Wednesday, February 19, 2025

சுற்றுச்சூழல் அமைப்பை தொந்தரவு செய்யாமல் உள்ளூர் பொருளாதாரத்தை

 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான்-யாங்சின் நெடுஞ்சாலை, நெல் வயல்கள் மற்றும் மீன்வளர்ப்பு குளங்களின் நிலப்பரப்பில் 126 கி.மீ நீளமுள்ள பொறியியலின் தலைசிறந்த படைப்பாகும். இதன் உயர்ந்த வடிவமைப்பு, அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாய உற்பத்தியையும் பாதுகாக்கிறது, பாரம்பரிய நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் தொடர அனுமதிக்கிறது. காற்றில் இருந்து பார்த்தால், நெடுஞ்சாலை நீர் கண்ணாடிகளின் மொசைக் மீது மிதப்பது போல் தெரிகிறது, இது ஒரு மூச்சடைக்கக்கூடிய காட்சியை வழங்குகிறது.

வெறும் ஒரு சாலையை விட, இந்த நெடுஞ்சாலை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் கட்டுமானம் வுஹான் மற்றும் யாங்சின் இடையேயான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது, சுற்றுச்சூழல் அமைப்பை தொந்தரவு செய்யாமல் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. விவசாய மரபுகளுக்கு மரியாதை அளிப்பதன் மூலம், புதுமை எவ்வாறு இயற்கையுடன் இணைந்து வாழ முடியும், ஒரு சாதாரண பயணத்தை ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக மாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது.

அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ,

 அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.

செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.
செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.
செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.
பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.
உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.
செண்பகப்பூ பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.
செண்பகப் பூ பொடியில் கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால், ஆண்மை குறைவு நீங்கும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.
செண்பகப்பூவுடன், 100 மில்லி நீர் விட்டு காய்ச்சி, 50 மில்லி காலை, மாலை என, இருவேளை குடித்து வர, மேக நோய்கள், நீர்சுருக்கு, வெள்ளை வெட்டை மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
செண்பக இலையை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்று வலி குணமாகும். கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.
செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.

இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர்.

 இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர்.

""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.
""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர்.
அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார்.
இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர்.
இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .
இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார்.
அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.
கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது.
சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,
பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.
May be a doodle of ‎temple and ‎text that says '‎י திருமூலதேவ திருமுலதேவதாயனார் தாயனார்‎'‎‎

நாகை – இலங்கை இடையே நாளை(12.2.2020) முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து

 நாகை – இலங்கை இடையே நாளை முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து.

நாகை- இலங்கை இடையே நாளை முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்குகிறது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை 2023ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மூலம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கப்பல் இயக்கப்பட்டது.
வாரத்தில் 5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்து நாளை (12ம் தேதி) முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
இனி வாரத்துக்கு செவ்வாய்க்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும்.
டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதில் ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம்.
இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

 

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்:

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு
04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்.
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீரத் தேக்கம்.
10. ஓடை - (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11 கட்டும் கிணக்கிணறு – (Built-in -well) சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
12. கடல் - (Sea) சமுத்திரம்.
13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்னெ 9ச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் – (Channel) நீரோடும் வழி.
16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.
18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி – (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி – ( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. சுனை- (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47 வாய்க்கால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

காலை எழுந்ததும் மலச்சிக்கல் இல்லாமலும்.,

 

காலை எழுந்ததும் மலச்சிக்கல்

இல்லாமலும்.,
இரவு தூங்கப் போகும் போது
மனச்சிக்கல் இல்லாமலும்
எவர் தன் பொழுதுகளை அமைத்துக்
கொள்கிறாரோ அவரே பூரண
ஆரோக்கியவான்
இரவு படுக்கப் போவும் போது குடித்து
விட்டுப் படுத்தால் விடி காலை அது
எழுப்பி விட்டு விடும். மலச்சிக்கலுக்கு
துத்தி இலை கை கண்ட மருந்து.
ஒரு ஆளுக்குப் பத்து துத்தி இலையை
ஒரு தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க
வைத்து பனைவெல்லம் தேங்காய்ப்
பால் கலந்து குடித்து விட்டுப் படுக்க
வேண்டியதுதான்...
இது மருந்து போல் கஷ்டப்பட்டுக்
குடிக்க வேண்டியதில்லை. ரசித்து
ருசித்து குடிக்கலாம். கிட்டத்தட்ட
பாதாம் பால் குடிப்பது போல் இருக்கும்.
இதற்கு ஒரு சித்தர் பாடல் கூட
உண்டு.
" மூலநோய் கட்டி முளைப்புழுப்
புண்ணும் போகும்
சாலவதக்கிக் கட்டத்தையே -
மேலுமதை எப்படியேனும்
புசிக்க எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் துத்தி யிலைக்கே... "இரவு வணக்கங்கள்..

தும்பை செடியின் இலை மற்றும் பூ

 


தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன....

1. தும்பை பூவை, பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால், சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்....
2. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி, அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்....
3. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்....
4. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்....
5. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்று விடும்....
6. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்...
7. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்...
கீர்த்தி இயற்கை அங்காடி

திருப்பதி to புதுச்சேரி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்

 

🚆 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16111 திருப்பதி இருந்து புதுச்சேரி தினசரி முற்றிலும் முன்பதிவில்லா விரைவு ரயில் உள்ளது 🚆
திருப்பதி : 4:00Am
ரேணிகுண்டா:4:15Am
புதி:4:53Am
தடுக்கு:5:04Am
புத்தூர்:5:14Am
வேபகுண்டா:5:22Am
ஏகாம்பரகுப்பம்:5:32Am
நகரி:5:36Am
வெங்கடநரசிம்மராஜுவாரி:5:43Am
பொன்படி:5:49An
திருத்தணி:6:20Am
அரக்கோணம்:7:10Am
திருமால்பூர்:8:12Am
காஞ்சிபுரம்:8:23Am
காஞ்சிபுரம் கிழக்கு:8:28Am
வாலாஜாபாத்:8:41Am
பாலூர் :8:54Am
செங்கல்பட்டு :9:15Am
மதுராந்தகம்:9:39Am
மேல்மருவத்தூர்:9:49Am
ஒலக்கூர்:10:03Am
திண்டிவனம்:10:19Am
மயிலம்:10:28Am
விக்கிரவாண்டி:10:48Am
விழுப்புரம்:11:45Am
சின்னபாபு சமுத்திரம்:12:09pm
வில்லியனுர்:12:17pm
புதுச்சேரி:12:38pm
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !

திப்பிலியின் பயன்கள்...

 


1890 மெட்ராஸ் திருவல்லிக்கேணி

 

1890 மெட்ராஸ் திருவல்லிக்கேணி

உங்கள் விற்பனையை அதிகரிக்க

உங்கள் விற்பனையை அதிகரிக்க அல்லது விற்பனையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க மற்றும் ‌அதிக வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஒரு அற்புதமான தீர்வு/குறிப்பு!!*💰🍎🍎🍎🍎
7 அல்லது 9 ஆப்பிள் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். (பின்குறிப்பு: ஆப்பிளுக்குள் காணப்படும் விதைகள்)
அவற்றை புனித நீரில் (கோவில் கும்பாபிஷேகத்தில் பெறப்பட்ட நீர் ‌ அல்லது புனித நதியின் நீர் அல்லது மஞ்சள் கலந்த நீர்) நனைக்கவும்.
அவற்றை உலர்த்தி உங்கள் பணப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் மாயாஜாலம் நடப்பதை நேரில் காணுங்கள். காண்பீர்கள். உணருங்கள், உணர்வீர்கள்.
குறிப்பு: பரிகார வகுப்பில் கற்றவை.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...