணம் செய்து கொள் என்ற அவர்களின் அறிவுரையை அவள் மறுத்தாள். அழகும் இளமையும் ததும்பி நின்ற அவளை கரம் பிடிக்க பலர் வாசலில் நின்றிருந்தனர். அவர்கள் யாருக்கும் அவளது இதயக் கதவு திறக்கவே இல்லை.
ஒரு நாள் அவன் திரும்பி வந்தான்.
தன் முன்னே நிற்கும் அவன் தான் தன்னை தவிக்க விட்டு சென்றவனா என உற்றுப் பார்த்தாள்.
"உம்மை புத்தர் என்று அழைக்கிறார்கள்" என்று அவனிடம் மென்மையாகக் கூறினாள்.
" நானும் அவ்வாறே கேள்விப் பட்டேன்" என தன்மையாக பதிலளித்தான் அவன்.
" அதன் அர்த்தம் என்ன" என வினவினாள்.
"ஞானம் பெற்றவன், அறிந்தவன் என நினைக்கிறேன்" என்றான்.
புன்சிரிப்புடன் அமைதியானாள்.
" நாம் இருவருமே சில பாடங்களை படித்திருக்கிறோம். ஓ புத்தனே! நீ படித்த பாடங்கள் மனிதர்களுக்கு ஆன்ம பலத்தை கூட்ட பயன்படலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் படித்த பாடங்கள் யாருக்கும் தெரியாமலேயே போய்விடும்" என மிக ஆழமான வார்த்தைகளைக் கூறினாள்.
" அப்படியென்ன பாடம் என தெரிந்து கொள்ளலாமா" என புத்தன் கேள்விக்குறியோடு அவளை நோக்கினான்.
கண்களில் நீர் பணிக்க தீர்க்கமான பார்வையோடு யசோதரை கூறினாள்
"மன தைரியம் கொண்ட பெண் ஒருவள் முழுமை பெற வேறு யாரும் தேவையில்லை.......
அவள் தானே முழுமையானவள்"
மகளிர் தின வாழ்த்துகள்.