Showing posts with label Tamil god murugan*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*. Show all posts
Showing posts with label Tamil god murugan*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*. Show all posts

Thursday, February 3, 2022

Tamil god murugan*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*

.*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*

ஒவ்வொரு ஆலயத்திலும், சுவாமிகளுக்கு நைவேத்தியம்  
செய்வதற்கு மடப்பள்ளி இருக்கும்.

அதுபோல திருச்செந்தூர், செந்திலாண்டவர் கோயிலில்  
இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு  
முதியவர் ஒருவரை ஆலயத்த்தாரால் அமர்த்தியிருந்தார்கள்.  
அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார்.

நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு, வயோதிகத்தின்  
காரணமாய் சரியான நேரத்திற்கு, இவரால் நைவேத்ய உணவு  
தயாரித்து கொடுக்க முடியவில்லை.  
இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம்  
கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து  
புலம்பி அழுதார்.

ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக்  
கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத்  
திட்டி விட்டார்.

இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து  
விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார்.

அவர் கடலினுள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதலாகாமல்  
அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை  
எதிர் பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார்.  
அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும்  
, “நில்லுங்கள்..” என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு  
திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று  
கொண்டிருந்தான்.அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு  
வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து,  
அச்சிறுவன் முன்பு நின்றார்.

கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு  
அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன்.  
முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி  
அழுதார்.

“இதற்காகவா உயிர் துறப்பார்கள்..” என்று சிறுவன் சிரித்தான்.  
உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில்  
வேலை பார்க்கிறீர்கள்? என்றான். முதியவர், எனக்கு சமையலை  
தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன்  
சொன்னார்.

நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!,  
இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான்  
சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார்  
முதியவர்.

என்ன? திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா?  
பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும்  
கிடையாதே. என்னா ல் இது எப்படி சாத்தியமாகும்? என்றார்.

மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்திய மாகும். மேலும்,  
நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று  
செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான  
ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில்  
வைத்தான்.  
சிறுவனிடம் கை நீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்  
முதியவர்.

இனிமேல் நீங்கள் சமையல் பணி செய்பவர் அல்ல, இன்று முதல்  
வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று  
சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன். முதியவர் ஒன்றும்  
புரியாமல் நின்றார்.

முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ?  
அழகே உருவான செந்தி லாண்டவன் கோலத்துடனே அவன்  
தெரிந்தானே? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து  
மறைந்தானோ?

தெளிச்சி அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப்  
போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தை  
சொல்லு ம்படி விவரமாகக் கேட்டார்.

பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய  
அர்ச்சகர்களை நாடினார்

முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல்  
இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்ப வில்லை. மாறாக  
அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர்.  
கோயிலை விட்டு வெளியேறிய கவி, மனம் குமுறி, தான் இயற்றிய  
நூலை கடலில் வீசிவிட்டார்.

கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச்  
செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக்  
கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.

அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற  
கடற்கரையில் நடந்து வந்த போது, அவரின் கண்களில் இந்நூல்  
காணப் பட்டன. அதை எடுத்து பிரித்து படித்தார் அவர்.  
வியப்படைந்து போனார்.

எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே!,  
என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு  
சென்று அர்ச்சகர்கள் முன் படித்து காட்டினார்.

நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றி மாலை கவிராயர்  
என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும்  
வியந்து போயினர். கவிராயரை தேடி கண்டு அழைத்து வந்தனர்  
அர்ச்சகர்கள்.

உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில்  
எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு,  
தகுந்த மரியாதையையும் செய்தனர்.

பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண  
அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன்  
முருகன். முருகன் மீது அவர் கொண்டிருந்த பக்தி எவ்வாறு ஆயினும்,  
கற்காத ஒருவன் கவியரசனான்.

ஓம் சரவணபவ…  
கந்தா சரணம்…. ஷண்முகா சரணம்….

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...