Friday, November 24, 2023

ஜாம்பவான்

 ஜாம்பவான்

கும்பகோணம் ராமசுவாமி கோவில் தூணில் செதுக்கப்பட்டுள்ள ஜாம்பவானின் எழில்மிகு சிற்பம்.

சூரிய பகவான்

 சூரிய பகவான்

காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி அதிதிக்கும் மாகா மாதம் 7 ஆம் தேதி சூரிய பகவான் பிறந்தார். இந்நாள் சூரிய ஜெயந்தியாகவும் ரத சப்தமியாகவும் கொண்டாடப்படுகிறது. 7 ஆம் நாள் ரத சப்தமியின் அடையாளமாக சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார். இங்குள்ள ஏழு குதிரைகள் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன. இடம்: கேதாரேஸ்வரர் கோவில் ஹலேபீடு ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

சிரித்த முகத்துடன் முருகன்

 சிரித்த முகத்துடன் முருகன்

சுகாசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் முருகர் அருள் பாலிக்கிறார். தலையில் கரண்ட மகுடம். ஒரு கையில் அக்ஷர (அக்க) மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம்.
சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விஸ்வகர்மா சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து சக்தி ஆயுதத்தை உருவாக்கினார். இதைக் கொண்டுதான் முருகர் மலைகளைப் பிளக்கிறார். எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப் படைப்பில் உருவானது இந்த சிற்பம். இடம்: கழுகுமலை வெட்டுவான் கோவில். தூத்துக்குடி மாவட்டம்.

பாத நமஸ்காரம்

 பாத நமஸ்காரம்

நாம் யார் காலிலோ விழுந்து வணங்குவது அல்ல பாத நமஸ்காரம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பாதத்தை பகவானுடைய தொண்டிற்கு உபயோகப்படுத்தினால் அதற்கு பாத நமஸ்காரம் செய்கிறாய் என்று அர்த்தம். சுவாமி காலில் விழுந்து சுவாமிக்கு என்ன ஆகணும்? உலகத்தில் சுவாமியின் பாதம் இல்லாத இடமே இல்லை. உலகம் பூரா சுவாமியின் கண், கைதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருப்பாதங்கள், எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருக்கரங்கள். சுவாமி கொடுத்திருக்கிற கண்களைக் கொண்டு அனைத்தையும் கடவுளைப் பார்க்க வேண்டும். காதுகளை வைத்துக் கொண்டு கேட்கும் அனைத்தையும் கடவுளுடைய வாசகங்களாகக் கேட்கவேண்டும். கால்களை வைத்துக்கொண்டு நிறைய கோவில்கள் பாத யாத்திரை செல்லவேண்டும். தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். நம்முடைய பாதங்களை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக்கடன் இருக்கிறதே அதுதான் உண்மையான பாத நமஸ்காரம்.

சோமாஸ்கந்தர்

 சோமாஸ்கந்தர்

மாகாபலிபுரத்தில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்று நாள் மட்டுமே. நான்காவது நாள் இளைஞனாகி விட்டான். இந்த சிற்பத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருப்பவர் மூன்று நாட்களே ஆன குழந்தை முருகப்பெருமான்.

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள்

 சக்தி பீடம் 3. மீனாட்சி அம்மன் மதுரை பகுதி - 3

அம்பாள் மீனாட்சி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன. மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.
மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறாள். திருவனந்தல் விளாபூஜை காலசந்தி திரிகாலசந்தி உச்சிக்காலம் சாயரட்சை அர்த்தஜாமம் பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா சியாமளா சோடஷி ஆகிய திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறாள். இப்பூஜைகள் திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட மதுராபுரி என அழைக்கப்பட்டு அது மருவி மதுரை ஆயிற்று. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை.

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

 ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 641

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
சித்தர்கள் இருக்கிறார்கள் இல்லை. இறை இருக்கிறது அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது போல் நிலையிலேயே தொடர்ந்து இறைவழியில் வருவதாகவும் சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக் கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை எம்மை அறிந்தும் எம் வாக்கை அறிந்தும் இன்னும் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் ஓரளவு தெரிந்தும் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விதியை நோவதா? அல்லது சரியாக வழி காட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து கனக வண்ண அச்சரத்திலே காட்டி காட்டி காலம் தோறும் ஓதி ஓதி அவற்றையெல்லாம் செவியில் கேட்டு கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?
எம் வழியில் வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும் உடனடியாக சற்றும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ அதேபோல உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும் ஒரு ஒழுக்கக் கேடான எண்ணம் தோன்றினால் அது முளை விடும் பொழுதே அதனை கிள்ளி எறிந்து விட வேண்டும். அது விருட்சமாகி விட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்து விட்டுப் போகட்டும் நன்றாக தானே இருக்கிறது அழகாக தானே இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால் பிறகு அந்த தீய விருட்சம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்து விடும். எனவே இது போல் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு காலாகாலம் எமது வழியிலே விடாப்படியாக வருகின்ற சேய்களுக்கு இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக் கொண்டே இருப்போம் ஆசிகள்.
May be an image of temple
 reactions:
3

நாக தோஷம் போக வழிமுறைகள்

 ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 642

கேள்வி: நாக தோஷம் போக வழிமுறைகள் என்ன?
நாக தோஷம் என்பது எல்லா விதமான பாவங்களின் மொத்த குவியல். நாக தோஷம் என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள் ஒன்று ஆன்மீக வழியில் துர்க்கை கணபதி ராகு கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன் இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது பசுக்களை தானமாக தருவது பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும். ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்யலாம்.
வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை வைத்து செய்து வைத்து ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு ஒரு துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய்விடும் என்றால் எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாக தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகள் ஆகும்.

பிரம்ம சாஸ்தா முருகர்

 பிரம்ம சாஸ்தா முருகர்

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா முருகர். திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். தலையில் வைத்துள்ள கிரீடம் முருகனைக் குறிப்பால் உணர்த்தி விடுகிறது. இடம் திருச்சி மலைக்கோட்டை. இன்னோரு முருகரின் சிற்பம் மகாபலிபுரம் திரிமூர்த்தி மண்டபத்தில் உள்ளது.

Friday, November 17, 2023

தர்ம_சாஸ்திரம்

 1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;
3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.
10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.
12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.
39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.
_தர்ம_சாஸ்திரம்

சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர்

 சஷ்டி விரதம் பலர் ஆரம்பித்து உள்ளனர்..


சஷ்டி நாயகனின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் , உங்களது நியாயமான கோரிக்கை யாவும் முருகன் ஈடேற்றி வைப்பான்.. முகிராவின் ஆசிகளும்,வாழ்த்துக்களும்..


65730208 இந்த எண்ணானது திருச்செந்தூர் முருகனுக்கான எண்ணாகும்..


ஒவ்வொரு நாளும் குளித்த பிறகு இந்த எண்ணை உடலில் எழுதி கொள்ளுங்கள்..


பூஜை அறையில் ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள் சிவப்பு நிற பேனாவில்.


முருகன் போட்டோவில்,சிலையில், வேலில் இந்த எண்ணை எழுதி வையுங்கள்.


இந்த எண்ணை மனதார உச்சரியுங்கக். முருகன் கருணையை கட்டாயம் உணர்வீர்கள்.


யாரும் தராத ஒன்றை உங்களுக்காக, உங்களுக்காக மட்டுமே பகிர்ந்து இருக்கிறேன், முருகனுக்கு நன்றியை சொல்லி விட்டு இன்று முதல் பயன்படுத்த துவங்குங்கள்.


எதையும் எதிர்பார்த்து கொடுக்கல மக்களே, நல்லா இருங்க அவ்ளோ தான்

Wednesday, November 15, 2023

Arulmigu Iynduveetu Swamy Temple Chettiyapathu Phone no

CONTACT INFORMATION Arulmigu Iynduveetu Swamy Temple 
Chettiyapathu -628210
THIRUCHENTHUR,
 THOOTHUKUDI, 
Tamil Nadu 




Phone: 04639 250 630

Friday, October 27, 2023

அவருக்கு இனி பிறவி இல்லை

 விதி எண் (பிறந்த தேதி , மாதம், வருடம் கூட்டி வருகின்ற எண்) பிறவி எண் (பிறந்த தேதி எண்) ஒருவர் பிறந்தது மற்றும் இறந்தது இரண்டும் உரிய விதி எண்,பிறவி எண் ஒன்றாக இருந்தால் அவருக்கு இனி பிறவி இல்லை.இறைவன் அடி சேர்ந்து விடுவார் என்று அர்த்தம். அப்படி பட்ட அமைப்பை உடைய பெரிய மஹான்களின் ஒரு சிலரில் வாரியார் சுவாமிகள் ஒருவர்

Saturday, October 21, 2023

Virat Kohli beats Sachin Tendulkar: Which record did he break this time?

 Virat Kohli beats Sachin Tendulkar: Which record did he break this   time?


While controversy surrounded Virat Kohli's century against Bangladesh in the World Cup match on October 19, King Kohli achieved a significant milestone by beating Sachin Tendulkar.

Virat Kohli celebrates after the dismissal of Bangladesh's Mushfiqur Rahim during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between India and Bangladesh at the Maharashtra Cricket Association Stadium in Pune on October 19, 2023. (Photo by Punit PARANJPE / AFP) (Punit PARANJPE / AFP)

On October 19, Virat Kohli became the fastest hitter in cricket history to reach 26,000 international runs, breaking the record held by Master Blaster Sachin Tendulkar. Before the Bangladesh game, Kohli had amassed 25,923 runs from 566 innings. He accomplished this milestone with a magnificent six during the World Cup match in Pune.

Virat Kohli is now the fourth-highest run-scorer in world cricket. With 78 centuries and 134 half-centuries, his total runs in all formats stand at 26,026 in 567 innings. There are just three players ahead of him in terms of scoring runs: Ricky Ponting (27,483), Kumara Sangakkara (28,016) and Sachin Tendulkar (34,357). Kohli got past Mahela Jayawardene (25,957), who now stands at number 5 in the list of the highest run-scorers in cricket.

Also Read: ICC World Cup 2023: What Virat Kohli said after hitting his 48th ODI century

In ODI World Cups, Virat Kohli has scored 1,289 runs so far in 30 matches. He has scored 3 centuries so far while his World Cup batting average stands at 53.70.

In 2011, on his World Cup debut, Kohli scored an unbeaten 100 against Bangladesh. Interestingly, his most recent WC century (on October 19, 2023), has also come against Bangladesh. In 2015, he scored another century against Pakistan in Adelaide.

Controversy around Virat Kohli's 48th century

King Kohli’s century against Bangladesh was marred with controversy. Umpire Richard Kettleborough is the subject of a lot of discussion following his decision not to award a Wide Ball. With Virat Kohli at 97 and Nasum Ahmed bowling, India needed 2 runs to win. A delivery that goes down the leg side in limited-overs cricket is instantly referred to as a wide ball. However, Kettleborough did not call it a Wide Ball.

This is Virat Kohli’s fourth World Cup. He is the only player, except R Ashwin, who was a part of India’s world champion team in 2011.

Gwen Stefani tears up during Blake Shelton's sweet speech: Pics from Walk of Fame ceremony

 



Gwen Stefani has a star on the Hollywood Walk of Fame, and it's "Luxurious."

On Thursday, her three sons, husband Blake Shelton and her family celebrated the Grammy-winning No Doubt singer and "The Voice" coach during her Hollywood Walk of Fame ceremony, where her star was unveiled on the sidewalk outside the iconic Amoeba Music store.

Several music industry heavyweights paid homage to her career as an artist before Shelton took to the stage to praise his wife, whom he said has a talent "she was just born with." Shelton himself received his star on Hollywood Boulevard in May.

"She has risen to the top over and over again with her unique style that has made the world fall in love with her − not as much as me, though," he said.

Gwen Stefani tears up during husband Blake Shelton's speech




As her husband of two years lauded Stefani's personal and professional accomplishments, calling her "my all-time favorite songwriter," she occasionally wiped away tears.

"It was clear to me that she was a mother, first and foremost, over anything else in the world," Shelton said of first meeting her in 2014. "And now standing here, almost 10 years later after I first met her, I can say without question that being a mother is still the most important thing in her life."

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...