

மகாமகம் தொல் தமிழர்களின் வானியல் திருவிழா!!
அப்படி என்ன மகாமகத்தில்
தமிழர்களின் அறிவியல்
கண்டுபிடிப்பு உள்ளது?
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை கொண்டாடப்படுகிறது,
ஏன் ?
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான்.
வியாழன் கிரகம்
ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம்
12 ஆண்டுகள்.
வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம்
என ஐந்தும் ஒரே
நேர்கோட்டில் வருவது
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது.
அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது
பிரிவு ஆகும்.
சிம்மராசியில் அமைந்துள்ள
இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல்,
வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு மகாமக குளத்தை கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.
என்ன ஒரு விண்ணியல்
அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது சூரியன்
கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறது.
வட இந்தியாவிலும்
குறிப்பாக உத்திரப்பிரதேசம்
பிரயாக்ராஜில், அவர்கள்
கொண்டாடினாலும்
கும்ப நட்சத்திரம்
என்ற தமிழ்ப்பெயர்
இன்னும் மாறாமல் உள்ளது.