Showing posts with label ஏன் உண்ண வேண்டும் ". Show all posts
Showing posts with label ஏன் உண்ண வேண்டும் ". Show all posts

Friday, April 22, 2022

ஏன் உண்ண வேண்டும் "

 வாழ்க வளமுடன் .

ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித அடிப்படை வாழ்வுக்கு அவசியமான அனைத்தையும் விளக்கி விட்டார் கவிகளின் வாயிலாக.
உண்ணும் உணவைப் பற்றி விவரித்த குரு அவர்கள் இன்று அடுத்த கட்டமாக ஏன் உண்ண வேண்டும்? என்று இன்றைய கவியிலே விளக்குகிறார் பாருங்கள்!
தலைப்பு : " ஏன் உண்ண வேண்டும் "
(24-12-1956)
'இருப்பது நாம் புசிப்பதற்கே '
என்பார்கள் பாமரர்கள்;
'இருப்பதற்கே புசிக்கிறோம்'
என்பார் ஆராச்சியுளோர் ;
'இருப்பதனால் புசிக்கிறோம்'
என்பார்கள் முடிவறிந்தோர் ;
இருப்பது ஏன் ? புசிப்பது ஏன் ?
எனும் கேள்விக் கிவை பதில்கள்.
%%%%%%%%%
அதாவது,
பாமரமக்கள் நாம் இருப்பதற்கு சாப்பிடுகிறோம் என்பார்கள்.
சிந்தனையாளரோ, நாம் இருப்பதற்க்காகவே
சாப்பிடுகிறோம் என்பார்கள்.
நாலும் அறிந்தோர் நாம் இருப்பதனாலே சாப்பிடுகிறோம்
என்பார்கள்.
இருப்பது ஏன் ? சாப்பிடுவது ஏன் ?
என்ற கேள்விக்களுக்கு தான் இவை விடைகள்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...