Showing posts with label 3000 திவ்யபிரபந்த வரலாற்று ஆய்வு பயணம். Show all posts
Showing posts with label 3000 திவ்யபிரபந்த வரலாற்று ஆய்வு பயணம். Show all posts

Thursday, February 15, 2024

3000 திவ்யபிரபந்த வரலாற்று ஆய்வு பயணம்

 அய்யா !!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வட்டம், செட்டியாபத்து கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு பெரியசுவாமி அய்யாவின் வரலாற்று ஆய்வு பயணம்- ஸ்ரீ ஆத்தி சுவாமியின் துணையுடன்......
ஸ்ரீ பெரியசாமி அய்யா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலையின் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் ஆழ்வார் சுவாமி மற்றும் ஆழ்வார் அம்மாள் தம்பதியினருக்கு தெய்வ கடாட்சம் பெற்ற குழந்தையாக தோன்றினார்.
விதியின் காரணமாகவும், தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலும் வீட்டைவிட்டு தனது 8ம் வயதில் வெளியறி கால்போன போக்கில் பயணித்து தனது 16ம் வயதில் (12ம் நூற்றாண்டின் இறுதியாகவோ அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பமாகவோ இருக்கலாம்) அப்போதைய மதுரையில் ஸ்ரீ இராவணீஸ்வரன் வழிபட்ட அன்னை ஸ்ரீ காளியின்(ஸ்ரீ பெரியபிராட்டி) தெய்வீக தரிசனம் காணப்பெற்றார். பின்பு அன்னையின் கரத்தால் 3000 திவ்யபிரபந்தம் ஏட்டினையும், துணையாக ஸ்ரீ ஆத்திசுவாமியையும் பெற்று யாவரும் ஒன்று என்ற கோட்பாட்டுடன் மக்களுக்கு பல அற்புதங்களை செய்துவந்தார். செல்லும் இடம் எல்லாம் ஸ்ரீ சக்தி வழிபாட்டின் மகத்துவத்தினையும், எட்டெழுத்து மந்திரத்தினையும் மக்களுக்கு உபதேசித்து அவர்களுக்கு நற்கதி வழங்கிவந்தார்.
இவர் அன்னைக்காக பொ.ஊ 1258ம் ஆண்டு நவபாஷனத்தில் தெய்வத்திருமேனியினை செய்து அவரை 'ஸ்ரீ அனந்தம்மாள்' என்ற நாமத்தில் வழிபட்டு வந்தார்(இது ஸ்ரீ பெரியசாமியின் அருள்வாக்கில் உதிர்த்த சத்திய வாக்காகும்) என்றும் இந்த வழிபாட்டுத்தலமே கழுகுமலை ஸ்ரீ அனந்தம்மாள் ஆலயம் என்றும் 24 தலைமுறைகளாக இன்றும் இக்கோவிலுக்கு ஆதீன குருக்களாக தொடர்ந்து பணிவிடை செய்துவரும் குடும்பத்தினை சேர்ந்த ஸ்ரீ திருமால்சுவாமி மற்றும் ஸ்ரீ செல்லச்சாமி ஆகியோரின் வரலாற்று புரிதல்கள் ஆகும்.
ஸ்ரீ பெரியசாமி அய்யா ஜோதியான பின்பு அவரை உருவம் இல்லாத விளக்கின் ஒளியாக செட்டியாபத்து ஆலயத்திலும், அய்யாவின் திருமேனியினை மூடுபல்லாக்கில் கழுகுமலை கொண்டு சென்று ஸ்ரீ அனந்தம்மன் ஆலயத்தில் சிவலிங்கம் அமையபெற்ற சமாதியாக வைத்து வழிபட்டுவருகின்றனர்.
1தலைமுறை என்பது 33ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 24ம் தலைமுறை என்பது சுமார் 792 ஆண்டு வரலாற்றினை கொண்டது. எனவே 2024 - 792 = 1232ம் ஆண்டு. கிட்டதட்ட காலகட்டம் பொருத்தமாகின்றது. மேலும் ஸ்ரீ இராமானுஜரின் காலகட்டம் (1017 - 1137) என்பது வரலாற்று பதிவு. எனவே 'ஹரிஓம் ராமானுஜாய' எனும் எட்டெழுத்தும் ஸ்ரீ இராமானுஜரின் காலத்திற்கு பின்பே உபதேசிக்கப்பட்டிருக்கலாம்.
இதில் முக்கியமாக ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவின் ஜோதிமயமானல் நிகழ்வின் காலகட்டம்?
அன்னை ஸ்ரீ காளியால் ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவுக்கு வழங்கப்பட்ட 3000 திவ்யபிரபந்த ஏடு எங்கே? யாரால்? பாதுகாக்கப்படுகிறது. இவ்வேடு பிரதி எடுக்கப்பட்டதா? அந்த ஏட்டில் உள்ள கோட்பாடுகள் மற்றும் இரகசியங்கள் யாவை?
அய்யா ஸ்ரீ பெரியசுவாமி அன்னை ஸ்ரீ காளியினை சந்தித்த பூமி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயற்கை சீற்றத்தால் அழிவுற்ற பட்டினமருதூர் கடற்கரை பகுதி என்றும், இந்த பூமியில்தான் நமது இராவணீஸ்வரன் வழிபட்ட ஸ்ரீ காளி அன்னையின் ஆலயமும் புதையுண்டுள்ளது என்றும் விரைவில் நடைபெறவுள்ள மத்திய தொல்லியல்துறையினரின் சீறிய ஆய்வுகளின் வாயிலாக அய்யா ஸ்ரீ பெரியசாமி உண்மையினை உலகுணர செய்வார் என்றும் அய்யா ஸ்ரீ ஆத்திசுவாமி ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவிற்கு துணையாக வந்தவர் எண்பதுதான் உண்மை என்றும்
அய்யாவின் திரு ஏடானது தூத்துக்குடியில் இருந்து 800கி.மீ வடக்கே உள்ள அருங்காட்சியகம் போன்ற இடத்தில் விபரம் அறியாது வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று சனிக்கிழமை 10.02.2024 அன்று அருள்வாக்கின் வாயிலாக சில விளக்கங்களை ஸ்ரீ ஆத்திசுவாமி அய்யா எனக்கு தந்து அருள்புரிந்தார்.
அடியார்கள் எனது பதிவின் நோக்கங்களை புரிந்து, நமது அய்யா ஸ்ரீ பெரியசுவாமியிடம் தங்களது விளக்கங்களை கேட்டு தெளிவுடனே ஆராய்ந்து அய்யாவின் உண்மை வரலாற்றினையும், 3000 திவ்யபிரபந்த ஏட்டினையும் மீட்டு உலகறிய செய்திட உதவிடவும்.
ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்!!
ஹரி ஓம் ராமானுஜாய நமக!!!

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...