வாழ்க வளமுடன்.
ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித வாழ்வு சிறக்க உண்ணும் உணவு மிக மிக அவசியம் என்பதை 'உணவு ' என்கின்ற தலைப்பிலே பார்த்து வருகிறோம்.
இன்று " அளவோடு உணவு "
(20-10-1958)
என்ற கவியைப் பார்ப்போம்.
உணவே உடலாக வந்துள்ளது ;
ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர்
வாழவேண்டும்.
உணவில் அளவுமுறை மாறிட
மீறிட,
உணவாகவே உடல் மாறியும்
போமன்றோ?
:%%%%%%%%%%%
அதாவது,
உணவு தான் மிகவும் அவசியம் என்றாலும் அதிலும் அளவு முறை மிக மிக அவசியம். " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அன்றோ!
உண்ணும் உணவுதானே உடலாக வந்துள்ளது. ஆகையினால் உணவை உண்டு தான் உயிர் வாழ வேண்டும்.
அதே நேரம் அளவு முறை மீறும் போது, மாறும் போது உணவாகவே உடல் மாறி விடாதா? விளைவு ?