Thursday, February 13, 2025

தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள்

 தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள் கொடுக்கும் விபரம் :

1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.
ஒரு மரத்திற்கு 30-50 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.
14 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 30-50 மில்லி மீன் அமிலம் தரைவழி பாசத்துடன் தரவும்.
24 வது நாள்: ஒரு மரத்திற்கு 30 -50 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.
ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml அல்லது 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா வீதம் தரைவழி தரவும்.
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு*
3 மாத பராமரிப்பு:
1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம் புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.
மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.
பாசனம்
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட்டர களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.
மூடாக்கு முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்
இதெல்லாம் முடிந்த அளவு செய்வோம்... நாட்டு தென்னை நடவுக்கு தயாரா இருக்கு எப்ப நடராங்கனு பார்ப்போம். ...
காய் 6 ரூபாயில் இருந்து 17 ரூபாய் தற்போது விலை... விலை ஏற்ற இறக்கம் தான் காய்ப்பு இருந்தால் தான் கட்டுபடியாகும்

INDIAN TRAINE NEW whatsapp SERVICE

 ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை.. ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்...

இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர், ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் அட்டவணை, கோச் நிலை ஆகிய பல தேவைகளுக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது.இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர் என்று பல வசதிகள் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படுகின்றன.
ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது. ரயில் பயணத்தின்போது தேவைப்படும் பல வசதிகளைப் பெறுவதை ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை எளிமையாக மாற்றியுள்ளது.
ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் மனிதத் தலையீடு ஏதும் இல்லை. வாட்ஸ்அப்பில் உள்ள ரயில்வேயின் சாட்பாட் (chatbot) உடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்குத் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
ரயிலோஃபை (Railofy) என்ற சாட்பாட்அடிப்படையில் வாட்ஸ்அப் சேவை செயல்படுகிறது. ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவைக்கு, 98811-93322 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.
எண்ணைச் சேமித்த பிறகு, சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று ஆங்கிலத்தில் ஹாய் சொல்லுங்கள். சற்றுநேரத்தில் ஒரு மெசேஜ் வரும். அதில் PNR நிலை, ரயிலில் உள்ள உணவு, எனது ரயில் எங்கே இருக்கிறது, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு, ரயில் அட்டவணை, ரயில் பயணத்தின் போது கோச் நிலை, புகார் அளித்தல் போன்ற ஆப்ஷன்கள் தெரியும். இதில் தேவையான சேவையைத் தேர்வு செய்து, தொடர்ந்து சாட்பாட் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்.

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

 *சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?*

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்....
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது.....
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....
எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...
சாப்பிடும் முறை...!
---------------------------------
(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
(😎 ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
(12) சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்
(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...
(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
*அமருங்கள் சம்மணமிட்டு*

நிலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஷோரனூர்

 





பச்சை பசுமையின் ஊடாடி பாயும் அழகான ரயில் பாதையும் ரயிலும்!!!

கேரள மாநிலத்தின் நிலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஷோரனூர் செல்லும் இயற்கை எழில் படர்ந்த ரயில் பாதை

ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்

 நாமக்கலில் இருந்து நாளை(வியாழன்) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை - பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். (குறிப்பு : சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களுக்கு டிக்கெட்டுகள் விரைவாக முடிந்துவிடும் என்பதால் நாமக்கல் மக்கள் முன்னதாகவே திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள்).

📌இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்:- (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்)
🚊காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயில்
🚊மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில்
💸இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து பெங்களூரூ செல்ல கட்டண விவரம்:-
◾CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.800/-
◾EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1575/-
◾CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1145/-
◾EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1975/-
💸இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து மதுரை செல்ல கட்டண விவரம்:-
◾CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.720/-
◾EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1420/-
◾CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1010/-
◾EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1770/-

கீரையாக சந்தையில் ஆராக்கீரை

ஆரை...

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர் தாவரம் ..
கீரையாக சந்தையில் ஆராக்கீரை அல்லது ஆழக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு..
தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது..
இலை மருத்துவப் பயனுடையது வெப்பம் நீக்கி தாகம் தணிக்கும் செய்கை உடையது ...
#கீரையை சமைத்துண்ண #தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் ...
@கீரையை சமைத்துண்ண பகுமூத்திரம் போகும் ...
@இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் பனங்கற்கண்டும் கலந்து காலை மாலை பருகிவர பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் ரத்தம் போதல் ஆகியவை தீரும். ..

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12641 கன்னியாகுமரி இருந்து ஹசரத் நிஜாமுதீன்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12641 கன்னியாகுமரி இருந்து ஹசரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை (புதன் மற்றும் வெள்ளி ) ஆகிய தினங்களில் மட்டும் கன்னியாகுமரி:8:30pm

நாகர்கோயில்:8:50pm
திருநெல்வேலி:10:15pm கோவில்பட்டி :11:08pm
சாத்தூர்:11:28pm
விருதுநகர்:12:03Am
மதுரை:12:50Am
திண்டுக்கல்:1:52Am
திருச்சிராப்பள்ளி:3:05Am
விருத்தாசலம்:4:38Am
விழுப்புரம்:5:40Am
மேல்மருவத்தூர்:6:33Am
செங்கல்பட்டு:7:08Am
தாம்பரம்:7:38Am
சென்னை எழும்பூர் :8:25Am
விஜயவாடா:3:30pm
பல்ஹர்ஷா:10:50pm நாக்பூர்:1:55Am
பேதுல்:4:18Am
இடார்சி:6:35Am
போபால்:8:15Am
ஜான்சி:12:05pm
ஆக்ரா கண்டோன்மென்ட்:3:35pm
ஹசரத் நிஜாமுதீன்:6:35pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16811 மயிலாடுதுறை இருந்து சேலம்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16811 மயிலாடுதுறை இருந்து சேலம் தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்                                     மயிலாடுதுறை : 6:00Am                                                                    குத்தலாம் : 6:12Am                              நரசிங்கப்பேட்டை : 6:19Am                   ஆடுதுறை :6:26Am                                  திருவிடைமருதூர் :6:30Am                 திருநாகேஸ்வரன் :6:34Am                      கும்பகோணம் : 6:40Am                       தாரசுராம் : 6:47Am                                      சுவாமிமலை :6:51Am                                  சுந்தராப்பெருமாள் கோவில் 6:56Am     பாபநாசம் :7:02Am                                  பண்டாரவாடை :7:07Am                              அய்யம்பேட்டை :7:11Am                                பசுபதிக்கோவில் :7:15Am                                           திட்டை :7:23Am                                                 தஞ்சாவூர் :7:48Am                                 ஆலங்குடி:8:01Am                                                 பூதலூர் :8:09Am                                          அய்யனார்புறம் :8:15Am                             சோளகம்பட்டி:8:21Am                                 தொண்டைமான்பட்டி :8:28Am                திருவெறும்பூர் :8:34Am                              மஞ்சத்திடல் : 8:41Am                                பொன்மலை :8:47Am                               திருச்சிராப்பள்ளி :9:30Am                    பாலக்கரை :9:46Am                           திருச்சிராப்பள்ளி கோட்டை :9:58Am     முத்தரசநல்லூர்:10:09Am                        ஜீயபுரம்:10:15Am                                     எல்மனூர்:10:20                                      பெருகமணி:10:25Am                              பெட்டவாய்த்தலை:10:32Am               குளித்தலை:10:44Am                        லால்பேட்டை:10:54Am                           மகாதானபுரம்:11:01Am                            சித்தலவாய்:11:06Am                                 மாயனூர்:11:12Am                                     வீரராக்கியம் :11:21Am

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்" பழமொழியின் அர்த்தம்?

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்" பழமொழியின் அர்த்தம்?

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!
வாழை மரங்களுக்கிடையில் 8 அடியும், தென்னை மரங்களுக்கிடையில் 16 அடியும் இடைவெளி இருக்க வேண்டும் என்ற சூத்திரத்தை இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.
ஆனால்…
தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழிக்கு 'தாயின் திறமையை விட மகளின் திறமை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்' - என்ற தவறான பொருள்படவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழியில்...
தாய் - என்ற சொல் வாழையையும்,
பிள்ளை - என்ற சொல் தென்னையையும் குறிக்கும்.

நன்கு வளர்ச்சியடைந்த வாழை மரத்தை 'தாய் மரம்' என்றும், அதனைச்சுற்றி சிறிதாக முளைத்து வளர்பவற்றை 'கன்று' எனவும் அழைப்பது வழமை! அதேபோல் தென்னையின் கன்றுக்கு 'தென்னம்பிள்ளை' என்று பெயர்.

வாழைத் தோப்பில் மரங்களை நடவு செய்யும் போது இரண்டு மரங்களுக்கிடையில் 8 அடி இருக்க வேண்டும் என்பதையும் , தென்னை மரங்களுக்கிடையில் 16 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதையே - இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

'எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை' - என்ற வழக்கும்,

' எட்டடி - வாழை கமுகு
ஈரடி - கரும்பு கத்தரி
பதினாறடி - பிள்ளை' - என்ற வழக்கும் இதைப் போன்ற ஒத்த விதிமுறைகள் குறித்து விவசாயிகளிடை வழங்கப்படுவது ! (கமுகு = பாக்கு மரம்) .
மேற்குறிப்பிட்டபடி இடைவெளி இருந்தால் தான் மரங்களின் வேர்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மரங்கள் வளர்ந்த பின், மரங்களின் இலைகள் பக்கத்து மரங்களின் இலைகளைத் தொடாது, போதுமான சூரிய ஒளி நிலத்தில் விழுந்து சரியான விளைச்சலைத் தரும்!
இதே கருத்தை வேறு விதமாக....
"தென்னைக்கு தேரோட,
வாழைக்கு வண்டியோட,
கரும்புக்கு ஏரோட,
நெல்லுக்கு நண்டோட..." - என்றும் சொல்வதுண்டு!

Food Saving Tips

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...
நம்ம இல்லைனா என்ன ஆகும் என்ற கவலை தேவையற்றது..
யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரவருக்கு கடவுள் நிர்ணயித்த வாழ்க்கையை வாழ்ந்து தான் தீர வேண்டும்...
யாருடைய துன்பத்தையும் யாராலும் தீர்க்க முடியாது...
இதை செய்யாதே, அதை செய்யாதே என்றோ இதை செய் உனக்கு நல்லது என்றோ யாரையும் வற்புறுத்துவதும் தேவையற்றது....
எவருடைய தலைவிதியும் எவர் கையிலும் இல்லை...
எல்லாமே இறைவன் செயல் என்னும் போது நம்மால் எதை தடுக்க முடியும் ? 
நதி போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்...

Human life Important Numbers

*ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..*     

 1. இரத்த அழுத்தம்: 120/80
 2. துடிப்பு: 70 - 100
 3. வெப்பநிலை: 36.8 - 37
 4. சுவாசம்: 12-16
 5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18)
  பெண்கள் ( 11.50 - 16 )
 6. கொலஸ்ட்ரால்: 130 - 200
 7. பொட்டாசியம்: 3.50 - 5
 8. சோடியம்: 135 - 145
 9. ட்ரைகிளிசரைடுகள்: 220
 10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்
 11. சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130)
  பெரியவர்கள்: 70 - 115
 12. இரும்பு: 8-15 மி.கி
 13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000
 14. பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000
 15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 - 6 மில்லியன்..
 16. கால்சியம்: 8.6 - 10.3 mg/dL
 17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள்.
18. வைட்டமின் B12: 200 - 900 pg/ml

*முதல் குறிப்பு:*
உங்களுக்கு உடம்பு சரியில்லையோ அல்லது எந்த நோயும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் கப்பிங் செய்ய வேண்டும்.?
(கப்பிங் என்றால் என்ன?
கப்பிங் என்பது ஒரு பழங்கால குணப்படுத்தும் சிகிச்சையாகும், சிலர் வலியைக்குறைக்க பயன்படுத்துகின்றனர். வழங்குநர் உங்கள் முதுகு, வயிறு, கைகள், கால்கள் அல்லது உங்கள் உடலின் பிற பகுதிகளில் கோப்பைகளை வைக்கிறார்.  கோப்பையின் உள்ளே, ஒரு வெற்றிடம் அல்லது உறிஞ்சும் விசை தோலை மேல்நோக்கி இழுக்கிறது.
கப்பிங் என்பது பாரம்பரிய சீன மற்றும் மத்திய கிழக்கு மருத்துவத்தின் ஒரு வடிவமாகும்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கப்பிங் சிகிச்சையை கடைபிடித்துள்ளனர்.)

*இரண்டாவது குறிப்பு:*
உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படா விட்டாலும் எப்போதும் தண்ணீரைக்குடியுங்கள்... மிகப்பெரிய உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன.
      
*மூன்றாவது உதவிக்குறிப்பு:*
உங்கள் ஆர்வத்தின் உச்சியில் இருக்கும் போது கூட விளையாட்டுகளை விளையாடுங்கள்... கராத்தே, கால்பந்து, நீச்சல் அல்லது நடைபயிற்சி... அல்லது எந்த வகையான  விளையாட்டாக இருந்தாலும், உடலை நன்கு அசைக்க வேண்டும்.

*நான்காவது குறிப்பு*
 உணவை குறைத்து...
அதிகப்படியான உணவு ஆசையை விடுங்கள்... ஏனெனில் அது ஒருபோதும் நல்லதைத்தராது.  உங்களை இழக்காதீர்கள், உண்ணுங்கள் ஆனால் அளவைக்குறைக்கவும்.

*ஐந்தாவது குறிப்பு*
கூடுமானவரை, முற்றிலும்  தேவையில்லாமல் காரைப்பயன்படுத்தாதீர்கள்... நீங்கள் விரும்புவதை (மளிகை சாமான்கள், நீங்கள் வசிக்கும் மிகஅருகில்  ஒருவரைப்பார்ப்பதற்கு செல்வது...) அல்லது எந்த இலக்கையும் அடைய நடந்தே முயற்சிக்கவும்.

*ஆறாவது குறிப்பு*
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கவலையை விடுங்கள்... கவலைதரும் விஷயங்களை கவனிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்...
குழப்பமான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள்... அவை அனைத்தும் ஆரோக்கியத்தைக் குறைத்து ஆன்மாவின் சிறப்பைப்பறிக்கின்றன. 

*ஏழாவது குறிப்பு*
சொல்வது போல்.. பணத்தை வெயிலில் விட்டுவிட்டு.. நீங்கள் நிழலில் உட்காருங்கள்.. உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் மட்டுப்படுத்தாதீர்கள்.. பணம் நம்மை வாழ வைத்தது, அதற்காக நாம் வாழ அல்ல.

*எட்டாவது குறிப்பு*
யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம்.
உங்களால் சாதிக்க முடியாத ஒரு விஷயமும் இல்லை
உங்களால் சொந்தமாக முடியாத எதுவும் இல்லை.
புறக்கணி, மறந்துவிடு;

*ஒன்பதாவது குறிப்பு*
பணிவு.. அப்புறம் பணிவு.. பணம், மதிப்பு, அதிகாரம், செல்வாக்கு.. எல்லாமே ஆணவத்தால் சீரழிந்தவை..
மனத்தாழ்மையே மக்களை அன்புடன் நெருங்க வைக்கிறது.

*பத்தாவது குறிப்பு*
உங்கள் தலைமுடி நரைத்திருந்தால், இது வாழ்க்கையின் முடிவைக்குறிக்காது. ஒரு சிறந்த வாழ்க்கை தொடங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு சான்று. நம்பிக்கையுடன், நினைவுடன் வாழுங்கள், பயணம் செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

*((கடைசி மற்றும் மிக முக்கியமான ஆலோசனை)*
      நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்தையும்  மகிழ்ச்சியையும் பெற்று வாழ விரும்புகிறேன்*
என்றும் அன்புடன் வாழ்வோம்... நன்றி🙏

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 66052புதுச்சேரி இருந்து சென்னை எழும்பூர்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 66052புதுச்சேரி இருந்து சென்னை எழும்பூர் தினசரி உள்ளது புதுச்சேரி :4:00pm
வில்லியனுர்:4:09pm
சின்னபாபுசமுத்திரம்: 4:18pm
வளவனுர்: 4:29pm
விழுப்புரம்: 4:40pm
முண்டியம்பாக்கம்: 4:56pm
விக்கிரவாண்டி :5:06pm
மயிலம்: 5:22pm
திண்டிவனம் :5:34pm
மேல்மருவத்தூர்:5:58pm
மதுராந்தகம் :6:13pm
செங்கல்பட்டு: 6:33pm
சிங்கப்பெருமாள்கோயில் :6:49pm
கூடுவாஞ்சேரி:7:04pm
தாம்பரம் :7:18pm
கிண்டி :7:34pm
மாம்பலம் :7:41pm
சென்னை எழும்பூர் :8:35pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஆம்பல் ஆம்பல்


இது வாய்க்காலில் முதல் பூ இந்த சீசன்ல. இனி பனி குறையும். சிவ ராத்திரி வந்துவிட்டால் குளிர் முற்றிலும் குறையும்.

இது என்ன பூ? ஆம்பல்? நீங்க சொல்லுங்க. மத்யானம் மலர்ந்தது மூடிக் கொள்ளும். இப்போ காலைல இந்த தரிசனம், உச்சிக்கு மொட்டு போல ஆகிறது. இப்படி எல்லாம் செய்யச் சொல்லி யார் சொன்னது? நான் ஒரு ஜீவன் இதை கண்டு களிக்கிறேன் என்பது அதற்கு ஓர்மை உண்டா? நான் இந்த மலரை கவனிப்பது போல என்னை அது கவனிக்குமா? அழுக்கு தண்ணி வாய்க்கால்ல எப்படி இவ்வளவு அழகான வண்ணத்தில்? எங்கிருந்து இந்த செடி வருது? காற்றோடு மிதந்து வெகு தூரத்தில் இருந்து வந்ததா? அல்லது வாய்க்கால் மண்ணுலயே இருக்குதா?  மழைக்காலத்துல மஞ்சள் மான்ஸ்டர் வரும். தூர் வார்ரோம்னு. இந்த வித்துகளையும் சேர்த்து மனசாட்சி இல்லாமல் கரைல அள்ளி கொட்டி விட்டு போகும். அந்த பிசாசு மெஷின்ல தப்பிச்ச விதைதான் இவ்வளவு மலர்ந்து நம்மை சந்தோஷப் படுத்துவது! சரி இவங்க பேரு என்ன? யாரு இந்த பூ?

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...