Showing posts with label முருகரின் பேரில் குஜராத்தில் எப்படி ஒரு கோவில். Show all posts
Showing posts with label முருகரின் பேரில் குஜராத்தில் எப்படி ஒரு கோவில். Show all posts

Monday, January 30, 2023

முருகரின் பேரில் குஜராத்தில் எப்படி ஒரு கோவில்

சைவ வழிபாடு உலகம் முழுவதிலும் பெரும் புகழ்பெற்றது. சிவனை பல விதமான வடிவங்களில் வழிபடும் ஏராளமான கோவில்கள் இந்தியாவெங்கும் உண்டு.

ஆனால் இந்த சிவன் உலகின் மிகப்பெரும் அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறார்.

இவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் கண்களுக்கு தென்படுவார். இங்கு இருக்கும் சிவன் கோவிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டறிந்துள்ளனர். இக்கோவில் அரபிக் கடலின் கரையில் கட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரும்பாலும் கடலினுள் மூழ்கி விடுகிறது இக்கோவில்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு முறை மட்டுமே இக்கோவில் தென்படுகிறது. அவ்வாறு தென்படுகிற வேளைக்காக கால் கடுக்க காத்திருக்கின்றனர் பக்தர்கள். ஒவ்வொரு நாளும் அலைகள் உள்வாங்கி நீர்மட்டம் குறைகிற போது சிவன் தரிசனம் கிடைக்கையில் பெரும் ஆராவாரத்துடன் பக்தர்கள் ஆர்பரிக்கின்றனர்.

அரக்கனான தாராகாசுரனை வதைத்த போது, மிகவும் குற்றவுணர்வுடன் தவித்துள்ளார் முருகர். காரணம், தாராகசுரன் சிவ பக்தர் என்பதால். இந்த குற்ற உணர்விலிருந்து விடுபட, என்ன செய்யலாம் என பிரம்ம தேவரை வணங்கி முருகர் வேண்டிய போது. சிவ பக்தர் அரக்கராக இருந்ததாலேயே அவன் கொல்லப்பட்டான் இதற்காக குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை. இருந்தாலும், குற்ற உணர்வு அதிகமாக இருக்குமாயின் சிவனை வழிபடுவதே இதற்கு வழி என கூறியுள்ளார். அப்போது முருகர் உருவாக்கிய திருத்தலமே இது என்பது வரலாறு.

அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நன்நாட்களில் சிவனின் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர் பக்தர்கள். அதிசயம் போல், அந்நாளில் நிச்சயம் அலை விலகி அவர் தரிசனமும் கிடைக்கிறது. பக்தி பெருக்கில் வரும் பக்தர் கூட்டத்தை போலவே, இந்த இயற்கையின் அதிசயத்தை ரசிப்பதற்கும் பெருங்கூட்டம் இங்கே வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து, ஏன் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் இங்கே குவிகின்றனர்.

இந்த கோவில் தனித்துவமான கோயிலாகும், இங்கு 24 மணி நேரத்தில் இரண்டு முறை கடல் நீர் கோயிலை மூழ்கடித்து விடும் . காரணம் அதிக மற்றும் குறைந்த அலை, இந்த நிகழ்வு தினசரி நடக்கிறது.

இங்குள்ள விசேஷமே இந்தப் சிவபெருமான் தினம் தினம் கடலில் மூழ்கி எழுவதுதான். கடல் அலைகள் ஏறுமுகமாக இருக்கும்போது அலைகள் சிறிது சிறிதாகக் கோயிலை மூழ்கடிக்கும். பிறகு கடல் நீர் காலையில் வடியத் தொடங்கும்போது ஆலயம் வெளியே காட்சி தரும். அமைதியையும் தனிமையையும் விரும்புவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வாங்கும் வரை இந்த கோயில் இருந்தது
யாருக்கும் தெரியாமல் இருந்தது. கடல் உள்வாங்கியதை அடுத்தே இந்த கோயில்
இருப்பது தெரிய வந்தது.

கங்கை, கடலில் கலக்கும் கங்கா சாகரில் பலமுறை குளிப்பதன் பலன் மஹீசாகரில்
ஒருமுறை குளித்தாலே கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர்
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வர லிங்கம் நான்கடி உயரம். விட்டம் இரண்டடி. இந்த லிங்கத்திற்கு 24 மணி நேரத்தில் இரு முறை ஏழு நதிகளும் அபிஷேகம் செய்வது சிறப்பு. பூஜை
நேரத்தில் கடல் வற்றி லிங்கம் முழுமையாக வெளிப்படும் அதிசயமும் நிகழ்கிறது.
அப்போது கடல் மட்டம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வர லிங்கத்தை அருகில் சென்று தரிசிக்க கரையிலிருந்து
பாலம் உள்ளது. காட்மண்ட் பசுபதிநாத் கோயில் பாணியில் கோபுரம் அமைந்துள்ளது.
ஆண்டின் சில நாட்களில் கோபுரத்தின் உயரத்திற்கு கடல் பொங்குகிறது. இந்த
ஆலயத்துக்கு வந்து இறைவனை தரிசிக்க, சிராவண அமாவாசை, சிவராத்திரி,
சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கோயிலுக்கு எதிரே உள்ள ஆசிரமம் ஒன்றில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளும், இலவச உணவும் வழங்கப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க இவ்வூரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள்
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதால் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது கவி-கம்போய்.

எல்லையற்ற வானமும், அகன்ற நீலக்கடலும், ஸ்தம்பேஸ்வர லிங்க வடிவில் பரம்பொருளும் கூடிய இத்தலத்தை பக்தர்கள் தரிசித்து பிறவிப் பயன் பெறலாம். கடலின் மேல் எழுந்தருளும் கருணையாளனை வழிபட்டால் இல்லத்தில் கடல் போல் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

முருகருக்கு ஏற்பட்ட திட்டை போக்க அவரால் கட்டப்பட்டதாக இந்த கோவில்பின் ஒரு கதை உள்ளது ,இதுவே பெரும்பாலோனரால் நம்பப்படுவதுமாகும். தமிழ் கடவுளாக பார்க்கப்படும் முருகரின் பேரில் குஜராத்தில் எப்படி ஒரு கோவில் இருப்பது ,தமிழரின் நீட புகழை நீடிக்க செய்து உள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...