Showing posts with label தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள். Show all posts
Showing posts with label தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள். Show all posts

Thursday, September 22, 2022

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*
😁😁😁😁😁😁😁😁

*கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து*
_பல் விளக்கச்சொன்னபோது_ ,

*பட்டிக்காடு* என *இளித்த பற்கள்*
*இன்று வேரற்று போனபோது*...

*ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*...

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*வெந்தயமும் சிகைக்காயும்*
*வடிதண்ணீரில் அரைத்து*
*தேய்த்துக்குளி என்றபோது* ,

*பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்*

*இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்*
_சீகைக்காய் வாங்க_......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*பாசிப்பயறோ*
*கடலை மாவோ*
*அரைத்துக்குளி* என்ற போது ,

*லிரில்* ,
*லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்*
*அழகு சோப்*
என *கைகாட்டிய* *கட்டிகளை*
*எல்லாம் போட்டு*,,
*தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*..

*ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*இருமலோ தும்மலோ*
*வந்தபோது*...
*துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* ,

*முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* ,

*ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*வயிற்று வலி என்றபோது*
*வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*..

*சீறித் தூக்கி எறிந்து* ,
*ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு*
*கருப்பை பழுதடைந்த பின்பு* ,
_ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி*
*மணமாய் தந்தபோது* ,

*சன்ஃபிளவர் ஆயில்* *பார்*
*முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,*
*பதிலுரைத்துவிட்டு*,

*இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* .....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்....

*மண்பானை சமையல்*
*மண்பானை குளிர் நீரை*
எல்லாம் மாற்றி விட்டு ,

*ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து*
*சவமான பின்பு ஓடுகின்றேன்*

*மண்பானை வாங்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

*படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*..

*குருகுலக்கல்வியை*
*கோடிக்கணக்கான ரூபாய்*
*கல்வியாக்கி* ,

*கொல்லைப்புற துளசியின்*
*வைத்தியம் மறந்து* ,
*மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு*
*இலட்ச இலட்சமாய்க்கொட்டி* 
*நடைப்பிணமாக வாழும்*
*வாழ்வில் எங்கே சுதந்திரம்*
*ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள் .......

*மூத்தோர் சொல்லும்*
*முது நெல்லிக்காயும்*
*முன்னே கசக்கும்* ,
*பின்னே இனிக்கும்*

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...