Showing posts with label நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப். Show all posts
Showing posts with label நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப். Show all posts

Tuesday, May 30, 2023

நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வாழைத்தண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

 வாழைத்தண்டு - 1 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப உப்பு - சுவைக்கேற்ப தாளிப்பதற்கு.. எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது

 செய்முறை: *

 வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். * ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். * வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். * பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். * பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையானவாழைத்தண்டு சூப் தயார்.


Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...