Showing posts with label பிரசாதம் என்பது. Show all posts
Showing posts with label பிரசாதம் என்பது. Show all posts

Thursday, March 10, 2022

பிரசாதம் என்பது


*பிரசாதம் என்பது இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பலவகையான உணவுப் பொருட்கள், 

பூக்கள், 

துளசி...

போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும்.

*ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

*பொதுவாக,

*சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், 

*பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.

*தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.

*ஒருவர் வாங்கிய தீர்த்த பிரசாதத்தை மற்றவரின் கைகளில் இடுவது தவறான செயலாகும்.

*அதே போல, 

*சர்க்கரைப்பொங்கல்,

*புளியோதரை... 

போன்ற பிரசாதங்களை வாங்கும்போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர். 

அதுதான் மிகுந்த பாவமாகும்...

*விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. 

ஏனென்றால், 

அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது.

*உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம்.

*நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான். 

அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.

*அ வ்வாறு செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன...

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...