Monday, January 27, 2025

பாம்பாட்டி சித்தர்.. ஆச்சர்ய சித்தர்

 பாம்பாட்டி சித்தர்.. ஆச்சர்ய சித்தர்

பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது.
அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல்அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது.
அவர்தான்" சட்டைமுனி சித்தர். "
இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார்
தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே பாம்பாட்டி சித்தரும் ‘சித்தர் வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார்.
.
நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம்.
எங்களுக்கு அபூர்வ சக்திகள் பல உண்டு.
இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்று இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூருகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
"சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர்நாற்றமுடைக்குடமது
உடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே"
எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும்,
சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும்.
இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டிசித்தர்.
மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
“நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்கிறார்.
என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
"சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”
எத்தனை சொந்தங்கள் நமக்குத் துணை நின்றாலும் அவையெல்லாம் உண்மையான சொந்தங்கள் அல்ல என்றும் "இறைவன்" ஒருவனே நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து "மேல் ஓட்டினுள் ஒட்டாத புளியம் பழம் "போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி கோவில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி மிக அருகில் உள்ளது.

கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்

 கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்...

கொடைக்கானல் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பேரிஜம் ஏரிக்கு அருகில் இந்த மதிகெட்டான் சோலை உள்ளது...
400 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடுகளைக் கொண்டது மதிகெட்டான் சோலை சூரிய ஒளி கீழே படாத அளவிற்கு மிகவும் அடர்த்தியான காடுகள்...
மனிதர்கள் உள்ளே சென்றால் வெளியே வர முடியாதபடி பாதை மறந்து போகும் அளவுக்கு மிகவும் அடர்ந்த காடுகள்...
தமிழ்நாட்டிலேயே மர்ம காடுகள் என்று அழைக்கப்படுகிறது இந்த மதிகெட்டான் சோலை..
மனிதர்களுக்கு ஒவ்வாத தாவரங்கள் பூவாசம் இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை

 சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

அதிகமாக போக்குவரத்து நடைபெறும் 10 தேசிய நெடுஞ்சாலைகள்:

 தமிழகத்தில் 24 மணி நேரமும் லாரி, கார் என அதிகமாக போக்குவரத்து நடைபெறும் 10 தேசிய நெடுஞ்சாலைகள்:

1. NH - 44 ( Sri Nagar - Kanniyakumari)
ஒசூர் - கிருஷ்ணகிரி - சேலம் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி சாலை.......
2. NH 48 ( New Delhi - Chennai)
சென்னை - காஞ்சிபுரம் பைபாஸ் - ராணிப்பேட்டை - வேலூர் - வாணியம்பாடி - கிருஷ்ணகிரி சாலை
3. NH 32 ( Chennai - Thindivanam)
NH - 132 ( Thindivanam - Vizhupuram )
NH 38 ( Vellore - Tuticorin)
சென்னை - திண்டிவனம் - விழுப்புரம் - பெரம்பலூர் -
திருச்சி - மதுரை - தூத்துக்குடி
4. NH 544 ( Salem - Cochin)
சேலம் - பவானி - கோவை
5. NH 79 : ( Ulundurpet - Salem )
உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி -ஆத்தூர் - சேலம்
6. NH 83 ( Coimbatore - Nagapattinam)
கோவை - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் - திருச்சி - தஞ்சாவூர் -நாகை
7. NH 179 A ( Salem - Vaniyambadi)
சேலம் - அரூர் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - வாணியம்பாடி
8. NH 77 ( Krishnagiri - Thindivanam )
கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை - செஞ்சி - திண்டிவனம்
9. NH 81 ( Coimbatore - Trichy - Jayankondam -Chidambaram)
இதில் கோவை - பல்லடம் - கரூர் - திருச்சி - கீழப்பழூர்
இந்த நெடுஞ்சாலையில் கீழப்பழூர் வரை மட்டுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும்.......கீழப்பழூர் முதல் சிதம்பரம் வரை அவ்வளவாக இருக்காது....
10. NH 716 ( Chennai - Bellary)
சென்னை - திருவள்ளூர் - திருத்தணி - திருப்பதி
மாநில நெடுஞ்சாலையில்
திருச்சி - நாமக்கல் இடையே 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்து நடைபெறுகிறது........

சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்

 ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....

(1) இலங்கையில் சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்....
(2) ஆதியில் குபேரன் இங்கு வழிபாடு இயற்றியதாக வரலாறு....
(3) தொடர்ச்சியாக 8 மணிநேரம் இலங்கையில் அடர்ந்த யாள மோனராகலை காட்டுக்குள் பல சிற்றாறுகள், வனங்களை கடந்து பயணித்தால் இயற்கையே கோயிலாக அமைத்த ஒரு அற்புத சித்தர்கள் வனம்...
(4) எந்த வித வெளியுலக தொடர்புமே இல்லாத சித்தர்களின் புனித பூமி
(5) முருக பெருமான் தவமியற்றி, அற்புத சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி ஒளியில் கலந்த அற்புத இடம்....
(6) நவகோடி சித்தர்களுக்கும் முருக பெருமான் தவத்தை கற்று கொடுத்த இடம்.....
(7) போகர் பெருமான் ஆதியில் தவமியற்றிய தபோவனம்
(😎 கதிர்காமத்தில் ஆதியில் இருந்த போகர் பெருமான் நவ பாஷாணங்களை கொண்டு உருவாக்கிய நவ பாஷாண வேல், நவாக்ஷரி யந்திரத்தை மறைத்து வைத்த இடம்...
(9) கஜபாகு மன்னன் முதல் முதலில் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடத்திய இடம்....
(10) இன்று வரை இலங்கையில் சிம்மாசனத்தில் அமரும் அரசர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் இங்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பதவியில் அமர்வது சாசனமாகவே உள்ளது. (முதல் முதலில் சிங்கள வரலாற்றில் துட்டகைமுனு இங்கு தொடங்கி வைத்தான். இந்த விதிமுறையை....
(11) முறையாக ஒருமாத காலம் விரதமிருந்து குறிப்பிட்ட விதிமுறைக்கமைய சென்று வழிபாடு நடத்தினால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் அற்புத இடம்... (இது வரை என் அனுபவத்தில் பல்லாயிரம் பேரிடம் பார்த்த அனுபவம்....
(12) இன்று வரை வேற்று கிரக வாசிகள் வந்து இறங்கும் அற்புத இடமாக இந்த இடம் போற்ற படுகிறது....
1ம் நாள்:-
---------------
உகந்தை மலை நோக்கி பயணித்து மாலை உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைதல்.
இரவு 7 மணிக்கு உகந்தை மலையில் வேல் பூஜை, 210 சித்தர்கள் வேள்வி, சிறப்பு அறிவுறுத்தல்கள் இரவு உணவை எடுத்தல், பயணம் பற்றிய அனைத்து அறிவுறுத்தல்கள் விடயங்களை பகிரல், தொடர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்தல்.
2ம் நாள்:-
----------------
அதிகாலை 5.30க்கு உகந்தை ஆலயத்தில் பயணம் சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடுகள்...
காலை 6.00 மணிக்கு விசேட ஜீப் மூலம் உகந்தையில் இருந்து கபிலவத்தை பயணம் ஆரம்பம். குமண சரணாலயத்தை கடந்து குமுக்கன் அம்மன் ஆலயத்தை அடைதல்.
காலை 8 மணிக்கு குமுக்கன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள "மிக சக்தி வாய்ந்த வன தேவதைக்கு சிறப்பு பொங்கல், சிறப்பு மடை பூஜைகள், சிறப்பு வன தேவதைகளுக்கு வன பூஜை"
தொடர்ந்து கபிலவத்தை நோக்கி பயணம்.....
காலை 11 மணிக்கு கும்பகர்ணன் ஆறு என்று சொல்லப்படும் குமுக்கன் ஆறு உற்பத்தியாகும் கும்பக கர்ப்ப பாறையில் அனைவரும் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தல். தொடர்ந்து மதிய உணவை எடுத்து கொண்டு அனைவரும் கபில வத்தை நோக்கி பயணம்.....
மாலை 4மணியளவில் கபிலவத்தை சித்தர்கள் வனத்தை அடைதல். அனைவரும் ஓய்வெடுத்து சித்தர்கள் வனங்கள் அனைத்தும் சுத்தி பார்த்தல்.
மாலை 5 மணிக்கு புண்ணிய ஆத்மாக்கள், வன தேவதைகள் அனைத்தும் வாசம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கும் அபூர்வ மூலிகை சக்திகளை கொண்ட கபில நதி எனப்படும் கபிலவத்தை "கங்கையில் மரகத லிங்கத்துக்கு மாபெரும் ருத்ர அபிஷேகம்"
இரவு 7 மணிக்கு இரவு போசனங்கள் எடுத்தல், பயணத்தில் அனைவரின் அனுபவங்களை பகிரும் கலந்துரையாடல்....
இரவு 12 மணிக்கு நள்ளிருளில் அனைத்து தேவதைகளும் உலா வரும் சித்ரா பௌர்ணமி நன்னாளில் அற்புத நேரத்தில் கபில வன கங்கை கரையில் "இந்த உலகத்தை ஆளும் 210 சித்தர்களின் அதி சக்தி வாய்ந்த சித்தர்கள் வேள்வி, சிறப்பு வன பூஜை," சிறப்பு கூட்டு வழிபாடு. தொடர்ந்து கங்கை கரையில் அனைவரும் உறங்குதல்.....
3ம் நாள்:-
----------------
காலை 5 மணிக்கு நதியில் நீராடி நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற சப்த கன்னிகைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு, விசேட பொங்கல் பூஜை, இந்த உலகை நவகோடி சித்தர்களின் அருளாட்சியின் கீழ் முருக பெருமான் வாசம் செய்யும் கபில வன புளியமர நிழலில் கீழ் மாபெரும் கூட்டு வழிபாடு. தொடர்ந்து வனபோஜனம் செய்து வனத்தில் இயற்கை உணவை உட்கொள்ளல்....
காலை12 மணிக்கு அனைத்து வழிபாடுகளும் நிறைவு பெற்று கபிலவத்தையில் இருந்து மீண்டும் உகந்தை நோக்கி பயணித்தல்.
மாலை 6மணிக்கு உகந்தை ஆலயத்தில் இருந்து மீண்டும் நம் இல்லங்களுக்கு பயணித்தல்.
ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து முக்கியமான நம் சித்தர்களின் . நண்பர்களுடன் மட்டும் அங்கு சென்று நான் தரிசிக்கும் அபூர்வ பயணம்...
தொடர்ந்தும் அவன் அழைப்பான்... பயணிப்பேன்....
அவன் அழைப்பு இல்லாமல் கனவிலும் கூட யாரும் இங்கு சென்று சக்திகளை அடைய முடியாது....
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி.....
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...