Showing posts with label திருவண்ணாமலை கிரிவலம். Show all posts
Showing posts with label திருவண்ணாமலை கிரிவலம். Show all posts

Friday, June 17, 2022

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்.
************************************
பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞான மும், முக்தியும், அருளும் திருவண்ணாம லை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது?

ஜோதியாக தோன்றி பின்மலையாக அமர் ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத் தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோ ன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவி ளையாட லால் திருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார்.

புராண வரலாறு வருமாறு:
*****************************
ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமா னின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங் கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது இதனா ல் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண் டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார்.

அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத் தார். வே ண்டிய வரம் கேள் என்றார். அதற் கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறி னார் அதை ஏற்றுக்கொண்ட பார்வதி தே வி திருவ ண்ணாமலையில் ஈசனே மலை யாக வீற்றிரு ப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமா னையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதை யில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்தி லும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வ ரராக காட்சி கொடுத்தார்.

அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்ம தித்தார். இந்த முறையில்தான் திருவண் ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள் கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்க ள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாம லையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணா மலையாரின் அருளை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட் டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணா மலையில் கிரிவலம் செல் லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் கிரிவ லம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மறைந்து போனது. சித்தர்கள், ரிஷிகள், மகா ன்கள் மட்டும் அங்கு அரூப வடிவில் கிரிவலம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மூவேந்தர்கள் ஆட்சியின் போது கிரிவலத்தின் மகிமையை தெரிந் து கொள்ளும் வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை இந்த உலகுக்கு பெற்று தந்த சிறப்பு பாண்டிய மன்னனுக்கு கிடைத்தது.

அந்த பாண்டிய மன்னனின் பெயர் வஜ்ரா ங்க தன். ஒரு தடவை அவன் வேட்டையாடு வதற்கா க காட்டுக்கு சென்றான். அப்போ து அழகான புனுகுப் பூனையை கண்டான். வாசனையோடு திகழ்ந்த அந்த பூனையை பிடிக்க முயற்சி செ ய்தான். ஆனால் அது அவனிடமிருந்து தப்பி ஓடியது. மன்னன் தனது குதிரையில் விடாமல் விரட்டினான். அந்த பூனையோ அருணாசலம் மலையை அடைந்தது.

என்றாலும் மன்னன் வஜ்ராங்கதன் தொட ர்ந்து பூனையைவிரட்டினான். அந்த பூனை திருவ ண்ணாமலை மலையை கிரிவலம் போல சுற்றி வந்தது. மலையை முழுமை யாக சுற்றி முடித்ததும் அந்த பூனை ஒரு இடத்தில் கீழே விழுந்து இறந்தது.

அந்த சமயம் மன்னனை சுமந்து வந்த குதி ரையும் கீழே விழுந்து உயி ரை விட்டது. மன்னன் மட்டும் உயிர் தப்பினான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

குதிரையும், பூனையும் கந்தர்வர்களாக மாறி காட்சி அளித்தனர். அவர்கள் இருவ ரும் விண்ணுலகம் செல்ல தயார் ஆனார் கள். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன் வஜ்ராங்கதன் அவர்கள் இருவ ரிடமும் “நீங்கள் யார்? எதற்காக இந்த திருவிளையாடல் நடக் கிறது” என்று கேட்டார்.

அப்போது அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தனர்.

“நாங்கள் இருவரும் வித்யாதரர்கள். ஒரு தடவை துர்வாச முனிவர் இருந்த வனத்து க்கு ள் சென்று அங்கிருந்த செடி-கொடிக ளை நாங் கள் நாசமாக்கி விட்டோம். இத னால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் இருவரையும் பூனை யாகவும், குதிரையா கவும் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். பிறகு அவரே சாப விமோ சனத்திற்கான வழியையும் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு சென்று வசியுங் கள். ஒரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் வருவான். அவன் மூலம் உங்க ளுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படி நாங்கள் இருவரும் திருவண் ணாமலைக்கு வந்து வசித்து வந்தோம். நீங்கள் விரட்டியதால் நாங்கள் சிவபெரு மானே மலையாக இருக்கும் இந்த புண்ணிய மலையை கிரிவலமாக வரும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளோம்.

நீ இந்த மலையை நடந்து வராமல் குதிரை யில் வந்ததால் உனக்கு இந்த கிரிவலத்தி ற்கான பலன் கிடைக்கவில்லை. உனக்கு அனைத்து செல்வமும் முக்தியும் வேண்டு மானால் இந்த மலையை நடந்து கிரிவலம் செய்ய வேண்டும். எங்களுக்கு முக்தி கிடைத்ததால் விடைபெறு கிறோம்” என்று கூறியபடி விண்ணுலகம் சென்று விட்டனர்.

அதன் பிறகே வஜ்ராங்கதன் மன்னனுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் ஈசனின் அருளைப் பெற்று அத்தனை சிறப்புக ளையும் பெற முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் உடனடி யாக மன்னர் பதவியில் இருந்து விலகி னான். ஆட்சி பொறுப்பை தனது மகன் ரத்னாங்கத பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்து தினமும் கிரிவலம் செய்ய ஆரம்பித்தான். அதோடு மக்களையும் கிரிவலம் செல்ல வைத்தான்.

அதன் பிறகே திருவண்ணாமலை கிரிவ லம் பார் புகழும் வகையில் பரவியது.

இதற்கிடையே சித்தர் பெருமக்களும் கிரி வல த்தின் சிறப்பை மக்களுக்கு உணர்த் தினார்க ள் திருவண்ணாமலை மலை ஜோதி லிங்க வடிவமாகி பிறகு ஸ்ரீ சக்கர வடிவத்தில் அமைந்துள்ள உலகின் உன்ன தமான மலை என்ப தையும் அதை சுற்றி வந்தால் பிறவி பிணிகள் அனைத்தும் தீரும் என்பதையும் சாதாரண மனிதர்களி டம் சித்தர்கள் தெரிய வைத்தனர்.

இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தா ல் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று அருணாசல புராணம் உள்பட பல் வேறு புராண ங்களில் குறிப்பிடப்பட்டுள் ளது. மலையை சுற்றி நடந்து வந்த சிவந்த பாதங்களை கண்டாலே நாலாவித பாவங் களும் காணாமல் போய்விடும்.

கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒரு வரது உடலில் பட்டாலே அவரை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பி டப் பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரவே ண் டும் என்று சொன்னாலே பிரம்மஹத் தி தோ ஷம் தீர்ந்து விடும்.

ஒரு அடி எடுத் து வைத்தால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜ பதவியை பெறக்கூடி ய யாகம் செய்த பலன் வரும். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்கும். நான்குஅடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோக பலன்கள் கிடைக்கும்.

கிரிவலம் வந்து சிவபெருமானிடம் பார்வ தி தேவி பலன் பெற்றது ஒரு பவுர்ணமி தினமா கும். எனவே பவுர்ணமியில் கிரிவ லம் செல்வ து கூடுதல் பலன்களை தருவ தாக கருதப்படு கிறது. பொதுவாக திருவ ண்ணாமலையில் எந்த தினத்திலும் எப்போது வேண்டுமானா லும் கிரிவலம் செல்லலாம்.

நேரம்-காலம் கிடையாது. நள்ளிரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் கிரிவலத்துக்கும் திருவ ண் ணாமலை மலையானது ஒவ்வொரு விதமாக காட்சி தரும். அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஆதி காலத்தில் திருவண்ணாமலையில் வருட பிறப்பு, மாதபிறப்பு, பவுர்ணமி, அமா வாசை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி நாட்களி ல் கிரிவலம் செல்வ தை வழக்கத்தில் வைத்தி ருந்தனர். பின் னர் அமாவாசைக்கு கிரிவலம் செல்பவர்க ளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால் சந்திரனின் முழு சக்தியும் பவுர் ணமி தினத்தன்றுதான் வெளிப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்ட பிறகு பவுர்ணமியில் கிரிவலம் செல்வது அதிகரித்துள்ளது.

ஆனால் திருவண்ணாமலையை பொறுத் த வரை 24 மணி நேரமும் கிரிவலம் நடக்கி றது. மலையைச் சுற்றி, எப்போதும், யாரா வது ஒருவர் கிரிவலம் சென்று கொண்டு இருப்ப தை பார்க்கலாம்.

கிரிவல பாதை மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கம் ஆலயங்கள் உள்பட அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்தபடி வந்தால் கிரிவலத்தை முடிப்பத ற்கு சுமார் 4 மணி நேரம் ஆகலாம்.

கிரிவலப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட் ட ஆலயங்கள் தவிர மடங்கள், ஆசிரமங்க ள், தரிசனப் பகுதிகள், சித்தர்களின் ஜீவ சமாதி கள் என பல்வேறு இடங்கள் உள்ளன.

அடி அண்ணாமலை, இடுக்குப் பிள்ளை யாரும் இருக்கிறார்கள். இப்படி கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து இடங்களுக் கும் சென்று வருவதாக இருந்தால் குறை ந்தது 5 மணி நேரமாகி விடும்.

அப்படி இல்லாமல் கிரிவலத்தை மட்டும் மேற் கொண்டால் 3 மணி நேரத்தில் கிரிவ லத்தை நிறைவு செய்து விடலாம். ஆனால் அதற்காக வேக வேகமாக கிரிவல பாதை யில் நடக்க கூடாது.

பஸ்சை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அரக்க பரக்க கிரிவலம் செல்லக் கூடாது. டி.வி. சீரியல் பற்றி பேசிக்கொ ண்டோ அல்லது ஊரில் யார் குடியைக் கெடுக்கலாம் என்று பேசிக் கொண்டோ அல்லது யார் பற்றியாவது புறம் பேசிக் கொண்டோ கிரிவலம் செல்லக் கூடாது.

கிரிவலம் வருவது என்பது சூட்சுமமாக பல நன்மைகளை நமக்கு தரக்கூடியது என்ப தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரிவல பாதையில் உள்ள நம் கண்களு க்கு தெரியாத சித்தர்கள் அனைவரும் நம் மை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்க ள் என்பதை நம்ப வேண்டும். இந்த பலன் களை எல்லாம் பெற வேண்டுமானால் மனம் ஒரே சிந்தனையில் ஈசனை மட்டும் நினைத்தபடி நமசிவாய என்று உதடுகள் உச்சரித்தபடி வேறு எந்த செயல்களிலும் ஈடுபடாமல் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்..

அது மட்டுமல்ல, எந்த தினத்தில் நாம் கிரிவல ம் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்லும் போது நாம் எப்படி நடந்து கொள் ள வேண்டும்? எந்தெந்த இடங்களில் வண ங்க வேண்டும்? எந்தெந்த இடங்களில் மலையை பார்த்து கும்பிட வேண்டும்?

என்றெல்லாம் வரைமுறை களும், ஐதீகங் களும் உள்ளன. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கிரிவலம் சென்று வந் தால்தான் நீங்கள் கிரிவலம் மேற் கொள்வ தற்கான முழுபலன்களும் கிடைக்கும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...