உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா?
கோத்தபய ராஜபக்சே கேள்வி!
"உயிரிழந்த பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி உள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி போரில் உயிரிழந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முனைகின்றனர், இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல். உயிரிழந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா"என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.