*இறைவனுக்கு*
*நன்றி*
*பசிக்கு உணவை குப்பைத்தொட்டியில் தேடுபவனை கண்டால்.. நமக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*
*ஆடையின்றி நிர்வாணமாக தெருவில் திரியும் மனநலம் பாதித்தவர்களை கண்டால்,*
*நம்மை அறிவோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*
*யாரேனும் நோயுற்றிருக்க கண்டால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*
*மரணமடைந்தவரின் இறுதி ஊர்வலத்தை கண்டால்,நம்மை உயிரோடு வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.*
*மரணமடைந்தவரால் மட்டும்தான் இறைவனுக்கு நன்றி செலுத்த முடியாது.*
*உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் இறைவனை நினைத்து அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவோம்.*
*நன்றி மறவா மனிதாக வாழ்ந்து மறைவோம்..*
*சர்வம் சிவமயம்