தீர்க சுமங்கலி பவா
தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
ஒன்று திருமணத்தில்
3 வது 70 வயது பீமரத சாந்தியில்
4 வது 80 வயது சதாபிஷேகத்தில்
5 வது 96 வயது கனகாபிஷேகத்தில்
60 வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் தனது என்ற பற்றை துறக்கும் போது செய்வது சஷ்டியப்த பூர்த்தி திருமணம் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
70 வது வயதில் தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். காமத்தை (ஆசைகள்) முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
80 வது வயதில் ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை. அனைத்திலும் அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார்.
96 வது வயதில் இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி ஆசி பெறுகிறார்கள்.
All reactions: