என்று சிவனடியார் அடியேனிடம் கேட்டார். அதற்கு பதில் உங்கள் முன்னால்..
*வேதம் பற்றி குறிப்பு*
வேதம் - சிவாகமம் - திருமுறை இவை மூன்றும் சிவபெருமானால் அருளபட்டவை.
1. ரிக் - யஜூர் - சாமம் - அதர்வணம் என நான்கும் வேதத்தில் இருக்கிறது.
2. வேதம் அறிவு நூல்.
3 தெய்வீகமான மந்திரங்களை தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருக்கிறது.
4. வேதம் குரு மூலம் வழியில் மட்டுமே கற்க முடியும். இதற்கு குரு பரம்பரை என்று அழைப்பர்.
5. வேதத்தில் மன்னன் - ரிஷி - இந்திரன் - அக்னி - பிரம்மனின் படைப்பு போன்ற செய்திகள் உள்ளன.
6. யாகங்கள் பற்றி நிறைய விசயங்கள் உள்ளடக்கியுள்ளது.
7. தானத்தின் சிறப்புகள் பலவற்றை கூறுகிறது.
8. ருத்ரம் , சூக்தங்கள், இதர தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்கள் நிறைய உள்ளன.
9. அமாவாசை , பௌர்ணமி பூஜைகள் பிதுர் தர்ப்பணம் போன்ற செய்திகள் வேதத்தில் உள்ளடக்கியுள்ளது.
10. வேதத்தை இசையாக பாடுவதற்கு சாம காணத்தில் காணலாம்.
11. வேதத்திற்கும் தமிழைப் போல் இலக்கணம் உண்டு.
12. அனுஷ்டானம் , கிரியை பூஜைகளும் என நிறைய விசயங்கள் உள்ளன.
13. வேதத்திற்கு ஒலியே ஆற்றல் தரும்.
14. வேதங்களை பிராமணர்கள் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.
15. 63 நாயன்மார்களில்
அப்பூதியார் - உருத்திர பசுபதியார் - கணநாதர் - குங்குலியக்கலயர் - சண்டேசுவரர் - சிறப்புலியார் - சோமாசி மாறர் - சம்பந்தர் - என்று சொல்லிக்கொண்டே போகலாம்
இவர்கள் அனைவரும் பிராமணர் அதாவது அந்தணர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் .
வேதத்தை பிரதானமாக கொண்டு ஓதி வழிபாடு செய்பவர்கள் எகா நிறைய உள்ளன.
16. திருமூலர் சித்தர் வேதச்சிறப்பு என்று பாடியுள்ளார்.
17. திருமுறைகளில் வேதம் பற்றி செய்திகள் குறிக்கப்படுகின்றன.
18. 18புராணங்களிலும் , இதிகாசங்களிலும் வேதங்கள் பற்றிய செய்திகள் நிறைய சொல்லியுள்ளது.
இன்னும் வேதங்கள் பற்றிய நிறைய தகவல்கள் சொல்லிக் கொண்டே போகலாம் ...
ஆகவே வேதம் இறைவன் அருளியது இதற்கு எழுதாக் கிளவி என்று அழைப்பர்.