Showing posts with label கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் வர்கலா. Show all posts
Showing posts with label கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் வர்கலா. Show all posts

Saturday, January 25, 2025

கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் வர்கலா

 வர்கலா - தமிழ்நாட்டில் சிலர் உச்சரிக்கும் பெயர். பாபநாச கடற்கரை என அழைக்கப்பட்டு பின்னாளில் வர்கலா என அழைக்கப்படுகிறது. கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருவது வர்கலா.

பல்வேறுவிதமான கடற்கரைகள் நிறைந்த ஒரு நகராட்சி வர்கலா. மலையுடன் கூடிய கடற்கரை, கருப்பு மணல் நிறைந்த கடற்கரை, முழுக்க முழுக்க பாறைகளால் இருக்கும் கடற்கரை என இருக்கும் ஆகச்சிறந்த சுற்றுலா மையம். நாங்கள் தேர்வு செய்தது பாறை மீது இருக்கும் ரீசார்ட். பாறை என சொன்னாலும் அது ஒரு மலை தான். ஊரே ஒரு மலை மீதுதான் இருக்கிறது. கேரளாவே மலைகளில் நகரம் தான். அதன் ஒரு பகுதி வர்கலா. ஏறத்தாழ ஐநூறு அடி உயரமான மலை முடிந்து உடன் கடல் ஆரம்பிக்கிறது. மலையை வெட்டியது போன்ற தோற்றம். மலையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கி கடற்கரை நோக்கி நகரவேண்டும்
98% வெளிநாட்டு சுற்றுலா மக்களை நம்பியே நகரம் இயங்குகிறது. ஆகையால் இந்த பாறை கடற்கரையில் மட்டும் உணவும் அவர்கள் விரும்பும் அடிப்படையிலே இருக்கும். காஃபி கூட ஸ்டீம் காஃபி தான். பதினைஞ்சு வகை காஃபி இருக்கும். எல்லாமே அவர்கள் ஸ்டைல் தான். ஆனால் எந்த கடையை நீங்கள் தேர்வு செய்தாலும் உணவின் தரம் மிக சிறப்பாக இருக்கும். அமெரிக்கன் பிரேக் பாஸ்ட், இட்டாலியன் லஞ்ச் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன.
கடலை கடலாகவே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது என்பது பெரிய வரம். அது இந்த நகரில் உங்களுக்கு வாய்க்கும் .வானில் பறக்கும் பார கிளைட் தொடங்கி எல்லா நீர் விளையாட்டுகளும் உண்டு. பாரகிளைடுக்கு பணம் மட்டும் போதாது, கடல் காற்றும், நிலத்தின் காற்றும் சரியாக பொறுந்தி போக வேண்டும். எங்களுக்கு நிலத்தில் இருந்து காற்று அடிக்காமல் போய்விட்டது. அதனால் சேவை ரத்து செய்துவிட்டார்கள்.
வர்கலா முழுக்க சுற்றுலா தளம் தான். அதிக ரிசார்ட்ஸ், ஹோம் ஸ்டே என இருக்கும். கிளிஃப் ரிசார்ட் என தேடினால் தான் இந்த வகை அறைகள் கிடைக்கும். வர்கலா கொஞ்சம் காஸ்டிலியான ஊர் நகராட்சி என்றாலும் முழு கட்டுப்பாடும் காவல்துறை வசம் இருக்கிறது. அறைக்குள் எல்லாமே கிடைக்கும்.
எல்லா உணகத்திலும் கனிவாக நம்மை நடத்துவார்கள். நாமாக பில் கேட்கும் வரை பில் வராது. காரனம் அங்கே இருந்து கடலை ரசிக்கும் வாய்ப்பை அவர்கள் வழங்குகிறார்கள்.
வாய்ப்பு இருந்தால் சென்று வாருங்கள்.அறைகள் என்று பார்த்தால் குறைந்த பட்சம் 2500 ல் இருந்து நல்ல அறைகள் கிடைக்கும். கடல் பார்த்து எனில் 12000 மேலேதான். பார்க்கிங் ஒரு பிரச்சினை. ஹோட்டலில் பார்க்கிங் இருக்கிறதா என விசாரித்து செல்லுங்கள்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...