Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Tuesday, December 20, 2022
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்
Saturday, December 10, 2022
ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர்
Friday, December 9, 2022
வேதம் - ஆகமம் - திருமுறை இவற்றின் சிறப்பு பற்றி கூற முடியுமா?*
திருப்பதி பயணம் திருப்தியாக இருக்க
பருவத மலையின் சிறப்பம்சம்
Monday, November 28, 2022
காசி
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல்
தர்ப்பை புல் என்றவுடனே
மிதக்கும்_மாட்டு_வண்டியில் #முகமில்லா_மனிதர்
ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்..
Saturday, November 26, 2022
கன்னிகாதானம்" என்றால் என்ன?
Saturday, November 12, 2022
உணர்ச்சி’ உள்ள மனிதர்களையும், அன்பான மனிதர்களையும்,
நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும்
புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்தது....
சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை.
எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.
வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!
மற்றவர் தவறுகளை கவனித்துக்
கொண்டே இருப்பவர்கள்.....!!
தன் தவறுகளை வளர்த்துக்
கொண்டே இருக்கிறார்கள்......!!
.வாழ்க்கையில் வெற்றி அடைய *ஆயிரம் வழிகள் உண்டு..,
ஆனால் .., அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் உண்டு..!
யாரைப் போல இல்லாமல் ...
இது தான் நான் ... என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்...
ஒரு வகையில் சாதனை தான் ...
சொன்னபடி செய்ய ஆள் இல்லாத உலகில்,
கண்டபடி சொல்ல ஆள் இருக்கிறார்கள்.
அறிவாளியை விலை
கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி’ உள்ள
மனிதர்களையும்,
அன்பான மனிதர்களையும்,
விலை கொடுத்து
வாங்க முடியாது....
சோகங்களே இங்கு அதிகம்
அடுத்தவரிடம் சொல்ல
கூடாதெனும் சோகங்களை விட
அடுத்தவரிடம்
சொல்ல முடியாத
சோகங்களே இங்கு அதிகம்...
பணத்தோடு இருக்கும் வரை தான்
மரத்தோடு இருக்கும் வரை தான் இலைக்கு மதிப்பு......
பணத்தோடு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.........!!
வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு
வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு விட்டுக் கொடுத்ததை தவிர. எல்லாம் கிடைக்கும்.
தட்டிப் பறித்தவருக்கு தட்டிப் பறித்ததை தவிர. எதுவும் கிடைக்காது இது தான் இறைவன் நியதி.
மகிழ்வை தருபவரல்ல இறைவன்கவலைகளை தாங்க மன தைரியம் தருபவரே இறைவன்.
நன்றி மறந்தவரை விட்டு விடுங்கள், நமக்கு நலம் பயப்பவரை வணங்குங்கள். தீய எண்ணம் உடையவருக்கு, எந்த தெய்வசக்தியும் துணை நிற்காது.
இறைவா நீயே கதி என்றிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் துணையாக இருப்பார் இறைவன்.
Thursday, November 10, 2022
வழிபடும் லிங்கங்கள்
வழிபடும் லிங்கங்கள்
பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்
ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்
சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்
ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்
சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்
ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்
வருணன் ஸ்படிக லிங்கம்
சித்தர்கள் மானச லிங்கம்
புதன் சங்கு லிங்கம்
கணேசர் கோதுமை லிங்கம்
கருடர் அன்ன லிங்கம்
அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்
காமதேவர் வெல்லத்திலான லிங்கம்
விபீஷணன் குப்பையிலிருக்கு மண்ணிலான லிங்கம்
போகர் மரகத லிங்கம்
இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்
ராகு பெருங்காயத்திலான லிங்கம்
நாரதர் ஆகாச லிங்கம்
செவ்வாய் வெண்னையிலான லிங்கம்
நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்
பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்
ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்
டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்
மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்
பரசுராமர் சோளத்திலான லிங்கம்
பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்
பறவைகள் ஆகாச லிங்கம்
வாசுகி விஷ லிங்கம்
கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்
குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்
தினம் ஒர் சித்தர் வரலாறு . பெயர்: காக புஜண்டர்
தினம் ஒர் சித்தர் வரலாறு
பெயர்: காக புஜண்டர்
வரலாறு சுருக்கம்:
பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார். அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள். தியானச் செய்யுள்: காலச்சக்கரம் மேல்
ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே.
தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் : 10-11-2022
தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :
10-11-2022
தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, ஐப்பசி 24
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ துவிதியை - Nov 09 05:17 PM – Nov 10 06:33 PM
கிருஷ்ண பக்ஷ திருதியை - Nov 10 06:33 PM – Nov 11 08:17 PM
நட்சத்திரம்
ரோஹிணி - Nov 10 03:09 AM – Nov 11 05:08 AM
மிருகசீரிடம் - Nov 11 05:08 AM – Nov 12 07:33 AM
கரணம்
கரசை - Nov 10 05:51 AM – Nov 10 06:33 PM
வனசை - Nov 10 06:33 PM – Nov 11 07:22 AM
யோகம்
பரீகம் - Nov 09 09:17 PM – Nov 10 09:12 PM
சிவம் - Nov 10 09:12 PM – Nov 11 09:29 PM
வாரம்
வியாழக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:13 AM
சூரியஸ்தமம் - 5:53 PM
சந்திரௌதயம் - Nov 10 7:29 PM
சந்திராஸ்தமனம் - Nov 11 8:26 AM
அசுபமான காலம்
இராகு - 1:31 PM – 2:58 PM
எமகண்டம் - 6:13 AM – 7:41 AM
குளிகை - 9:08 AM – 10:36 AM
துரமுஹுர்த்தம் - 10:07 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM
தியாஜ்யம் - 11:18 AM – 01:03 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:40 AM – 12:27 PM
அமிர்த காலம் - 01:40 AM – 03:24 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:37 AM – 05:25 AM
ஆனந்ததி யோகம்
உற்பாதம் Upto - 05:08 AM
மிருத்யு
வாரசூலை
சூலம் - South
பரிகாரம் - தைலம்
__________
வியாழன் ஹோரை
காலை
06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்
மாலை
03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.__________
ராசிபலன்
10-11-2022
மேஷம்
நவம்பர் 10, 2022
பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
---------------------------------------ரிஷபம்
நவம்பர் 10, 2022
சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும்.
ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.
---------------------------------------மிதுனம்
நவம்பர் 10, 2022
வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
புனர்பூசம் : விரயம் உண்டாகும்.
---------------------------------------கடகம்
நவம்பர் 10, 2022
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------
சிம்மம்
நவம்பர் 10, 2022
புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கன்னி
நவம்பர் 10, 2022
வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------துலாம்
நவம்பர் 10, 2022
எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
நவம்பர் 10, 2022
ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
விசாகம் : முடிவு கிடைக்கும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
நவம்பர் 10, 2022
நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூராடம் : ஆதாயகரமான நாள்.
உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
---------------------------------------மகரம்
நவம்பர் 10, 2022
வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------கும்பம்
நவம்பர் 10, 2022
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : பொறுப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.
---------------------------------------
மீனம்
நவம்பர் 10, 2022
உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : மேன்மையான நாள்.உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.ரேவதி : இழுபறிகள் குறையும்.
கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.
கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.
உலகில் மூன்று பொருட்கள் உள்ளன.
1) இறைவன்
2) உயிர்கள்
3) மாயை
பிரபஞ்சம் முழுவதற்கும் இருப்பது ஒரே இறைவன் தான்.
உயிர்களில் 84 லட்சம் வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எண்ண முடியாத அளவு உயிர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த 84 லட்சம் உயிர் வகைகளை ஏழு பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.
1 தேவர்
2) மனிதர்
3) மிருகங்கள்
4) பறவைகள்
5) ஊர்வன
6) நீர் வாழ்வன
7)தாவரங்கள்
மாயை என்னும் பொருள் ஒன்றுதான்.
அதை இறைவன், தான் விரும்பும் வண்ணம் ஆக்க முடியும். அண்ட சராசரங்களில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே பொருளான மாயையில் இருந்து இறைவன் உருவாக்கியது தான். இறைவன், உயிர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவ நிலைக்கு ஏற்ப உடலைத் தருகிறான். அந்த உடலை வைத்து தன் ஆயுட்காலத்தில் அவை வினையாற்றுகின்றன. அதனால் அவை அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து முன்னேறுகின்றன. அவைகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவற்றிற்கு உடலை இறைவன் வழங்குகிறான். ஒவ்வொரு பிறவியிலும் அனுபவம் பெற்று முன்னேறி இறுதியில் இறைவனுடன் ஒன்றியிருக்கின்றன. இவ்வாறு உயிர்கள் முன்னேறி இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் ஆக இருக்கிறது. ஆனால், உயிர்கள் தன் புலன் உணர்வால் கிடைக்கும் இன்பங்களில் மயங்கி அதிலேயே மூழ்கி முன்னேற்ற பாதையில் செல்லாமல் பின்தங்கி விடுகின்றன. அவைகள் இறைவடி சேரும் வரை அவற்றிற்கு இறைவன் மீண்டும் பிறவிகளையும் அந்தந்தப் பிறவிக்கு ஏற்ப உடலையும் வழங்குகிறான். மனிதர்கள் இந்தப் பிறவிச்சுழல் என்ற கடலில் இருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்கிறார்கள்.அவர்கள் கடைத்தேறுவதற்கான வழியைத்தான் திருவள்ளுவர் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்தாவது பாடலில் கூறுகிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
இறைவனுடைய திருவடிகளை நினைந்து போற்றிக் கொண்டு இருப்பவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பார்கள்;
மற்றவர்கள் கடக்க முடியாது.
அன்புச் சொந்தங்களே,
இந்தக் கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகும்.
உலகில் எந்த சமயத்திலும் சொல்லப்படாதது.
சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்ற ஒரு பழமையான சிவாலயம் இருக்கிறது.அங்கே, வருடத்தில் 365 நாட்களும் சைவ அதாவது சிவ வழிபாடு பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது.நான் சென்னையில் இருக்கும் போது மன அமைதிக்காக அவ்வப்போது இந்த சொற்பொழிவுகளைக் கேட்கப் போவது உண்டு.அவ்வாறு கேட்கும்போது கிடைத்த ஞானத்தை வைத்துத்தான் இந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.இது ஒரு ஜனரஞ்சகமான விஷயம் அல்ல.எல்லாராலும் பொறுமையாகப் படிக்க முடியாது.ஆனாலும் இதை நீக்காமல் வைத்திருந்து சிலநாட்கள் திரும்பத்திரும்பப் படியுங்கள்.
உயிர்களும் உலகமும் டார்வின் கூறியபடி தானாகப் பரிமாண
வளர்ச்சியால் தோன்றவில்லை.
Monday, November 7, 2022
இந்துக்களின் காலக்கணக்கு Hindus year
Sunday, November 6, 2022
சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து
Saturday, October 29, 2022
TN EB CUSTOMER CARE
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.
கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.
Friday, October 21, 2022
குலதெய்வத்தை நினைத்து
ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்
Wednesday, October 5, 2022
Gravitational walls
"Gravitational walls" (புவி ஈர்ப்பு விசைச் சுவர்) பற்றி பாடம் எடுக்கு இந்தியக் கோவில் சுவர்கள். கட்டடக் கலையில் பொறியியலுக்கு நிகரான மெய்யியல்.
-------------------------------------------------------------------
என்ன பூகம்பம் வந்தாலும், புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் கால காலமாக ஒரு சிறு கீறல்கள் கூட விழாமல் பண்டையக் கோவில்கள் கம்பீரமாக நிற்பது எப்படி? எப்படி அவைகளால் இப்படி ஒருத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்தது.
உதாரணமாக திருவாஞ்சியம்:
-----------------------------------------------------
இங்கே அடியேன் திருவாரூரில் அமைந்துள்ள திருவாஞ்சியம் கோவிலை உதாரணமாக எடுத்துள்ளேன். இது எம தர்ம ராஜாவே சிவபெருமானுக்கு வாகனமாய் செயல்படுகிறார். 1050 ஆண்டுகள் பழைமை வாய்ந்தத் திருத்தலம் ஆகும்.
மதிமயக்கும் மதில் சுவர்:
---------------------------------------------
இக்கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவரானது ராஜ கம்பீரமாகக் காட்சியளிக்கக் கூடியது. இக்கோவிலில் உள்ளக் கல்வெட்டில் "இக்கோவிலானது பிரளைய காலத்தாலும் அழியாத வகையில் கட்டப்பட்டது" என்னும் வாசகத்தைக் காணலாம். அப்போ இக்கட்டுமானம் காலம் கடந்து உழைக்கனும் என்றத் தீர்மானத்தோடு பொறியியல் திட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் என்பதுத் திண்ணம்!
ஈர்ப்பு விசைச் சுவர்கள்:
------------------------------------------
பூமியில் இருந்து வரும் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில் அடித்தளத்தை தடிமனாகவும் அதிக கனத்தோடும் அமைத்து பின் அடித்தளத்து மேலே உள்ளக் கட்டுமானத்தை அடித்தளத்தை விட கனம் குறைந்ததாகவும் தடிமன் குறைந்ததாகவும் அமைத்தனர். பின் மேல உள்ள தளத்தை அடித்தளத்தைப் போலவே தடிமன் அதிகமாகவும் கனம் அதிகமாகவும் உள்ளவாறு அமைத்தனர். அடித்தளத்தின் தடிமன் கனம் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு மேல் தளத்தில் உள்ளவாறு பார்த்துக் கொண்டார்கள். இவ்வகையானக் கட்டுமானத்திற்கு ஆக்கிலத்தில் Gravitational wall என்றுப் பெயரிட்டனர்.
இக்கட்டுமானத்தின் சிறப்பு:
--------------------------------------------------
அடித்தளம் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும். மேல்தனத்தின் கனம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக மேல் தளத்தில் கனத்துக்குக் கீழாக வெற்றிடத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஷாக் அப்சர்பர்களை (Shock Obserbers) வடிவமைத்துள்ளனர். இவ்வகையானக் கட்டுமானம் சுவர்ற்றை மேலும் கிழுமாக அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறது. எப்பேர்பட்ட இயற்கை சீற்றம் வந்தாலும் கட்டுமானத்தின் திடத்தன்மையை பாதுகாத்துவிடுகிறது. புவி ஈர்ப்பு விசைக்குச் சவாலாக இக்கட்டுமானம் அமைக்கப்படுள்ளது விந்தையிலும் விந்தை!
-------------------------------------------------------------------
உலகமே ஒன்று சேர்ந்தாலும் எம் பாட்டன் கட்டியக் கட்டமானத்திடம் பிச்சை எடுக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டுக் கட்டிடக் கலையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே நம் முன்னோர்கள் வடிவமைத்துவிட்டனர்.
Sunday, September 25, 2022
பெருமாள் கோவிலில் தீர்த்தம்
அகால மரணம் ஏற்படக்கூடாது
என்று ஆசையா?
பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..
"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.
சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது
வட இந்தியாவில், வெளி
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.
'யாருமே அகால மரணம்
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.
சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!
'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.
'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.
கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.
அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.
.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.
ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.
கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.
ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.
அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.
ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்கிறது வேத வாக்கு.
விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
என்று வேதமே சொல்கிறது.
மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.
நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.
"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளி
டம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.
'நோய்' வருவதற்கு காரணம் -
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் -
நாம் செய்த 'பாபங்களே'.
'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்
என்று வேதமே சொல்கிறது.
கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால், பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?
பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.
அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.
எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது
அகால ம்ருத்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து
அருந்த வேண்டும்
பசுவை ஒரு முறை பிரதட்சணம்
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.
இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.
பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.
* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
தாணிப் பாறை
சதுரகிரி தாணிப் பாறை சர்வேஸ் வரர் தியான நிலையத்தில் கன்னிமூலையில் அபயஹஸ்த மகாவிநாயகர்சிரசில் பிறையுடன் உள்ளார். வலதுபுறம் உள்ளராகுவில் சிவலிங்கமும்,இடதுபுறமுள்ள கேதுவில் காளிங்க நர்த்தனகிருஷ்ணனும் உள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக வடக்குநோக்கி 18ம்படி கருப்பன் சைவமாக உள்ளார்.
அவரை தரிசித்து
விட்டு உள்ளே வர வாசலுக்கு வலதுபுறம் சர்வேஸ்வரரை நோக்கியபடி சண்டிகேஸ்வரர்தரிசனம் முடித்து வந்தால் இடதுபுறம் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் தங்கள் வாகனத்தில் உள்ளனர்.
வாசலைப் பார்த்தபடி சொர்ண ஆகர்சனபைரவர் தன்மனைவியுடன் உள்ளார்.
தரிசனம்செய்து திரும்பினால் படிக்கட்டுகள்.
வலது புறம் மேற்கு நோக்கிய படிக்கட்டை நெருங்கி சித்தி விநாயகர் தரிசனம் செய்தால் சிறிய இடைவெளி வழியாக சென்றால் படிக்கட்டின்கீழ் எட்டிப்பார்க்க சிவன்தலையில் கங்கையுடன் தெரிகிறார்.
உள்ளே செல்ல வலதுபக்கம் படிக்கட்டு இறங்கிச் சென்றால் இடதுபுறம் திரும்பி கீழே இறங்கி வலதுபுறம்திரும்ப நடுவில் சிவனுக்கு கீழே பாலாம்பிகை
இடது புறம் ஆறு சித்தர்கள் வடக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்கிழக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள் தெற்குப்பார்த்தும் உள்ளனர்.நடுவில்
தெற்குப்பார்த்து யுகங்கள் கடந்த பகுளாதேவி சமேத காக புஜன்டர் இருவரும்18கரங்களுடன் ,நடுவில் மேற்குப்பார்த்து பிரம்மா (நான் முகன்),சிவன், விஷ்ணுவும், நடுவில் வடக்குப்பார்த்து நால்வர் பெருமக்கள் உள்ளனர்.18சித்தர்கள் பெயர், நட்சத்திரம், வாழ்ந்த காலம், அடங்கிய இடம் ஆகியவை குறிப்பு உள்ளது.
காகபுஜன்டர் அவரது மனைவி யுகங்கள் கடந்த வர்கள் எனவே காலங்கள் குறிக்கப் படவில்லை.
Thursday, September 22, 2022
தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்
வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!
Featured Post
எண்ணம்_போல_வாழ்க்கை
#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...