Showing posts with label சாளக்கிராம_பூஜை. Show all posts
Showing posts with label சாளக்கிராம_பூஜை. Show all posts

Thursday, February 3, 2022

சாளக்கிராம_பூஜை


சாளக்கிராம_பூஜை


#செய்வதன்_பலன்கள் *

1. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
   கொலை செய்தவனின் 
   பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
    தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
    சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
    தெறித்து ஓடுவதுபோல.
    பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது 
    பக்தியேஇல்லாது அல்லது 
    எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
    நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு 
   எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
    நைவேத்தியம்
    இப்பூஜையினை_செய்பவர்கள்
    விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
    வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை
    பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
    தேவனாகிறான்...! 
    அவன் சாதாரண மனிதன் 
    அல்லன்...!

9. சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம். 
     சர்வ பாபங்களையும நாசம்_
     செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட
      சாளக்கிராம பூஜையினால் பரகதி
     அடைகிறார்கள். பக்தியோடு 
     செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி
      உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் 
      ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
      வைகுண்டத்தில் இருப்பதைவிட 
      ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
      பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால்  
     அக்னிஹோத்தரமும் பூதானமும் 
     செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
     ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை 
      செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் 
      கொண்டு பூஜை செய்தால் 
      பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை 
      பன்னிரெண்டு கல்பகாலம் 
      பூஜை செய்தபலன் 
      ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
      சாளக்கிராம பூஜையினால் 
     முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ
     செய்யாமலே சாளக்கிராம
      பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ 
      புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
      பலனும், 
      சர்வ யக்ஞம் செய்த பலனும்
       கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
       சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
       அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
       செய்துகொண்டே சாளக்கிராம பூஜை
       செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் 
       சமஸ்த லோகங்களும், 
       சமஸ்த தேவதைகளும் இருப்பதாக 
       ஐதீகம்.

21.சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்உள்ளும் புறமும் 
      சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
       சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
       பிறவாநிலை கிடைத்துவிடும்.

ஓம் நமோ நாராயணா

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...