Monday, January 31, 2022

Terminalia chebula-kadukkai-கடுக்காய்

 கடுக்காய் கல்பம்


கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும். 
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம். 


கடுக்காய் லேகியம்
கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும். முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். 

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும். 

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.


English,

1,

Half a kilo (yellow) mustard, half a liter of cow's milk is required for mustard fermentation. Put the mustard in the milk and bake in the oven for a quarter of an hour. When it cools down, remove and let the mustard dry in the sun. After drying for three days, grind it in a mixer with the seeds and place in a glass bottle. Mustard seed is poisonous. However, by distilling it with milk, the toxin is removed and it becomes fermented.Take a teaspoon of this mustard paste and mix it with hot water and drink it after dinner. Unlike other kalpas, only mustard kalpas can be eaten for many years.

2,

You may have heard of mustard legume. There are some who say this as a joke. In fact, eating mustard legumes will make even gray hair grow thicker. Histories say that the buildings built in the past were built with mustard to be sure. Mustard is mentioned in paranormal medical texts about four thousand years ago. This should be used after removing the seed.There are many types of mustard. Pinch mustard in it will cure constipation. Loosen the stool; Aromatizing and polishing the body. Red sorghum can cure tuberculosis (TB)and beautify the lean body. Varicose veins repel various diseases; Increases sperm count.Take five grams of mustard powder and mix it with hot water and drink it before going to bed at night. Eating a zone (48 days) of ginger, zucchini and mustard eliminates digestive disorders; Constipation is cured. Add a little anise (fennel) to the mustard powder, add water to a clay pot and distill well. If you mix pure one with it and drink it twice a day, you will lose weight. Grind the required amount of ginger, chilli, tamarind, black gram with three mustard skins in ghee, add salt and wash. If it is mashed and eaten with asparagus, the digestive power will increase; Constipation recedes;Gain physical strength.Mustard, which cures various diseases like this, will cure physical ailments; Removes male cell defects and gives a youthful appearance.


Sunday, January 23, 2022

தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில், செட்டியாபத்து தலவரலாறு

                                   தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி                                                      திருக்கோவில்,

இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது. அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.


ஜாதி பேதம் நீங்கிய வரலாறு 

எல்லா ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ள வில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், ‘அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்’ என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான். மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

பலன்கள்

 ‘ஹரி ஓம் ராமானுஜாய’ ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம்.

 தரிசன நேரம்: காலை 7AM-8.30AM மணி வரை மதியம் 11AM-12 மணி வரை மாலை 5.30PM- 7 மணி வரை.

முகவரி: திருச்செந்தூர், தூத்துக்குடி, செட்டியாபத்து, தமிழ்நாடு 628210. 

தொலைபேசி எண். 04639-250630.


Thursday, January 20, 2022

Geetha Matriculation Higher Secondary School, Thoothukudi

 

                                 Geetha Matriculation Higher Secondary School, thoothukudi






* Std : Lkg To X Std
* Office Timings : 9.15 Am To 5.30 Pm
* Board Of Education : Matriculation.
* Basic Facilities : Play Ground, Computer Lab, Science Lab, Library, Transport.
* Extra Facility : Smart Classes, Tata Class Edge.
* Extra Activities : Skarate, Yoga, Scatting, Chess, Bharatanatyam.
* Admission : April - May



Signal Ponraj Night Clup Parota Shop Thoothukudi

                                                                    Ponraj Night Clup-Thoothukudi,


Signal Ponraj Night Clup Parota Shop Thoothukudi,tamilnadu ,india,

சுவையான பரோட்டா சாப்பிட சிக்னல் பொன்ராஜ் நைட் கிளப் ,தூத்துக்குடி,தமிழ்நாடு,,இந்தியா

Tata PUNCH-India's Safest Car

                                               Tata PUNCH-India's Safest Car

The Tata Punch has achieved a five star rating for adult occupant protection and four stars for child occupant protection in Global NCAP’s latest #SaferCarsForIndia crash tests.

The Tata Punch was tested in the most basic safety specification, fitted with two airbags, ABS brakes and ISOFIX anchorages. The Punch can be improved by equipping the model with standard Electronic Stability Control (ESC), side head impact protection systems as standard, and 3 point belts in all seating positions. It is important to highlight once again Tata’s decision to install both child occupant’s as rearward facing, demonstrating that this position offers the best safety option as both child dummies received good protection.

The Punch was tested in compliance with the requirements of Global NCAP’s voluntary test procedure.

Tuesday, January 18, 2022

Cumin -Jeerakam -சீரகம் பயன்கள்

                                                             சீரகம் பயன்கள்


சீரகத்த நாட்டுச் சக்கரையோட சேர்த்து சாப்ப்பிடும்போது, தேக வன்மை கிடைக்குது. கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீருது. சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகுது

Black pepper, and ginger increse the ph value

                                                  HUMAN PH VALUE INCRECING TIPS


1,Black pepper 5grams,

2,Ginger 10 grams ,

3,water (h20)500 ml,

 boiling the water and insert the incradiants wait the 15 min in boiling ,

and after 1hours cooling the madicine water ,dringing 100 ml  30 min one time in after food ,

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...