வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்
சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார். உயிர்களின் பிரார்த்தனைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவரும் நல்ல புத்தியைக் கொடுப்பவரும் சித்தி புத்தி வினாயகர் ஆவார்.