Friday, October 20, 2023

அவர்கள் சாப்பிட வைத்திருந்த சாப்பாட்டை

 







அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) சில மாதங்களுக்கு முன்பு நான் திருக்கோவிலுக்கு சென்று இருந்தேன் அன்று திருக்கோவிலில் ஒரு பணிவிடை தான் நடந்து கொண்டிருந்தது சுவாமி தரிசனம் செய்துவிட்டு நானும் பணிவிடை சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்து இருந்தேன் பக்தர் ஒருவர் சாப்பாடு பரிமாறி வந்த போது என்னை பார்த்து சிரித்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார் நானும் நல்லா இருக்கிறேன் என்றாலும் அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை சாப்பிட்ட உடன் அவர் அருகில் போய் பேசினேன் நமது கோவில் குரூப்பில் உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்க்கிறேன் இன்று நான் உங்களை நேரில் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி என்றார், இருவரும் பந்தி முடியும் வரை பேசி கொண்டிருந்தோம் அப்போது ஒரு புதுமன தம்பதியினர் வந்து சாப்பாடு காலியாகி விட்டதா நாங்கள் சாப்பிடலாம் என்று வந்தோம், நாங்கள் திருநெல்வேலியில் இருந்து வருகிறோம் எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று நாட்கள் ஆகிறது முதல் முறையாக கோவிலுக்கு வருகிறோம், கோவிலில் பணிவிடை இருந்தால் கண்டிப்பாக சாப்பிடணும் என்று மாமா சொன்னாங்க என்று சொன்னதும் நண்பர் உடனே அவர்களை உட்கார வைத்து அவர்கள் சாப்பிட வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து பரி மாறினார் இப்படியும் ஒரு பக்தர் 🙏ஹரி ஓம் ராமானுஜா யா🙏

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...