Friday, March 18, 2022

பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால்,

பங்குனி பவுர்ணமி

பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்துவிடும்.

பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள்.  பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

உங்கள் வீட்டு குல தெய்வம் பெண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்களுடைய வீட்டிற்குள் எப்படி வரவேற்பது, ஆண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்கள் வீட்டிற்குள் எப்படி வரவேற்பது என்பதை பற்றிய ஆன்மீக வழிபாட்டு முறையை  தெரிந்துகொள்வோம்.

உங்களுடைய வீட்டு குல தெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும், முடிந்தால் நாளை அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் சிறப்பானது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த முறைப்படி வழிபாட்டினை செய்து பாருங்கள்.

 உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.  காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள உங்களுடைய குலதெய்வத்தின் திருஉருவப் படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் குலதெய்வம், பெண் குலதெய்வமாக இருந்தால்  காலை குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வைத்து விட்டு, தனியாக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குலதெய்வத்திற்கு என்று தனி‌ தீபம் ஏற்ற வேண்டும்.

அதன் பின்பு ஒரு தேங்காய்க்கு மேல் நன்றாக மஞ்சளைக் குழைத்து தடவிக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் திரு உருவ படத்திற்கு முன்பாக தேங்காயை வைத்து, மனதார வேண்டி குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அழையுங்கள். அதன் பின்பு இந்த தேங்காயை எடுத்து உடைத்து தேங்காயின் அடிப்பகுதியை தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிறிய தட்டில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் இந்த தேங்காய் மூடியை அமரவைத்து, தேங்காய்க்கு உள்பக்கத்தில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய பெண் குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் அழைத்தால், நிச்சயமாக அந்தப் பெண் குலதெய்வம், அந்த தீபம் எரிந்து முடிவதற்குள், உங்கள் வீட்டிற்குள் வந்து அருள்புரியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

அடுத்தப்படியாக உங்களுடைய குலதெய்வம் ஆண் குலதெய்வமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும். ஒரு சிறிய பித்தளையில் இருக்கும் கலச சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு கலச சொம்பு இருந்தாலும் பரவாயில்லை. அதன் உள்ளே சுத்தமான தண்ணீரை நிரப்பி விட்டு, அந்த தண்ணீரில் மஞ்சள் பொடி, கிராம்பு 2, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும். 5 மாஇலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள்.

இந்த கலச சொம்பு மேல் ஒரு தேங்காயை நிற்க வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளுங்கள். இந்த கலசத்தை உங்கள் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். தீப தூப ஆராதனை காட்டி கலசத்தை வழிபாடு செய்துவிட்டு, ஒரு பெரிய அளவிலான கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்து, அந்த கற்பூரம் கரைவதற்குள், உங்கள் வீட்டு குல தெய்வம் அந்த கலச சொம்பில் வந்து அமர வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம்.  மாலை 6 மணிக்கு மேல் அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலின்படி குல தெய்வம் வந்து உங்கள் வீட்டில் சந்தோஷமாக குடிகொள்ளும். மற்ற நாட்களில் வழிபாடு செய்து பலன் பெறுவதை விட, இந்த பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் அல்லாமல் உங்கள் வீட்டின் முறைப்படி, உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும், தாராளமாக இன்று பௌர்ணமி  தினத்தில் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும் 

நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்

ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு

உண்மை நிகழ்வு

உத்திராதி மடத்தில் சில காலம் முன்பு த்வாதஸி அன்று பூஜைகள் நடந்து முடிந்து நைவேதனம்,தீபாராதனம் எல்லாம் முடிந்து பாரணம் செய்ய இலை போட்டு பிராம்மணர்கள் அமர ஏற்பாடுகள் நடந்து கோண்டிருந்தது.

அந்த த்வாதஸி விசேஷம் எதுவெற்றால்,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் அங்கே இருந்தார்.

அப்படி இலை போட்டு பறிமாரிக் கொண்டிருந்த வேளையில் எல்லோருக்கும் சந்தனம் மற்றும் அங்கார அஷ்தை வழங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்..

அந்த வேளையில் ஜடாமுடியுடன் உடல் முழுவதும் பட்டை பட்டையாக திருநீரு தரித்த வெள்ளை அங்கவஸ்திரம் தரித்த நல்ல சிவப்பு நிரமுடைய தீக்ஷிதர் ஒருவர் உத்திராதி மடத்தின் உள்ளே வந்து அலங்காரபந்தி இலையில் வந்து அமரந்து..அதிகாரத்துடன் ஸ்வாமிகளை பார்த்து """என்ன த்வாதஸி பாரணம் ஆக இவ்வளவு நேரமா""","""பசிக்கிறது சீக்கிரம் பரிமாருங்கள்""",என்று உரத்த குரலில் ஆணையிட்டார்.

இதை கேட்ட சுவாமிகளின் சிஷ்யர்கள் மற்றும் அங்கிருந்த மாத்வர்கள் முகம் சுளித்து கோபமுடன் முணு முணுத்தனர்..

இதை மிக சாந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உத்திராதி மடத்து பீடாதிபதி ஸ்வாமிகள் கையை உயர்த்தி அணைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி,உடனே எல்லோருக்கும் பரிமாற சொன்னார்..

அன்று த்வாதஸி பாரணம் நன்று நடந்து முடிந்தது,அங்கே வந்திருந்த அந்த ஆஜானுபாகுவான ஸ்மார்த்த ஸந்நியாஸி ஒருமுறைக்கு இரு முறை இலையில் பரிமாரிய பதார்த்தங்களை நன்கு ருசித்து உண்ட பிறகு,கை அலம்பி கொண்டு வந்தார்.

வந்தவர் ஸ்வாமிகளை ஆசிர்வதித்து விட்டு பல மந்திராச்சதம் வாங்காமல் மடத்தை விட்டு வெளியேரி சென்றார்.

உடணே ஸ்வாமிகள் இரண்டு சிஷ்யர்களை அவர் பின்னால் அனுப்பி அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி எங்கே செல்கிறார் எண்று கண்டறிந்து வரச்சொல்லி அனுப்பிவிட்டு,மற்றவர்களுக்கு பல மந்திராச்சதம் வழங்க அமர்ந்தார்..

உடனே அங்கிருந்த பக்தர்கள் ஸ்வாமிகளிடம் பல வாரியாக அந்த ஸ்மார்த்ண ஸந்நியாஸியை எப்படி அனுமதித்தீர்கள் என்பது போல கேட்க தொடங்கினார்கள்,

உடனே ஸ்வாமிகள் இதற்கு விடை அவரை பின் தொடர சொல்லிஅனுப்பிய இரண்டு சிஷ்யர்கள் வந்து சொல்வார்கள் என்று சிரித்த படி பதில் சொன்னார்..

சில மணி நேரம் கழித்து அந்த சந்நியாசியை பின் தொடர்ந்த அந்த இரு சிஷ்யர்கள் வந்தார்கள்..

அவர்கள் கண்ட காட்சியை ஸ்வாமிகள் மடத்தில் கூடியிருந்த பக்தர்களிடம் விளக்கச் சொன்னார்..

அந்த சிஷ்யர்கள் அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி வெகு தூரம் நடந்து சென்றதாகவும் பிறகு ஒரு சிவாலயத்திற்குள் நுழைந்ததாகவும்,இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,சிவலிங்க சந்நதிக்குள் நுழைந்து ஜோதி வடிவில் லிங்கேஸ்வரருடன் ஐக்கியமானதாக பக்தி பரவஸத்துடன் விளக்கினார்கள்..

இதை கேட்டுக் கொண்டிருந்த மடத்து பக்தர்கள்,பக்தி பரவஸத்துடன் "" ஓம் நமச்சிவாய""ஓம் நமச்சிவாய""என்று ஈஸனை நேரில் கண்ட ஆனந்த அனுபத்தில் திளைத்து,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் வாழ்க எனவும் கோஷமிட்டு அவரின் ஆசிகளை பெற்றார்கள்..

"ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு","ஜெய் சத்யாத்ம தீர்த்தரு".

தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் பொழுது, தேங்காய் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?*

*தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் பொழுது, தேங்காய் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?* 
🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
குறிப்பிட்ட தெய்வங்களுக்கு தேங்காயை உடைத்து வைத்து பூஜை செய்வது முறையானதாக இருந்து வருகிறது. குறிப்பாக விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரனுக்கு தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி தேங்காய்க்கும், ஆன்மீகத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. தேங்காயை சாமிக்காக நீங்கள் உடைக்கும் பொழுது அதில் இருக்கும் தேங்காய் தண்ணீரை முறையாக என்ன செய்ய வேண்டும்.? 
🥥
முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் தேங்காய் உடைக்கும் பொழுது சரிசமமாக உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஒன்று பெரிதாகவும், இன்னொன்று சிறிதாகவும் உடைக்கக் கூடாது. நாம் வேண்டும் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதன் ஒரு சகுனமாக தேங்காய் உடைப்பது உண்டு. தேங்காய் அழுகிப் போகாமல் நல்ல தேங்காயாக இருந்தால், வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம்.
🥥
தேங்காயில் பூ இருந்தால் நல்ல சகுனம் என்றும், தேங்காயில் அழுகல் இருந்தால் அபசகுணம் என்றும் சகுன சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. இப்படி பூஜைக்காக உடைக்கப்படும் தேங்காயில் இவ்வளவு விஷயங்கள் இருக்கும் பொழுது நாம் அந்த தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் தண்ணீரை கீழே ஊற்றுவது சரியா? தேங்காய் உடைக்கும் பொழுது முழுமையாக அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க பட வேண்டும்.
🥥
வீட்டில் பூஜை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது தேங்காயின் முக்கண்களுக்கு நேரே இருக்கும் நரம்பில் ஒரு அடி அடித்தால் சரி பாதியாக உடைந்துவிடும். அது உடையும் பொழுது ஒரு மூடியில் அதன் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை ஒரு தம்ளரில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு தேங்காய் வைத்து அதன் பிரசாதமாக இந்த தண்ணீரையும் எந்த தெய்வத்திற்கு படைக்கிறீர்களோ, அந்த தெய்வத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 🥥
நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காண்பித்த பிறகு தண்ணீரை மூன்று முறை சுற்றி பூமியில் ஊற்றுவது வேண்டும். அப்படி ஆவாஹனம் செய்யும் பொழுது நீங்கள் இந்த தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். மீதம் இருக்கும் தண்ணீரை பூஜை முடித்த பிறகு தீர்த்தமாக அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வேண்டிய பூஜை முழுமையாக நிறைவு பெறுகிறது.
🥥
தேங்காய் உடைப்பவர்கள் மட்டும் தேங்காய் தண்ணீரை முழுவதுமாக குடிப்பதோ, அந்த தண்ணீரை வீணடிப்பதோ கண்டிப்பாக கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் வேண்டிய வேண்டுதல் பலிக்க அந்த தெய்வத்திற்கு முறையாக பிரசாதமாக படைத்து, தீர்த்தமாக அனைவரும் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். தேங்காய் சரி பாதியாக இல்லாமல் உடைத்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதலில் குறை இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.
🥥
இளநீரை போலவே, தேங்காய் தண்ணீரும் உடலுக்கு நிறையவே நன்மைகளை செய்யும். உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, தலைவலி, உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு, பசி, தாகம் அத்தனையும் தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை ஒழித்து கட்டும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே தேங்காய் தண்ணீரை பூஜைக்கு பயன்படுத்தும் பொழுதும், மற்ற நேரங்களிலும் வீணடிப்பதை இனி தவிர்க்கலாமே.

மஹாபெரியவா - 27

மஹாபெரியவா - 27  

 ஸ்ரீமடம் பாலு சபரிமலையை 
விட்டு இறங்கி, எர்ணாகுளம் 
வந்து ஒரு வக்கீலின் வீட்டில் 
வந்து தங்கினார். அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் 
தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், "டேய் நீ ராமய்யர் 
மாமாவைப் பார்க்காமல் 
போகாதே. மஹாபெரியவா 
கிட்டே இருந்து வந்திருக்கே.ன்னு சொன்னா, அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று 
வற்புறுத்திச் சொல்லவே, 
ஸ்ரீமடம் பாலு அதற்கு 
சம்மதித்தார்.

ராமய்யருக்கு வயது 90 இருக்கும். 
இவர் ( பாலு ) காஞ்சி மடத்தில் 
இருந்து வந்திருப்பதாகவும், 
ஸ்ரீமஹாபெரியவாளிடம் 
கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் 
இவர் காலில் திடீரென்று 
விழுந்து நமஸ்கரித்தார். 
ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் 
உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் 
விழுவதா ? அபசாரம் அல்லவா 
என்று பதறினார்.

"நான் ரொம்பச் சின்னவன்.
எனக்குப் போய் நமஸ்காரம் 
பண்றேளே" என்று கண்களில் 
நீர்மல்க படபடப்புடன் சற்று 
தள்ளி நின்றார் ஸ்ரீமடம் பாலு

"டேய் இந்த நமஸ்காரம் 
உனக்கில்லே. நீ கைங்கர்யம் செய்யறியே, அந்த பகவானுக்கு என்றவர், டேய் ஸ்ரீபெரியவா 
சாட்சாத் ஈஸ்வரன் தாண்டா ! 
அவர் சிரஸிலே சந்திரன் 
இருக்கு. கையிலே சங்கு சக்கரம் இருக்கு. பாதத்திலேயே 
ஸ்ரீ சக்ரவர்த்தி ரேகை இருக்கு. 
நீ பார்த்திருக்கியோ?" என்று ஓர் அபூர்வமான தகவலை சர்வ சாதாரணமாகக் கூறினார் 
முதியவர்.

"நாங்க அவா கிட்டேயே 
இருக்கோம். நீங்க சொல்ற 
மாதிரியான ஈஸ்வர அடையாள அம்சங்களை பெரியவா கிட்ட 
நாங்க பார்த்ததில்லையே" 
என்று குரலில் ஏக்கம் தொனிக்கச் சொன்னார் ஸ்ரீமடம் பாலு.

அதைக் கேட்ட ராமய்யர் விவரமாக 
பேச ஆரம்பித்தார்.

"ஒரு நிதர்சனமான உண்மையை 
உன் கிட்டே சொல்றேன். இது 
வரையிலே இதை யார் கிட்டேயும் 
நான் சொன்னதில்லே. ரொம்ப 
காலம் முன்னால, ஸ்ரீபெரியவா 
இங்கே வந்து தங்கி இருந்தா. 
தினமும் அதிகாலை மூணு 
மணிக்கு எழுந்துப்பார். அப்புறம் 
பூஜை, தரிசனம். இங்கே அக்கம் 
பக்கம் இருக்கிற கோயில், உபன்யாசம்.ன்னு ராத்திரி 
பன்னண்டு மணி வரைக்கும் 
ஓயாம உழைப்பு தான். இங்கே 
நாப்பது நாள் இருந்தா. அவர் 
தினமும் இப்படி சிரமப்படுவதை பாத்தப்போ என் மனம் வேதனைப்பட்டுது. அதனாலே 
ஒரு நாள் பொறுக்க முடியாமே 
அவர் முன்னாலே கை 
கூப்பிண்டு நின்னேன்.

"என்ன வேணும் ?" னு 
என்னண்டை கேட்டார்.

"அதைச் சொல்றதுக்கு எனக்கு 
பயமா இருக்கு"ன்னேன்.

"நான் ஒண்ணும் புலி,சிங்கம் 
இல்லே.. பயப்படாமே சொல்லு"

"தினமும் காலம்பற மூணு 
மணியில் இருந்து நடு ராத்திரி வரைக்கும் உங்களுக்கு வேலை 
சரியா இருக்கு. கொஞ்சம் ஓய்வு வேண்டாமா ? வாரத்திலே ஒரு 
நாள் உங்களுக்கு எண்ணெய் 
தேய்ச்சு ஸ்நானம் செஞ்சு வைக்கணும்.ன்னு எனக்கு 
மனசிலே ஒரு ஆசை" என்று 
தயக்கத்தோட சொல்லி 
நிறுத்தினேன்.

அதைக் கேட்டு மகாபெரியவா 
கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, 
"ஓஹோ உனக்கு அப்படியொரு ஆசையா ? சரி சனிக்கிழமை 
எண்ணெய் கொண்டு வா" 
என்று உத்தரவு போட்டார்.

துளசி, மிளகு போட்டு காய்ச்சின எண்ணெயுடன் நான் போனதும், "சனிக்கிழமை மறக்காம வந்துட்டியே"..ன்னு சொன்ன மகாபெரியவா, தன் திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்விக்க 
என்னை அனுமதிச்சா.

இது எனக்குக் கிடைச்ச பாக்யம்" 
என்று சொன்ன ராமய்யர் பின்னர் 
சொன்னவை வியப்பூட்டும் 
விஷயங்கள்.

"பெரியவா சிரசில் எண்ணெய் தேய்த்தேன்.- சங்க சக்கர ரேகை தரிசனமாச்சு. கையில காலுல 
தேய்க்கற போது சக்கரவர்த்தி 
ரேகைகள் தெரிஞ்சது. இதை 
எல்லாம் பார்த்தவுடன் எண்ணெய் பாத்திரத்தை அப்படியே கீழே 
வைச்சுட்டு பெரியவாளை 
நமஸ்காரம் செய்தேன்.

ஏன்னா, அவர் ஈஸ்வரனோட 
அவதாரம் என்பது எனக்குக் 
கொஞ்சமும் சந்தேகமே இல்லாமப் புரிஞ்சுடுத்து. அதனாலே தான் சொல்றேன். அவாளை விட்டுட்டு 
நீ எங்கேயும் போகாதே. நீ செஞ்ச புண்ணியம் அது. பெரியவா
கிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்..ன்னு சொல்லு 
ஏன்னா பாதத்திலே இருக்கிற 
ரேகை அழிஞ்சுடுமோ..ன்னு 
ராமய்யர் பயப்படறார்..ன்னு 
சொல்லு !"

காஞ்சி மகானை விட்டு கடைசி 
வரை கண நேரமும் பிரியாமல் 
இருந்த ஸ்ரீமடம் பாலுவுக்கு 
என்ன பாக்கியம்.

ஓம் ஸ்ரீமஹாபெரியவா 
திருவடிகள் சரணம்🌹🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

படித்ததில் மனம் சிலிர்த்தது

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...