Showing posts with label ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு". Show all posts
Showing posts with label ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு". Show all posts

Friday, March 18, 2022

ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு

உண்மை நிகழ்வு

உத்திராதி மடத்தில் சில காலம் முன்பு த்வாதஸி அன்று பூஜைகள் நடந்து முடிந்து நைவேதனம்,தீபாராதனம் எல்லாம் முடிந்து பாரணம் செய்ய இலை போட்டு பிராம்மணர்கள் அமர ஏற்பாடுகள் நடந்து கோண்டிருந்தது.

அந்த த்வாதஸி விசேஷம் எதுவெற்றால்,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் அங்கே இருந்தார்.

அப்படி இலை போட்டு பறிமாரிக் கொண்டிருந்த வேளையில் எல்லோருக்கும் சந்தனம் மற்றும் அங்கார அஷ்தை வழங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்..

அந்த வேளையில் ஜடாமுடியுடன் உடல் முழுவதும் பட்டை பட்டையாக திருநீரு தரித்த வெள்ளை அங்கவஸ்திரம் தரித்த நல்ல சிவப்பு நிரமுடைய தீக்ஷிதர் ஒருவர் உத்திராதி மடத்தின் உள்ளே வந்து அலங்காரபந்தி இலையில் வந்து அமரந்து..அதிகாரத்துடன் ஸ்வாமிகளை பார்த்து """என்ன த்வாதஸி பாரணம் ஆக இவ்வளவு நேரமா""","""பசிக்கிறது சீக்கிரம் பரிமாருங்கள்""",என்று உரத்த குரலில் ஆணையிட்டார்.

இதை கேட்ட சுவாமிகளின் சிஷ்யர்கள் மற்றும் அங்கிருந்த மாத்வர்கள் முகம் சுளித்து கோபமுடன் முணு முணுத்தனர்..

இதை மிக சாந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உத்திராதி மடத்து பீடாதிபதி ஸ்வாமிகள் கையை உயர்த்தி அணைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி,உடனே எல்லோருக்கும் பரிமாற சொன்னார்..

அன்று த்வாதஸி பாரணம் நன்று நடந்து முடிந்தது,அங்கே வந்திருந்த அந்த ஆஜானுபாகுவான ஸ்மார்த்த ஸந்நியாஸி ஒருமுறைக்கு இரு முறை இலையில் பரிமாரிய பதார்த்தங்களை நன்கு ருசித்து உண்ட பிறகு,கை அலம்பி கொண்டு வந்தார்.

வந்தவர் ஸ்வாமிகளை ஆசிர்வதித்து விட்டு பல மந்திராச்சதம் வாங்காமல் மடத்தை விட்டு வெளியேரி சென்றார்.

உடணே ஸ்வாமிகள் இரண்டு சிஷ்யர்களை அவர் பின்னால் அனுப்பி அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி எங்கே செல்கிறார் எண்று கண்டறிந்து வரச்சொல்லி அனுப்பிவிட்டு,மற்றவர்களுக்கு பல மந்திராச்சதம் வழங்க அமர்ந்தார்..

உடனே அங்கிருந்த பக்தர்கள் ஸ்வாமிகளிடம் பல வாரியாக அந்த ஸ்மார்த்ண ஸந்நியாஸியை எப்படி அனுமதித்தீர்கள் என்பது போல கேட்க தொடங்கினார்கள்,

உடனே ஸ்வாமிகள் இதற்கு விடை அவரை பின் தொடர சொல்லிஅனுப்பிய இரண்டு சிஷ்யர்கள் வந்து சொல்வார்கள் என்று சிரித்த படி பதில் சொன்னார்..

சில மணி நேரம் கழித்து அந்த சந்நியாசியை பின் தொடர்ந்த அந்த இரு சிஷ்யர்கள் வந்தார்கள்..

அவர்கள் கண்ட காட்சியை ஸ்வாமிகள் மடத்தில் கூடியிருந்த பக்தர்களிடம் விளக்கச் சொன்னார்..

அந்த சிஷ்யர்கள் அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி வெகு தூரம் நடந்து சென்றதாகவும் பிறகு ஒரு சிவாலயத்திற்குள் நுழைந்ததாகவும்,இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,சிவலிங்க சந்நதிக்குள் நுழைந்து ஜோதி வடிவில் லிங்கேஸ்வரருடன் ஐக்கியமானதாக பக்தி பரவஸத்துடன் விளக்கினார்கள்..

இதை கேட்டுக் கொண்டிருந்த மடத்து பக்தர்கள்,பக்தி பரவஸத்துடன் "" ஓம் நமச்சிவாய""ஓம் நமச்சிவாய""என்று ஈஸனை நேரில் கண்ட ஆனந்த அனுபத்தில் திளைத்து,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் வாழ்க எனவும் கோஷமிட்டு அவரின் ஆசிகளை பெற்றார்கள்..

"ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு","ஜெய் சத்யாத்ம தீர்த்தரு".

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...