Saturday, October 14, 2023

பகையால் அழிவு வராமல் காக்கும் ஆயுதம்

 எப்போதோ நூலகத்தில் படித்தது..

திருமண நாளன்று மணமகள் வீட்டார் மாப்பிள்ளைக்கு
சீர் வரிசை பொருட்கள் தருவார்கள்.
ஆனால் உண்மையில் சீர் வரிசை யாருக்கு தெரியுமா கொடுக்க வேண்டும் மொழிகளுக்கு எல்லாம் தாயாக விளங்குகிற தமிழ் மொழியை புதுப்பித்து, உயிர்ப்பித்து கொண்டிருக்கிற கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கு தான் சீர் வரிசை கொடுக்க வேண்டுமாம். என்னவோரு மாறுபட்ட சிந்தனை!
இந்த தொழில்நுட்ப உலகத்தில் நாம் மறந்து விட்ட கதாநாயகர்கள் தான் இந்த எழுத்தாளர்கள்.
இவர்களையே ஊக்கப்படுத்தவது ஒவ்வொரு வாசகனின் கடமையும் கூட.
எனவே உங்கள் பகுதியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று ஒரு புத்தகமாவது வாங்கி வாசித்து மகிழுங்கள்.
(நண்பர்கள் யாரேனும் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்று புத்தகங்கள் வாங்கினால் நீங்கள் வாங்கும் ஒரு புத்தகத்திற்கான தொகையை நானே செலுத்துகிறேன். உங்கள் வாசிப்பு உலகத்தில் நானும் ஒரு
பங்குதாரராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்)
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்..
(பகையால் அழிவு வராமல் காக்கும் ஆயுதம் அறிவு ஒன்று தான்)

ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள்

 *உங்களால் கீழே உள்ள எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா?*

*ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள் மட்டுமே.*
*1*. நியூமேரோ யூனோ என்றால் என்ன?
*2.* ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்?
*3.* டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ?
*4.* இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன?
*6.* இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது?
*7.* நீரின் Ph மதிப்பு என்ன?
*8.* சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன?
*10.* எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன?
*11.* ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்?
*12.* ஒரு அடி எத்தனை அங்குலங்கள்?
*15.* ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்?
*16.* விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன?
*17.* இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன?
*18.* மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
*19.* 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது?
*20.* டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன?
*21.* தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்?
*23.* மனித உடலில் எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன?
*24.* அசோக சக்கரத்தில் எத்தனை வரிகள் உள்ளன?
*25.* எம்.எல்.ஏ ஆக தகுதி பெறும் வயது என்ன?

*"வினா எண்களே விடைகள்"*
*நல்லா இருக்குல்ல*

வாய்மை எனப்படுவது யாதெனின்

 இப்படி ஒரு குறளை எழுதியதற்காக வள்ளுவருக்கு ஆயிரம் கோடியில் கூட சிலை வைக்கலாம்.

சமீபத்தில் ஒரு பேருந்து பயணம், ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள பலகையில் ஒரு திருக்குறள் ஒன்று எழுதி இருந்ததை பார்த்தேன்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
இதன் பொருள் என்னவென்று தேடிப்பார்க்கிறேன்.
. இதன் விளக்கத்தை கேட்டு வியந்து நிற்கிறேன். இதை எல்லோரும் உணர்ந்தால் போதும் நீயா நானா போட்டி இருக்காது, கூட்டணி சண்டைகள் இருக்காது, விவாகரத்துகள் இருக்காது, உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும். இதயத்தில் வைக்க வேண்டிய திருக்குறள் இது. இதன் பொருள் இதுதான்
"பிறருக்கு எள் முனை அளவு கூட தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுவது தான் வாய்மை" என்கிறார்,வள்ளுவர்.
திருக்குறள் எக்காலத்திற்கும் பொருத்தமானது!
திருவள்ளுவர் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்!

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...