Showing posts with label கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.. Show all posts
Showing posts with label கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.. Show all posts

Friday, August 5, 2022

கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரம் மலர்களை அர்ச்சிக்க வேண்டும் என்பது கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரமாவது மலரை பறிக்க மிகவும் ஆவலோடு சென்றது கஜேந்திரன் தடாகம் சலன மின்றி இருந்தது தன்னுடை பரந்த பாதத்தை நீரில் வைத்தது உடனே தடாகம் அதிர்ந்தது எங்கிருந்தோ வந்த முதலை அதன் கால்களை பற்றி கொண்டது ஆனைக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை உடனே காலை உதறிவிட்டு செல்லாம் என முயன்ற போதுதான் முதலையின் பலத்தை உணர்ந்தது உடனே யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க இப்படியே பல ஆண்டுகள் ஓடியது யானைக்கு புத்தி வந்தது இனி நம் பலத்தை நம்பி பயன் இல்லை என்று கூக்குரல் இட்டது.

சகல தேவர்களையும் படைத்து அவர்களை பரிபாலனம் செய்வது எதுவோ சகல லோகங்களிலும் அனுவில் இருந்து அண்டம் முழுவதும் நிறைந்தது எதுவோ என்றுமே அழிவற்று சாச்வதமாக இருப்பது எதுவோ அனைத்தையும் தாங்கி நிற்கும் பிரமாண்டம் எதுவோ தமக்கு மேல் ஒருவரும் இல்லாத ஆதி மூலம் எதுவோ அது எம்மை காக்கட்டும் என ஹே ஆதி மூலமே என்று அலறியது.

இந்திரலோகம், ப்ரம்மலோகம் கைலாயத்தில் இருந்து பார்த்தவர் யாம் இல்லை யாம் இல்லை என்று அமர்ந்தனர். ஸீ ஹரி கருடா என்று அலறினான் தன்னை அலங்காரம் செய்து கருடன் புறப்படும் முன்னே சண்டமாருதம் போல் நொடிக்குள் வந்தான் கருடனை விட்டு விட்டு எடுத்தான் சக்ராயுதத்தை விடுத்தான் முதலையை நோக்கி உடனே கஜேந்திரனுக்கு முதலையிடம் இருந்து விமோசனம் கஜேந்திரனோ தேவாதி தேவா தங்களை அடியேன் அழைத்தது இந்த அற்ப உயிரை காக்க அலல இந்த தாமரையை தங்கள் திருவடியில் சமர்பிக்கவே என்று ஆனந்த கண்ணீர் விட்டது கருணாகர மூர்த்தியான பரம் பொருள் இதை கேட்டதும் தண்ணீரை காட்டிலும் இலகுவான அவன் மனது சும்மா இருக்குமா என்ன கஜேந்திரன் பாதத்தை தன் மடியில் கிடத்தி முதலை பல் பட்டு இரத்தம் வந்த இடத்தில் தன் பட்டு பீதாம்பரத்தை எடுத்து தன் வாயினுள் எச்சிலை தொட்டு அதற்கு ஒத்தடம் கொடுத்து தன்னை தாயிலும் மிக்க தயாபரன் என்று நிருபிக்கிறான்.

ஆஹா ஆஹா ஹரி ஹரி உம்மை மிஞ்சியவர் எவர்!

ஈடும் எடுப்பும் இல் ஈசன் அல்லவா நீ

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...