Showing posts with label தர்மசங்கடம். Show all posts
Showing posts with label தர்மசங்கடம். Show all posts

Wednesday, February 23, 2022

தர்மசங்கடம்

 நமக்கு ஒரு காரியத்தைச் செய்வதற்கு இஷ்டம் இல்லை. ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. அப்படி என்றால் அப்படிப்பட்ட ஒரு நிலைமை தான் நாம் தர்மசங்கடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு என்கிறார் ஒரு ஆன்மீகப் பேச்சாளர். 

தர்மசங்கடம் என்பது மனுஷன் எத்தனையோ தர்மங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு தர்மங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில் அவன் இந்த இரண்டு தர்மத்தில் எந்த தர்மத்தை செய்வது எந்த தர்மத்தை விடுவது என்று தவிக்கிறான்
அதுதான் தர்மசங்கடம்.

 இராமாயணத்தை எடுத்துக்கொண்டால் தசரதனுக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது.

 அதாவது ஒரு பக்கம் கைகேயிக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற பரதனுக்கு முடிசூட்ட வேண்டும். இன்னொருபக்கம் அவனுடைய குல மரபுப்படி மூத்தவனான இராமனுக்குத்தான் பட்டம் சூட்ட வேண்டும். இப்போது என்ன செய்வது சத்திய தர்மத்தை காப்பாற்றுவதா? மரபு தர்மத்தை காப்பாற்றுவதா? தசரதன் தவிக்கிறான். இதுதான் தர்மசங்கடம்.

 கடைசியில் சத்திய தர்மத்தை காப்பாற்றும் முடிவுக்குத்தான் தசரதன் வருகிறான். இருந்தாலும் அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தசரதன் சத்திய தர்மத்தை காப்பாற்ற போக அதுவே அவனுடைய மரபு தர்மத்தையும் காப்பாற்றி விடுகிறது. எப்படி தெரியுமா தான் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் பரதனுக்கு வராமலே செய்துவிடுறது அது.

அதனாலேயே தசரதன் ஒரே சமயத்தில் சத்தியத்தையும் காப்பாற்றினான். மரபையும் காப்பாற்றினான். 

" வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் அவன் " இது தசரதனை பற்றி வாலி சொல்கிற வார்த்தை்

 அதனால் நமக்கெல்லாம் ஒரே நேரத்தில் பல தருமங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்து அதிலேயே எந்த தர்மத்தை செய்வது என்கின்ற சங்கடம் வந்தால் குழப்பிக்கொள்ளக்கூடாது. சத்திய தர்மத்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் எல்லா தர்மங்களையும் விட சத்தியம் தான் உயர்ந்தது.

 பீஷ்மருக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சத்தியத்தை தான் காப்பாற்றுவேன் என்று உறுதியாக இருந்தார். வாழ்நாள் பூராகவும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் பீஷ்மர். ஆனால் அவருடைய ஆச்சாரியார் பரசுராமரோ அம்பையை கல்யாணம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும் என்கின்றார்.

 ஒரு பக்கம் சத்தியம். இன்னொரு பக்கம் குருவின் கட்டளை. எதைச் செய்வது இவர் சத்தியத்தை தான் காப்பேன் என்று திடமாக இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது கடைசியில் என்ன ஆனது வாய்மை தான் உயர்ந்தது. பரசுராமர் தோற்றுப்போனார்.

எனவே தர்மசங்கடம் ஏற்பட்டால் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். இந்தத் தெளிவு நம்முள் இருந்தால் எந்த குழப்பங்களும் நம்மை அண்டாது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...