Tuesday, December 20, 2022

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

*Pirandai thokku / Pirandai rice mix / Pirandai capsules/Pirandai juice- Available* 

---------------------------------------
இப்பொழுது கேப்சுயூல் வடிவில் கிடைக்கும்* 
---------------------------------------
*#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......*

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...... 

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

நல்ல பதிவுகளை பகிர்வோம்


Saturday, December 10, 2022

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர்

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர் வந்தார்.அவர் ஆயிரம் பொற்காசுகளை ராமகிருஷ்ணரிடம் கொடுத்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாக கேட்டார்.

 இது எனக்குத் தேவையில்லை. ஆனாலும் உன் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அதனால் வாங்கிக் கொள்கிறேன் என்றார் ராமகிருஷ்ணர்.

 பின்னர் இதோ பார் இது எல்லாம் என்னுடையது தானே என்றார்.

 ஆமாம் எல்லாம் உங்களுடையது தான் என்றான் வந்தவன்.

சரி இப்போது நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றார்.

 என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்றான்.

 இந்த நாணயங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் கங்கை நதியில் எறிந்து விட்டு வா என்று சொன்னார்.

 இவனுக்கு அதிர்ச்சி என்ன செய்வது இனிமேல் அது முடியாது என்றும் சொல்ல முடியாது. நாணயங்களை எல்லாம் அவருக்கே கொடுத்தாகிவிட்டது. பேசாமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனான் . அவன் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் என்ன ஆயிற்று இவனுக்கு காசுகளோடு கங்கையில் குதித்து விட்டானா? போகும் போதே ஒரு மாதிரியாகத்தான் போனான். போய் என்ன நடந்தது என்று பார்த்து விட்டு வா என்று அங்கிருந்த ஒருவரை அனுப்பினார்.

 அவர் போனார். பார்த்தார். திரும்பி வந்து விபரத்தைச் சொன்னார். அவன் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நாணயமாக எண்ணி வீசிக் கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவனை தடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

இதைக் கேட்டதும் ராமகிருஷ்ணரை புறப்பட்டு அங்கே போனார். ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் நானும் உன்னை அந்த நாணயங்களை கங்கையில் வீசி எறியச் சொன்னேனே . நீ ஏன் எண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

 அவனோ பழக்கம்தான் காரணம். நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சேமித்து வைத்தேன். இன்றைக்கு என்னிடம் நிறைய இருக்கிறது .உங்களுக்கு ஆயிரம் நாணயங்களை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று சொன்னான்.

 இப்போது ராமகிருஷ்ணன் சொன்னார். ஒரே நேரத்திலே உன்னிடம் இருக்கின்ற அனைத்து நாணயங்களையும் சம்பாதித்திருக்கிறாய் என்றால் நீ எண்ணுவது பொருத்தமாக இருக்கும்.

எல்லாத்தையும் இழக்கும்போது எண்ணிக்கொண்டு இழப்பது என்பது சரியான மூடத்தனம் ஒரே தடவையாக எல்லாத்தையும் தூக்கி எறிந்து விடு என்று சொன்னார்.

 இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு கொடுக்க விரும்பினால் அல்லது கொடுத்தால் அதை மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு அது என்னுடையது அல்ல என்கிற எண்ணம் நம் மனதில் பதிய வேண்டும். கொடுத்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த நாணயத்தை எண்ணி எண்ணி ஒவ்வொன்றாக ஆற்றில் போடுபவன் கதிதான் நமக்கும்.


Friday, December 9, 2022

வேதம் - ஆகமம் - திருமுறை இவற்றின் சிறப்பு பற்றி கூற முடியுமா?*

*வேதம் - ஆகமம் - திருமுறை இவற்றின் சிறப்பு பற்றி கூற முடியுமா?* 

என்று சிவனடியார் அடியேனிடம் கேட்டார். அதற்கு பதில் உங்கள் முன்னால்..

*வேதம் பற்றி குறிப்பு*

வேதம் - சிவாகமம் - திருமுறை இவை மூன்றும் சிவபெருமானால் அருளபட்டவை.

1. ரிக் - யஜூர் - சாமம் - அதர்வணம் என நான்கும் வேதத்தில் இருக்கிறது.

2. வேதம் அறிவு நூல்.

3 தெய்வீகமான மந்திரங்களை தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருக்கிறது.

4. வேதம் குரு மூலம் வழியில் மட்டுமே கற்க முடியும். இதற்கு குரு பரம்பரை என்று அழைப்பர்.

5. வேதத்தில் மன்னன் - ரிஷி - இந்திரன் - அக்னி - பிரம்மனின் படைப்பு போன்ற செய்திகள் உள்ளன.

6. யாகங்கள் பற்றி நிறைய விசயங்கள் உள்ளடக்கியுள்ளது.

7. தானத்தின் சிறப்புகள் பலவற்றை கூறுகிறது.

8. ருத்ரம் , சூக்தங்கள், இதர தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்கள் நிறைய உள்ளன.

9. அமாவாசை , பௌர்ணமி பூஜைகள் பிதுர் தர்ப்பணம் போன்ற செய்திகள் வேதத்தில் உள்ளடக்கியுள்ளது.

10. வேதத்தை இசையாக பாடுவதற்கு சாம காணத்தில் காணலாம்.

11. வேதத்திற்கும் தமிழைப் போல் இலக்கணம் உண்டு.

12. அனுஷ்டானம் , கிரியை பூஜைகளும் என நிறைய விசயங்கள் உள்ளன.

13. வேதத்திற்கு ஒலியே ஆற்றல் தரும். 

14. வேதங்களை பிராமணர்கள் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.

15. 63 நாயன்மார்களில்

அப்பூதியார் - உருத்திர பசுபதியார் - கணநாதர் - குங்குலியக்கலயர் - சண்டேசுவரர் - சிறப்புலியார் - சோமாசி மாறர் - சம்பந்தர் - என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இவர்கள் அனைவரும் பிராமணர் அதாவது அந்தணர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் .

வேதத்தை பிரதானமாக கொண்டு ஓதி வழிபாடு செய்பவர்கள் எகா நிறைய உள்ளன.

16. திருமூலர் சித்தர் வேதச்சிறப்பு என்று பாடியுள்ளார்.

17. திருமுறைகளில் வேதம் பற்றி செய்திகள் குறிக்கப்படுகின்றன.

18. 18புராணங்களிலும் , இதிகாசங்களிலும் வேதங்கள் பற்றிய செய்திகள் நிறைய சொல்லியுள்ளது. 

இன்னும் வேதங்கள் பற்றிய நிறைய தகவல்கள் சொல்லிக் கொண்டே போகலாம் ... 

ஆகவே வேதம் இறைவன் அருளியது இதற்கு எழுதாக் கிளவி என்று அழைப்பர்.

திருப்பதி பயணம் திருப்தியாக இருக்க

திருப்பதி பயணம் திருப்தியாக இருக்க இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ஃபிரண்ட்ஸ். 

திருப்பதிக்குப் போகவேண்டும் என்ற ஆசை, நம் மனதில் எழும்போதெல்லாம், 'இடங்கள் தெரிந்த யாராவது நமக்குத் துணைக்கு வந்தால், நன்றாக இருக்குமே' என்று தோன்றும். 

இல்லாவிட்டால், `பாஷை தெரியாத ஊரில் நாம் எங்கு, எதை விசாரிப்பது' என்ற வழக்கமான குழப்பம் வருவது இயற்கை.

அந்தக் கவலை இனி வேண்டாம்.

திருமலைக்குச் செல்லும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக... 

சி.ஆர்.ஓ ஆபீஸ் 

திருமலையில் (மேல்திருப்பதி) பஸ்-ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் சென்றால், 200 அடி தொலைவில் இருப்பதுதான் சி.ஆர்.ஓ ஆபீஸ். 

இந்த அலுவலகம் இங்குள்ள முக்கியமான மையம் என்று சொல்லலாம். 

இந்த அலுவலகத்தில் திருமலை பற்றிய சகல விவரங்களையும் நீங்கள் கேட்டு அறியலாம். 

ஆன்லைனில், அறைகள் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இங்குதான் அறைகள் ஒதுக்கப்படும்.

சி.ஆர்.ஓ ஆபீஸ் பின்புறம் எஸ்.எஸ்.டி எனப்படும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட தரிசனத்துக்கு உங்களின் ஆதார் கார்டை காண்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம். 

லாக்கர் அறை !!

நீங்கள் கொண்டுவரும் பை, ஃப்ளாஸ்க், செல்போன் முதலிய பொருள்களைப் பத்திரமாக வைத்துப் பூட்டிவிட்டுச் செல்வதற்கு லாக்கர் அறைகள் உண்டு.

அவற்றை விசாரணை மையத்தில் தொடர்புகொண்டு அங்குச் சென்று வைத்துக்கொள்ளலாம். 

உங்கள் பெயர், தொலைபேசி எண், ஆதார் அட்டையைக் காண்பித்தால் உங்களுக்கு கோத்ரேஜ் பூட்டுடன் ஒரு லாக்கர் தருவார்கள். 

அதில் உங்கள் உடைமைகளை வைத்துவிட்டு திருமலையில் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம்.

மீண்டும் உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பூட்டையும், சாவியையும் ஒப்படைத்து விட வேண்டும். 

செல்போனுக்குத் தடை !!

சுவாமி தரிசனம் செய்யப் போகும்போது, செல்போனை `சைலன்ட் மோடி'ல் போட்டுவிட்டு லாக்கரில் வைத்து விட்டுச்செல்லுங்கள்.

சுவாமி தரிசனம் செய்யும்போது செல்போன் உங்களிடம் இருந்தால், அதைப் பாதுகாவலர்கள் கைப்பற்றி, செல்போன் பாதுகாக்கும் இடத்துக்கு அனுப்பிவிடுவார்கள். பிறகு, அதை வாங்குவதற்கு நீங்கள் அலைய வேண்டியிருக்கும். 

கல்யாண கட்டா!!

`கல்யாண கட்டா' முடிக்காணிக்கை செலுத்தும் இடம். 

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் செல்பவர்களில் பலரும் மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம்.

`கல்யாணகட்டா' என்னும் 5 அடுக்கு மாடிக்கட்டடம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே மிகப்பெரிய அளவில் உள்ளது.

முடிக்காணிக்கையை இந்த இடத்தில்தான் செலுத்தவேண்டும் என்பதில்லை. 

பக்தர்கள் தங்கும் வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், மாதவ நிலையம், கருடாத்திரி கெஸ்ட் ஹவுஸுக்குப் பின்புறம் உள்ள பஸ் டெர்மினஸ் எனப் பல இடங்களில் முடியைக் காணிக்கையாகச் செலுத்தலாம். 

இதற்கு எந்தவிதக் கட்டணமோ, பணமோ எவருக்கும் தரத் தேவையில்லை.

சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு !!

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி எனும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் இந்த நிலையத்தைத்தான் வந்தடையும். 

இங்குள்ள முன்பதிவு அலுவலகத்தில் நாம் புறப்படும் வசதிக்கு ஏற்ப முன்பதிவும் செய்து கொள்ளலாம். 

இந்தப் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் திருமலையில் இருக்கும் பாபநாச தீர்த்தம், ஆகாஷ் கங்கா, ஜபாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும். 
பேருந்தில் ஏறும்போதே ரிட்டர்ன் டிக்கெட்டும் சேர்த்தே எடுத்துக்கொள்ளலாம்.

புஷ்கரணி, கோயில் திருக்குளம்!!

முடிக் காணிக்கை செய்ததும் அங்குள்ள குளியலறைகளில் நீங்கள் குளித்திருந்தாலும், சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு அருகில் இருக்கும் திருக்குளத்தில் ஒருமுறை நீராடி விட்டோ, தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டோ சுவாமி தரிசனம் செய்வது நல்லது.

வராகசுவாமி கோயில்!!

திருக்குளத்தில் நீராடி முடித்ததும் அதன் கரையிலேயே இருக்கும் வராகசாமி கோயிலில் சுவாமியை வணங்க வேண்டும்.

அதன் பின்னரே வேங்கடேசப் பெருமாளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஏனென்றால், திருமலையில் முதலில் எழுந்தருளியவர் வராக சுவாமிதான். 

அதன் பின்னர்தான் சீனிவாசன் எனும் வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டார். அதனால் முதல் வணக்கம் வராக சுவாமிக்குத்தான்.

வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் - 2 

300 ரூபாய் சிறப்புத் தரிசனம் தவிர, சர்வதரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதை வழியாக நடந்து வந்து தரிசிப்பவர்கள்) நேர ஒதுக்கீட்டுத் தரிசனம் என அனைத்து வகையினரும் இந்த வழியாகத்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த இடத்தை அடைய நாம் பெரிதாகச் சிரமப்படத்தேவையில்லை. 

மலை முழுவதும் வலம் வரும் `தர்மரதம்' என்னும் ஆரஞ்சு வண்ணப் பேருந்தில் நீங்கள் பயணித்தால், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் என்று சொல்லியே இறக்கி விடுவார்கள். 

பகல், இரவு பாராமல் இந்த பேருந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புறப்படும்.     

ஆனந்த நிலையம்!!

வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஆனந்த நிலையம். இங்குதான், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம் எனப் பல்வகையான வழிமுறைகளில் வரும் பக்தர்கள் ஒரு சேர தரிசனம் செய்வார்கள்.

தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னதானக்கூடம் !!

சுவாமி தரிசனம் முடிந்ததும், கோயிலுக்கு இடதுபுறம் இருக்கிறது இந்த அன்னதானக்கூடம்.

இங்கு ஒரே சமயத்தில் 4 ஆயிரம்பேர் சாப்பிடும் விதமாக 1000 பேருக்கு ஒரு கூடம் என 4 கூடங்கள் உள்ளன. 

இங்குச் சுடச்சுட தலைவாழை இலையில் வேண்டுமளவு உணவு வழங்கப்படுகிறது.

பெருமாள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் பலரும் இங்கு வந்து சாப்பிட்டுச்செல்வார்கள்.

சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், துவையல் ஆகியவற்றுடன் உணவு வழங்கப்படும்.

லட்டு கவுன்டர்!!

அன்னதானக் கூடத்திலிருந்து கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றால் வலதுபுறம் லட்டுகள் வழங்கும் மிகப்பெரிய கட்டடம் உள்ளது

இங்கு 50-க்கும் மேற்பட்ட கவுன்டர்களில் லட்டுகள் வழங்கப்படும். 

தரிசனத்துக்கு முன்பாகவே லட்டு டோக்கன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

அந்த லட்டு டோக்கனைக் காண்பித்து நீங்கள் இங்கு உங்களுக்கு உரிய லட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஓம் நமோ வேங்கடேசாய நமஹ!!

பருவத மலையின் சிறப்பம்சம்

⛩️⛩️பருவத மலை⛩️⛩️⛩️

🪔🪔பருவத மலையின் சிறப்பம்சம்
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை ஆகும்.

இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

வரலாற்று பதிவு
இந்த பருவத மலையின் அடிவாரத்திலேயே கரிகாற் சோழனின் வீர வரலாறு தொடங்குகிறது.கரிகாற் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கியது இந்தக் காடுகளில்தான்.அந்த யானைகளை கொண்டு ஓர் அமாவாசை இரவில் கடலில் ஒர் நீர் மூழ்கி கப்பலைப்போல் மிதக்க வைத்து சென்று கடற் கொள்ளையர்களை நிர்மூலமாக்கினார்..இதை படிக்கும்போதே கரிகாற் சோழன் யானைகளை எப்படிப் பழக்கினார் என்பது புரியும்.

கோட்டை
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

சிறப்புகள்
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.
பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து வசதி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
Distance between Parvathamalai and Tiruvannamalai is 30 kms or 18.6 miles or 16.2 nautical miles

Origin Parvathamalai, Tamil Nadu, India

Destination : Tiruvannamalai
Driving Distance : 30 kms or 18.6 miles or 16.2 nautical miles
Driving Time : 36 minutes
Bus details
1.Bus no 148 – Chennai koyambedu to polur
2. Polur to chengam
Stopping : THEN MATHI MANGALAM 🤲⛩️⛩️⛩️ நற்பவி 

Monday, November 28, 2022

காசி

 காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.

வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.

அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?

468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.

அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்...

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய.

ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல்

🪷ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல் 

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள்.

குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். 

அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள்.

கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! 

தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


தர்ப்பை புல் என்றவுடனே


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .அதன் இன்னொரு பக்கம்  பார்ப்போம்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.

இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.

இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு “ஹிமகஷாயம்” என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்


மிதக்கும்_மாட்டு_வண்டியில் #முகமில்லா_மனிதர்

சிவமயம் சிவாய நம 

#மிதக்கும்_மாட்டு_வண்டியில் #முகமில்லா_மனிதர்!

  தென்னிந்திய பகுதியில், கர்நாடக மாநிலமாக தற்போது உள்ள இடத்தில், ஒரு பக்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அழகான சம்பவம் அந்த பக்தருக்கு வயதுமுதிர்ந்த தாய் இருந்தார். அவரது தாய் தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். 

  அவர் தனக்கென்று எதையும் கேட்டதில்லை முதல்முறையாக தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

 “இந்த ஒரு விஷயத்தை எனக்கு தயவுசெய்து நிறைவேற்றிக்கொடு!” என்று அவர் வேண்டினார் தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட அம்மகன் உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொன்னார் தனது பொருள் வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்று, தனது தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார் இந்தியாவின் தென் பகுதியிலிருந்து காசிக்கு நடந்தே செல்ல இருவரும் முற்பட்டார்கள் அது ஒரு நீண்ட பயணம்.

  பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயதுமுதிர்ந்த தாய் பலகீனமடைந்தார் அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை ஆகவே, அந்த பக்தர் தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார் தனது முழுபலமும் தீரும் நிலையிலும் கூட நடந்து கொண்டிருந்த அவரிடம், தனது தாயின் ஆசையை என்ன விலை கொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது.

  அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையை கேட்டார் அந்தஅத்துவான காட்டிற்குள் அப்படியொரு மணியோசை கேட்பது ஒரு இசைவான விஷயம்தானே! யார் மாட்டுவண்டியில் வருவது என்று அவர் பார்த்தபோது, ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி எனத் தெரிந்தது பொதுவாக ஒற்றை மாடு பூட்டப்படும் வண்டிகள் உள்ளூர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக் கூடியவை தொலைதூரப் பயணத்திற்கு எப்போதும் இரட்டை மாடுகள் பூட்டப்படும் வண்டிகள்தான்!

  ஆனால், அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்து கொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்று கொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது. “உள்ளே ஏறுங்கள்” என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர் ஏறிக் கொண்டனர் தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன் வண்டி நகரத் துவங்கியது தனதுதாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விஷயத்தைக் கவனித்தார்.

  வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார் பொதுவாக, மாட்டு வண்டிகளில் மேடு பள்ளங்களில் போகும்போது அதன் அதிர்வுகளை தாங்குவதற்கான ஏதும் இருக்காது ஆனால், இந்த வண்டியோ மிதப்பதுபோல இருந்தது வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை பின் அவர் காளையினைப் பார்த்தார் அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்று கொண்டிருந்தது.

பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது அது, “வெறுமையான முகம்.” அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தார் அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்.

  பொருள்நிலையுடன் யாரெல்லாம் ஆழமான அடையாளம் கொண்டு அதன் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளார்களோ அவர்கள்தான் “காலம், இடம்” என்ற தன்மைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

  அனைத்தும் துறந்து இறைவனை நினைத்து செல்பவர்களை அவரே எதிர் கொண்டு அழைத்து செல்கிறார்.

திருச்சிற்றம்பலம் 

சிவ ஓம் நமசிவாய

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்..

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்..

விரதத்தின் போது வண்ண உடை ஏன் உடுத்தக் கூடாது தெரியுமா. வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.

மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள்.  அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வர ரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம்,  பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.

படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என் றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக் காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.

அதோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அழிக்காவிட் டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.

எழரை சனி..
***************
சிருஷ்டி என்பது மனிதர்களின் சந்தோசத் திற்கும், ஆனந்த அமைதிக்கும் தான் சிருஷ்டி செயல்படுகிறது. மானிடர்களின் கர்ம வினை பலன்களை தரத்தானே நீ உள்ளாய். சரி என கூறி, ஐயப்பன் பல்வே று தண்டனைகள் அடங்கிய விதிகள் அதா வது விரதத்தை கடைப்பிடிப்பது குறித்து வாக்கு கொடுத்தார்.

சனீஸ்வரர் தன் ஏழரை ஆண்டுகால பிடியி ல் ஒருவனுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்குகிறார் என்பதையும், அதற்கேற்றா ர் போல் விரதத்தை அமைத்து,  தீய பார்வையிலிருந்து தன் பக்தர்களை காக்க ஐயப்பன் விரத முறையை அமைத்தார். 

ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும் ஒரு வருக்கு சனீஸ்வரரின் கொடும் பார்வையி லிருந்து காத்தருள கேட்டுக் கொண்டார்.

​ஒரு மண்டலத்தில் ஏழரை ஆண்டு கால தண்டனை

ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒருவரு க்கு, ஏழரை ஆண்டு கால தண்டனையை எப்படி கொடுப்பது என சனி பகவான் கேட்டார்.

சனீஸ்வரரின் ஏழரை ஆண்டு தண்டனை எப்படி ஒரு மண்டலத்தில் பொருந்தும் என்பதை ஐயப்பன் விளக்கினார்.

சனீஸ்வரர்: விதவிதமான உணவு உண்டு, பழ ரசங்களை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப் பேன். அதனால் அவர்கள் பட்டினியிலிரு mnந்து தப்பிக்கவே முடியாது என்றார்.

ஐயப்பன்: தன் பக்தர்கள் எளிமையான உணவை ஒரு பொழுது உண்பார்கள்.

சனீஸ்வரர்: மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன் என்றார்.

ஐயப்பன்:  என் பக்தர்கள் கட்டிலில் உறங்காமல், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள் என்றார்.

சனீஸ்வரர்:   முக்கிய விஷயம் என்ன வென்றால், என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள்.

ஐயப்பன்: கடுமையான பிரம்மச்சரியத் தைக் கடைப்பிடித்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தை உச்சரி த்து, காடு, மேடுகளை கடந்து என் தரிசன த்திற்கு வருவார்கள்.  அப்படி வரும் பக்தர் களை நீ ஒரு கணம் கூட பிடிக்கக் கூடாது, அவர்களுக்கு சுக சௌக்கியங்களைத் தான் அளிக்க வேண்டும் இது என் அன்பு வேண்டுகோளும், கட்டளையும் ஆகும் என்றார்.

​கருப்பு உடை :
****************
சனீஸ்வரர்: கட்டிக் கொள்ள உடை இல்லா மல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னை தானே கண்டுகொள்ள முடியாத படி உருவ ம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன்.

ஐயப்பன்: உனக்கு பிடித்த வண்ணம் கருப்பு தானே. விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து, காலணி கூட அணியா மல், முடி கூட திருத்திக் கொள்ளாமல், மணி மாலை அணிந்து, சுக சௌக்கியங் களில் ஒதுங்கி நிற்பார்கள்.  அனைவரா லும் சுவாமி என அழைக்கப்படுவார்கள். நீங்கள் சொன்ன கஷ்டங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு ஏற்று அதை விரத மாக கடைப்பிடிப்பார்கள்.

​விரதம் முக்கியம்:
*********************
சனீஸ்வரர்: மனம் மிகு பன்னீரில் குளித்த வர்களைக் கூட, நான் வெறும் தண்ணீரு க்கே அல்லாட வைப்பேன்.

ஐயப்பன்: உதயத்திலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் என் பக்தர்கள் குளிப்ப தை பக்தி சிரத்தையுடன் ஏற்பார்கள்.

தர்ம சாஸ்தாவின் இந்த கட்டளையை சிரமேற்கொண்டு சனிபகவான் இன்றும் ஐயப்ப பக்தர்கள் கொடும் பார்வை செலுத் தாமல் நன்மையை செய்து வருகின்றார்.

இப்படி சனிபகவானை ஐயப்பன் சம்மதிக் க வைத்து, தன் பக்தர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விரதமாக வைத்துள் ளார். இதன் காரணமாக தான் கருப்பு உடை உடுத்தி ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர்.

நாமும் இந்த சரியான காரணத்தை உணர் ந்து ஐயப்ப விரதத்தை சரியாக பின்பற்றி சனிப்பார்வையிலிருந்து தப்பித்து நன்மையை பெற்று மகிழுங்கள்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஸ்ரீ ஹரிஹர சுதன் அய்யன் ஐயப்பன் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள், சகல சௌபாக்கியம் வாழ்வில் வளமும், நலமும் பெறுவோம்...

ஓம் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா.
.

Saturday, November 26, 2022

கன்னிகாதானம்" என்றால் என்ன?

"கன்னிகாதானம்" என்றால் என்ன?

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. 

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகா தானத்தைதான்! 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்! 

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், 
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது. 

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது. 

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். 

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்! 

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...

Saturday, November 12, 2022

உணர்ச்சி’ உள்ள மனிதர்களையும், அன்பான மனிதர்களையும்,

 நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும் 

புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்தது....


சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. 

எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.

வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!


மற்றவர் தவறுகளை கவனித்துக்

கொண்டே இருப்பவர்கள்.....!!

தன் தவறுகளை வளர்த்துக்

கொண்டே இருக்கிறார்கள்......!!

.வாழ்க்கையில் வெற்றி அடைய *ஆயிரம் வழிகள் உண்டு..,


ஆனால் .., அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் உண்டு..!

யாரைப் போல இல்லாமல் ...

இது தான் நான் ... என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்...

ஒரு வகையில் சாதனை தான் ...

சொன்னபடி செய்ய ஆள் இல்லாத உலகில், 

கண்டபடி சொல்ல ஆள் இருக்கிறார்கள்.


அறிவாளியை விலை

கொடுத்து வாங்கி விடலாம்.


உணர்ச்சி’ உள்ள 

 மனிதர்களையும்,

 அன்பான மனிதர்களையும்,


விலை கொடுத்து 

வாங்க முடியாது....



சோகங்களே இங்கு அதிகம்

 அடுத்தவரிடம் சொல்ல

கூடாதெனும் சோகங்களை விட


அடுத்தவரிடம் 

சொல்ல முடியாத

சோகங்களே இங்கு அதிகம்...

பணத்தோடு இருக்கும் வரை தான்

 மரத்தோடு இருக்கும் வரை தான் இலைக்கு மதிப்பு......


பணத்தோடு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.........!!


வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு

 வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு விட்டுக் கொடுத்ததை தவிர. எல்லாம் கிடைக்கும்.

தட்டிப் பறித்தவருக்கு தட்டிப் பறித்ததை தவிர. எதுவும் கிடைக்காது இது தான் இறைவன் நியதி.

மகிழ்வை தருபவரல்ல இறைவன்கவலைகளை தாங்க மன தைரியம் தருபவரே இறைவன்.

நன்றி மறந்தவரை விட்டு விடுங்கள், நமக்கு நலம் பயப்பவரை வணங்குங்கள். தீய எண்ணம் உடையவருக்கு, எந்த தெய்வசக்தியும் துணை நிற்காது.

இறைவா நீயே கதி என்றிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் துணையாக இருப்பார் இறைவன்.

Thursday, November 10, 2022

வழிபடும் லிங்கங்கள்

 வழிபடும் லிங்கங்கள்

பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்

சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்

ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்

சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்

ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்

வருணன் ஸ்படிக லிங்கம்

சித்தர்கள் மானச லிங்கம்

புதன் சங்கு லிங்கம்

கணேசர் கோதுமை லிங்கம்

கருடர் அன்ன லிங்கம்

அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்

காமதேவர் வெல்லத்திலான லிங்கம்

விபீஷணன் குப்பையிலிருக்கு மண்ணிலான லிங்கம்

போகர் மரகத லிங்கம்

இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்

ராகு பெருங்காயத்திலான லிங்கம்

நாரதர் ஆகாச லிங்கம்

செவ்வாய் வெண்னையிலான லிங்கம்

நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்

பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்

ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்

டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்

மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்

பரசுராமர் சோளத்திலான லிங்கம்

பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்

பறவைகள் ஆகாச லிங்கம்

வாசுகி விஷ லிங்கம்

கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்

குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

தினம் ஒர் சித்தர் வரலாறு . பெயர்: காக புஜண்டர்

 தினம் ஒர் சித்தர் வரலாறு


 பெயர்: காக புஜண்டர்


வரலாறு சுருக்கம்:

பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார். அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள். தியானச் செய்யுள்: காலச்சக்கரம் மேல்

ஞானச்சக்கரம் ஏந்திய

மகா ஞானியே

யுகங்களைக் கணங்களாக்கி

கவனித்திடும் காக்கை ஸ்வாமியே

மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது

கால் பற்றிய எம்மைக் காப்பாய்

காக புஜண்ட சுவாமியே.

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் : 10-11-2022

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :

10-11-2022

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, ஐப்பசி 24 

நாள் - மேல் நோக்கு நாள்

பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை   - Nov 09 05:17 PM – Nov 10 06:33 PM

கிருஷ்ண பக்ஷ திருதியை   - Nov 10 06:33 PM – Nov 11 08:17 PM

நட்சத்திரம்

ரோஹிணி - Nov 10 03:09 AM – Nov 11 05:08 AM

மிருகசீரிடம் - Nov 11 05:08 AM – Nov 12 07:33 AM

கரணம்

கரசை - Nov 10 05:51 AM – Nov 10 06:33 PM

வனசை - Nov 10 06:33 PM – Nov 11 07:22 AM

யோகம்

பரீகம் - Nov 09 09:17 PM – Nov 10 09:12 PM

சிவம் - Nov 10 09:12 PM – Nov 11 09:29 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:13 AM

சூரியஸ்தமம் - 5:53 PM

சந்திரௌதயம் - Nov 10 7:29 PM

சந்திராஸ்தமனம் - Nov 11 8:26 AM

அசுபமான காலம்

இராகு - 1:31 PM – 2:58 PM

எமகண்டம் - 6:13 AM – 7:41 AM

குளிகை - 9:08 AM – 10:36 AM

துரமுஹுர்த்தம் - 10:07 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM

தியாஜ்யம் - 11:18 AM – 01:03 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:40 AM – 12:27 PM

அமிர்த காலம் - 01:40 AM – 03:24 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto - 05:08 AM

மிருத்யு

வாரசூலை

சூலம் - South

பரிகாரம் - தைலம்

__________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00   -   குரு   -  சுபம்

07:00 - 08:00   -   செவ் -  அசுபம்

08:00 - 09:00   -   சூரி   -  அசுபம்

09:00 - 10:00   -   சுக்    -  சுபம்

10:00 - 11:00   -   புத    -  சுபம்

11:00 - 12:00   -   சந்     -  சுபம்

                                                                                                                                                                                                            பிற்பகல்

                                                                                                                                                                                                            12:00 - 01:00   -   சனி    -  அசுபம்

01:00 - 02:00   -   குரு    -  சுபம்

02:00 - 03:00   -   செவ்   - அசுபம்        

மாலை 

03:00 - 04:00  -   சூரி   -   அசுபம்

04:00 - 05:00  -   சுக்     -  சுபம்

05:00 - 06:00  -   புத     -   சுபம்

06:00 - 07:00  -   சந்     -   சுபம்        

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.__________

ராசிபலன்

10-11-2022

மேஷம்

நவம்பர் 10, 2022

பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரணி : ஆர்வம் உண்டாகும். 

கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------ரிஷபம்

நவம்பர் 10, 2022

சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும். 

ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------மிதுனம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு  

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------கடகம்

நவம்பர் 10, 2022

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------

சிம்மம்

நவம்பர் 10, 2022

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

மகம் : ஆர்வம் உண்டாகும்.

பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

கன்னி

நவம்பர் 10, 2022

வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் அமையும். 

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------துலாம்

நவம்பர் 10, 2022

எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : விவேகத்துடன் செயல்படவும். 

சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும். 

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும். 

---------------------------------------

விருச்சிகம்

நவம்பர் 10, 2022

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

விசாகம் : முடிவு கிடைக்கும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும். 

கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------

தனுசு

நவம்பர் 10, 2022

நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

பூராடம் : ஆதாயகரமான நாள்.

உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------மகரம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------கும்பம்

நவம்பர் 10, 2022

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

சதயம் : பொறுப்புகள் கிடைக்கும். 

பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------

மீனம்

நவம்பர் 10, 2022

உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.ரேவதி : இழுபறிகள் குறையும்.


கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 உலகில் மூன்று பொருட்கள் உள்ளன. 

1) இறைவன் 

2) உயிர்கள் 

3) மாயை 

பிரபஞ்சம் முழுவதற்கும் இருப்பது ஒரே இறைவன் தான்.

உயிர்களில் 84 லட்சம் வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எண்ண முடியாத அளவு உயிர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த 84 லட்சம் உயிர் வகைகளை ஏழு பெரும் பிரிவுகளாகவும்  பிரிக்கலாம்.

1 தேவர் 

2) மனிதர் 

3) மிருகங்கள்

4) பறவைகள்

5) ஊர்வன 

6) நீர் வாழ்வன

 7)தாவரங்கள் 

மாயை என்னும் பொருள் ஒன்றுதான்.

 அதை இறைவன், தான் விரும்பும் வண்ணம் ஆக்க முடியும்.  அண்ட சராசரங்களில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே பொருளான மாயையில் இருந்து இறைவன் உருவாக்கியது தான். இறைவன், உயிர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவ நிலைக்கு ஏற்ப உடலைத் தருகிறான். அந்த உடலை வைத்து தன் ஆயுட்காலத்தில் அவை வினையாற்றுகின்றன. அதனால் அவை அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து முன்னேறுகின்றன. அவைகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவற்றிற்கு உடலை இறைவன் வழங்குகிறான். ஒவ்வொரு பிறவியிலும் அனுபவம் பெற்று முன்னேறி இறுதியில்  இறைவனுடன் ஒன்றியிருக்கின்றன. இவ்வாறு உயிர்கள் முன்னேறி இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் ஆக இருக்கிறது.  ஆனால், உயிர்கள் தன் புலன் உணர்வால் கிடைக்கும் இன்பங்களில் மயங்கி அதிலேயே மூழ்கி முன்னேற்ற பாதையில் செல்லாமல் பின்தங்கி விடுகின்றன. அவைகள் இறைவடி சேரும்   வரை அவற்றிற்கு இறைவன் மீண்டும் பிறவிகளையும் அந்தந்தப் பிறவிக்கு ஏற்ப உடலையும் வழங்குகிறான். மனிதர்கள்  இந்தப் பிறவிச்சுழல் என்ற கடலில் இருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்கிறார்கள்.அவர்கள் கடைத்தேறுவதற்கான  வழியைத்தான் திருவள்ளுவர் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்தாவது பாடலில் கூறுகிறார்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

 நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை நினைந்து போற்றிக் கொண்டு இருப்பவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பார்கள்;

மற்றவர்கள் கடக்க முடியாது.


அன்புச் சொந்தங்களே,


இந்தக் கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகும்.

உலகில் எந்த சமயத்திலும் சொல்லப்படாதது.

சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்ற ஒரு பழமையான சிவாலயம் இருக்கிறது.அங்கே, வருடத்தில் 365 நாட்களும் சைவ அதாவது சிவ வழிபாடு பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது.நான் சென்னையில் இருக்கும் போது மன அமைதிக்காக அவ்வப்போது இந்த சொற்பொழிவுகளைக்  கேட்கப் போவது உண்டு.அவ்வாறு கேட்கும்போது கிடைத்த ஞானத்தை வைத்துத்தான் இந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.இது ஒரு ஜனரஞ்சகமான விஷயம் அல்ல.எல்லாராலும் பொறுமையாகப் படிக்க முடியாது.ஆனாலும் இதை நீக்காமல் வைத்திருந்து சிலநாட்கள் திரும்பத்திரும்பப் படியுங்கள்.


உயிர்களும் உலகமும் டார்வின் கூறியபடி தானாகப் பரிமாண

வளர்ச்சியால் தோன்றவில்லை.

Monday, November 7, 2022

இந்துக்களின் காலக்கணக்கு Hindus year

🕉️ மகாபாரத வருடம் 
இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...
கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!
குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
*உண்மை இதுதான்*
 
ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி 
தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

இன்னும் இது 
போன்ற எத்தனையோ கட்டிடகலை..

தொியாமல் கட்ட முடியாது.!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..

இன்னும் சொல்ல வேண்டுமானால்,

ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.

லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு
கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று உயிா் உண்டாகிறது.

இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..

ஆனால், இதை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,

*லட்சமாக உருவெடுத்து* *ஆயிரம் ஆகி*
*நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்*

என்று சொல்லியிருக்கிறார்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 

Sunday, November 6, 2022

சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து

வள்ளி பிராட்டி அவர்கள் மேல் முருகன் காட்டிய அன்பு என்பது, எப்படிப்பட்டது என்றால்,  இந்திரலோகம் மீட்கப்பட்டு , இந்திரன் மீண்டும் இந்திரபதவி அடைந்த பின், ஒரு முறை முருக பெருமானை தேடி,சிருவாபுரி என்ற ஸ்தலத்திற்கு வருகின்றார். அங்கு முருக பெருமானை தரிசனம் செய்து  ,முருகா இந்திரலோகம் மீட்க பட்டாலும், அது களை இழந்து காணப்படுகிறது, முன்பு போல் ஒளி வீச வில்லை.நீ தான் அதை பழைய நிலைக்கு திருத்தி அமைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ள,முருக பெருமான் ,ஒளி கொடுக்க கூடிய சூரிய சந்திரர்களை அழைக்க வில்லை, மும்மூர்த்திகள் யாரையும் வேண்டிக்கொள்ள வில்லை. முப்பது முக்கோடி தேவர்களிலும் யாரையும் அலைக்கா த முருகன் தன் அருகில் இருக்கும் வள்ளி பிராட்டி யை பார்த்து (எங்கும் வள்ளி தெய்வயனையுடன் காட்சி தரும் முருகன், இந்த ஒரு ஸ்தலத்தில் தான் வள்ளி யோ டு மண கோலத்தில் காட்சி தரும் அற்புதமான காட்சியை காணலாம். அந்த கோவிலின் சிறப்புகளை பின்பு பார்ப்போம்) , உன் அன்பு பார்வையால் அந்த தேவ லோகத்தை பார் என்று கூற வள்ளி பிராட்டியார் முருகனை வணங்கி தேவலோகத்தில் பார்வையை செலுத்த , தேவ லோகம் முன் பை விடவும் ஒளி வீசி தெய்வமாக காட்சி அளித்தது என்று சொல்லப்பட்டுள்ளது.முருகப்பெருமான் வள்ளி பிராட்டியின் மேல் காட்டிய அன்பை , கருணையை காண முடிகிறது. நாம் அறிந்து கொள்வது முருக கடவுளின் அன்பை பெறுவதற்கு  ஜாதி மதம் தேவைல்லை, பணம், வசதி தேவை இல்லை, சாஸ்திர sambarathaayam
தேவை இல்லை. அவனை தேடி எங்கும் போக வேண்டாம்.இருந்த இடத்தில் இருந்து "முருகா" என்று ஒருமுறை கூறினால் போதும் , ஓடோடி வந்து  கருணை புரிவான்.அந்த "முருகா" நாமத்திற்கு அவ்வளவு சக்தியா,அந்த நாமத்தின் மகிமையை நாளை பேசி மகிழ்வோம்.

Saturday, October 29, 2022

TN EB CUSTOMER CARE

உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும்...
அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும்....
அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும்....
அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்....
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்..... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்....
 
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும்.....

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்.....

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும்.. அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்..... 

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்.... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை....

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை....

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*
( படித்தால் மட்டும் போதாது உங்கள் நண்பர்களுக்கும், உறவினருக்கும்
பகிரவும், உபயோகமாக இருக்கும் )
நன்றி !
நன்றி

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

கருவறையைவிட இந்த வாசல் அதிகமான உயரத்தில் இருப்பதால், கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரே ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டுதான் இருக்கும்.

ராஜ கோபுரத்தின் வாசல் மட்டுமல்ல, கோயிலின் மிக அருகே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் மட்டமும் கருவறையைவிட அதிகமான உயரத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது.
அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.

1649ல் திருசெந்தூர் கோயிலை சிலகாலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த டச்சு வீரர்கள், கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள்.
இருப்பினும் சிறிதளவுகூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.
அதிர்ந்துபோன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்துகொண்டு ஓடிவிட்டார்கள்.

இந்த நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த டச்சு வீரர் ஒருவர் தன்னிடம் இதை கூறியதாக 
"A Description Historical and Geographical of India (1785)" என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரெனில் (M Rennel) குறிப்பிட்டுள்ளார்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்கமுடியாமல் விட்டுப்போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்..

ஓம் முருகாசரணம்

நன்றி; திருவாசகம்

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

 காடாம்புழா  பகவதி கோயில்
 காலை : 5am ➖ 11am
 மாலை : 3:30Pm ➖ 7pm

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 1 மணி ➖ இரவு 9 மணி

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 4.30AM ➖ 12pm
 மாலை : 4.30Pm ➖ 8:30pm

 கொடுங்களூர் பகவதி கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை : 4.30Pm ➖ 8pm

 சோட்டானிக்கரை பகவதி கோயில்
 காலை : 3:30AM ➖ 12pm
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 கீழ்க்காவு குருதி
 இரவு: 8.30 மணி

 வைக்கம் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 மல்லியூர் கணபதிகோயில்
 காலை : 4.30AM ➖ 12:30pm
 மாலை : 4.30Pm ➖ 8pm

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்
 காலை : 5AM ➖ 11:30am
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கடப்பட்டூர் மகாதேவகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 நிலக்கல் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 பம்பா கணபதிகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 4 மணி ➖ 11 மணி

 சபரிமலை சன்னிதானம்
 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
 ஹரிவராசனம் : இரவு 10.50

 நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்
 ஆர்டினரி - ரூ40
 ஏசி லோஃப்ளோர் - ரூ90
 பேட்டரி - ரூ100

 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  

 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
 புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
 வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

 எல்லாக் கோயில்களிலும்
 பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம்கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.  

 நல்ல தீர்த்தாடன கால வாழ்த்துக்கள்...

#ஓம்_சுவாமியே… #சரணம்_ஐயப்பா 🙏🙏

Friday, October 21, 2022

குலதெய்வத்தை நினைத்து

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும்.

குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்

நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :*

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும், சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு.  
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

Wednesday, October 5, 2022

Gravitational walls

 "Gravitational walls" (புவி ஈர்ப்பு விசைச் சுவர்) பற்றி பாடம் எடுக்கு இந்தியக் கோவில் சுவர்கள். கட்டடக் கலையில் பொறியியலுக்கு நிகரான மெய்யியல்.

-------------------------------------------------------------------

என்ன பூகம்பம் வந்தாலும், புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் கால காலமாக ஒரு சிறு கீறல்கள் கூட விழாமல் பண்டையக் கோவில்கள் கம்பீரமாக நிற்பது எப்படி? எப்படி அவைகளால் இப்படி ஒருத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்தது.


உதாரணமாக திருவாஞ்சியம்:

-----------------------------------------------------

இங்கே அடியேன் திருவாரூரில் அமைந்துள்ள திருவாஞ்சியம் கோவிலை உதாரணமாக எடுத்துள்ளேன். இது எம தர்ம ராஜாவே சிவபெருமானுக்கு வாகனமாய் செயல்படுகிறார். 1050 ஆண்டுகள் பழைமை வாய்ந்தத் திருத்தலம் ஆகும்.


மதிமயக்கும் மதில் சுவர்:

---------------------------------------------

இக்கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவரானது ராஜ கம்பீரமாகக் காட்சியளிக்கக் கூடியது. இக்கோவிலில் உள்ளக் கல்வெட்டில் "இக்கோவிலானது பிரளைய காலத்தாலும் அழியாத வகையில் கட்டப்பட்டது" என்னும் வாசகத்தைக் காணலாம். அப்போ இக்கட்டுமானம் காலம் கடந்து உழைக்கனும் என்றத் தீர்மானத்தோடு பொறியியல் திட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் என்பதுத் திண்ணம்!


ஈர்ப்பு விசைச் சுவர்கள்:

------------------------------------------

பூமியில் இருந்து வரும் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில் அடித்தளத்தை தடிமனாகவும் அதிக கனத்தோடும் அமைத்து பின் அடித்தளத்து மேலே உள்ளக் கட்டுமானத்தை அடித்தளத்தை விட கனம் குறைந்ததாகவும் தடிமன் குறைந்ததாகவும் அமைத்தனர். பின் மேல உள்ள தளத்தை அடித்தளத்தைப் போலவே தடிமன் அதிகமாகவும் கனம் அதிகமாகவும் உள்ளவாறு அமைத்தனர். அடித்தளத்தின் தடிமன் கனம் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு மேல் தளத்தில் உள்ளவாறு பார்த்துக் கொண்டார்கள். இவ்வகையானக் கட்டுமானத்திற்கு ஆக்கிலத்தில் Gravitational wall என்றுப் பெயரிட்டனர்.


இக்கட்டுமானத்தின் சிறப்பு:

--------------------------------------------------

அடித்தளம் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும். மேல்தனத்தின் கனம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக மேல் தளத்தில் கனத்துக்குக் கீழாக வெற்றிடத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஷாக் அப்சர்பர்களை (Shock Obserbers) வடிவமைத்துள்ளனர். இவ்வகையானக் கட்டுமானம் சுவர்ற்றை மேலும் கிழுமாக அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறது. எப்பேர்பட்ட இயற்கை சீற்றம் வந்தாலும் கட்டுமானத்தின் திடத்தன்மையை பாதுகாத்துவிடுகிறது. புவி ஈர்ப்பு விசைக்குச் சவாலாக இக்கட்டுமானம் அமைக்கப்படுள்ளது விந்தையிலும் விந்தை!

-------------------------------------------------------------------

உலகமே ஒன்று சேர்ந்தாலும் எம் பாட்டன் கட்டியக் கட்டமானத்திடம் பிச்சை எடுக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டுக் கட்டிடக் கலையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே நம் முன்னோர்கள் வடிவமைத்துவிட்டனர்.

Sunday, September 25, 2022

பெருமாள் கோவிலில் தீர்த்தம்

 அகால மரணம் ஏற்படக்கூடாது 

என்று ஆசையா? 

பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. 


"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.


சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.


உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது


வட இந்தியாவில், வெளி 

நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.


'யாருமே அகால மரணம் 

அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.


கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.


சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.


இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.


எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!


'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.


'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.


அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.


.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.

தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.


ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.

அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.

இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.


ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.


வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.


அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.


ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.


அகால ம்ருத்யு ஹரணம்,

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்,

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்கிறது வேத வாக்கு.


விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்

அகால மரணத்தை நீக்க கூடியது,

அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,

 என்று வேதமே சொல்கிறது.


மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,

நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,

நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.


கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 

இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.


நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.


அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 

கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.


பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.


"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளி


டம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.


'நோய்' வருவதற்கு காரணம் - 

நாம் செய்த 'பாபங்களே',

'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - 

நாம் செய்த 'பாபங்களே'.


'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 

அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 

என்று வேதமே சொல்கிறது.


கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.


அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.


எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது


அகால ம்ருத்யு ஹரணம்

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து

அருந்த வேண்டும்

பசுவை ஒரு முறை பிரதட்சணம்

 * பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.


* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.


* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.


இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.


* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.


* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.


* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.


எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.


* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.


பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.


* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.


* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.


* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.


பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.


`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!


தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

தாணிப் பாறை

 சதுரகிரி தாணிப் பாறை  சர்வேஸ் வரர் தியான நிலையத்தில் கன்னிமூலையில் அபயஹஸ்த மகாவிநாயகர்சிரசில் பிறையுடன் உள்ளார். வலதுபுறம்  உள்ளராகுவில் சிவலிங்கமும்,இடதுபுறமுள்ள கேதுவில் காளிங்க நர்த்தனகிருஷ்ணனும் உள்ளனர். 

அவருக்கு  அடுத்தபடியாக வடக்குநோக்கி 18ம்படி கருப்பன்  சைவமாக உள்ளார்.

  அவரை தரிசித்து  

விட்டு உள்ளே வர வாசலுக்கு  வலதுபுறம்  சர்வேஸ்வரரை நோக்கியபடி  சண்டிகேஸ்வரர்தரிசனம் முடித்து வந்தால்   இடதுபுறம் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன்  தங்கள் வாகனத்தில் உள்ளனர்.

வாசலைப் பார்த்தபடி சொர்ண ஆகர்சனபைரவர் தன்மனைவியுடன்  உள்ளார்.

தரிசனம்செய்து திரும்பினால் படிக்கட்டுகள்.

வலது புறம் மேற்கு நோக்கிய படிக்கட்டை நெருங்கி சித்தி விநாயகர் தரிசனம் செய்தால் சிறிய இடைவெளி வழியாக சென்றால்  படிக்கட்டின்கீழ் எட்டிப்பார்க்க சிவன்தலையில் கங்கையுடன்  தெரிகிறார்.  

    உள்ளே செல்ல வலதுபக்கம் படிக்கட்டு இறங்கிச் சென்றால்  இடதுபுறம் திரும்பி கீழே இறங்கி வலதுபுறம்திரும்ப நடுவில் சிவனுக்கு கீழே  பாலாம்பிகை 

 இடது புறம் ஆறு சித்தர்கள் வடக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்கிழக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்  தெற்குப்பார்த்தும் உள்ளனர்.நடுவில்

தெற்குப்பார்த்து யுகங்கள் கடந்த பகுளாதேவி சமேத காக புஜன்டர் இருவரும்18கரங்களுடன் ,நடுவில் மேற்குப்பார்த்து பிரம்மா (நான் முகன்),சிவன், விஷ்ணுவும், நடுவில் வடக்குப்பார்த்து நால்வர் பெருமக்கள் உள்ளனர்.18சித்தர்கள்  பெயர், நட்சத்திரம், வாழ்ந்த காலம், அடங்கிய இடம் ஆகியவை குறிப்பு உள்ளது.

 காகபுஜன்டர்  அவரது மனைவி யுகங்கள் கடந்த வர்கள் எனவே காலங்கள் குறிக்கப் படவில்லை.

Thursday, September 22, 2022

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*
😁😁😁😁😁😁😁😁

*கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து*
_பல் விளக்கச்சொன்னபோது_ ,

*பட்டிக்காடு* என *இளித்த பற்கள்*
*இன்று வேரற்று போனபோது*...

*ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*...

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*வெந்தயமும் சிகைக்காயும்*
*வடிதண்ணீரில் அரைத்து*
*தேய்த்துக்குளி என்றபோது* ,

*பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்*

*இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்*
_சீகைக்காய் வாங்க_......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*பாசிப்பயறோ*
*கடலை மாவோ*
*அரைத்துக்குளி* என்ற போது ,

*லிரில்* ,
*லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்*
*அழகு சோப்*
என *கைகாட்டிய* *கட்டிகளை*
*எல்லாம் போட்டு*,,
*தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*..

*ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*இருமலோ தும்மலோ*
*வந்தபோது*...
*துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* ,

*முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* ,

*ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*வயிற்று வலி என்றபோது*
*வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*..

*சீறித் தூக்கி எறிந்து* ,
*ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு*
*கருப்பை பழுதடைந்த பின்பு* ,
_ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி*
*மணமாய் தந்தபோது* ,

*சன்ஃபிளவர் ஆயில்* *பார்*
*முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,*
*பதிலுரைத்துவிட்டு*,

*இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* .....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்....

*மண்பானை சமையல்*
*மண்பானை குளிர் நீரை*
எல்லாம் மாற்றி விட்டு ,

*ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து*
*சவமான பின்பு ஓடுகின்றேன்*

*மண்பானை வாங்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

*படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*..

*குருகுலக்கல்வியை*
*கோடிக்கணக்கான ரூபாய்*
*கல்வியாக்கி* ,

*கொல்லைப்புற துளசியின்*
*வைத்தியம் மறந்து* ,
*மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு*
*இலட்ச இலட்சமாய்க்கொட்டி* 
*நடைப்பிணமாக வாழும்*
*வாழ்வில் எங்கே சுதந்திரம்*
*ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள் .......

*மூத்தோர் சொல்லும்*
*முது நெல்லிக்காயும்*
*முன்னே கசக்கும்* ,
*பின்னே இனிக்கும்*

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும்.

தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30 - 12.00 ] ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள்

ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்:

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில்உள்ளஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும் , மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

வெள்ளி கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 -12.00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...