Showing posts with label இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ?. Show all posts
Showing posts with label இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ?. Show all posts

Saturday, March 19, 2022

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ?

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ???? ( இந்த திருவுரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் இறைவன் எழுந்தருளும் மண்டபமாக உள்ளது )

பெரும்பாலும் வடநாட்டில் உள்ள சிவாலங்களில் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியை நோக்கியவாறு ஆமையின் திருமேனி இருக்கும் !!

இங்கும் சில சிவாலயங்களில் ஆமையின் திருமேனியோ, படமோ இடம்பெற்று இருக்கும் இதன் அர்த்தம் அறிவோமா ??

அதை அப்படியே கொஞ்சம் காப்பி அடித்து இன்று நவீன ஆலயங்கள் அதை வைத்துகொண்டு இருக்கிறது !!

ஆமை என்ற உயிரினத்தை கேட்டவுடன் !! நம் நினைவில் வருவது ??

அது நீண்டகாலம் உயிர்வாழும் என்பதே !!

ஆனால் 
ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மை போல !!

மனிதர்கள் தாங்கள் சுமக்கும் கருவை தன்னுள்ளே வைத்திருந்து தங்கள் காணும் காட்சி, அனுபவிக்கும் இன்பம், போன்ற உணர்வுகள் வழியே உயிர்பெற செய்வார்கள் !!

கோழி முட்டையிட்டு தன் ஸ்பரிசம் தீண்டல் வழியே தன் உடலின் சூட்டை கொண்டு அந்த முட்டையில் உள்ள கருவை உயிர்பெற செய்யும் !!

அதேபோல 
மீன் தான் முட்டையிட்டு தன் கண்கள் வழியே அந்த முட்டையை பார்த்துக்கொண்டே தன் பார்வையின் வழியே முட்டையை உயிர்பெற செய்யும் !!

ஆனால் 
ஆமை கொஞ்சம் வித்தியாசமானது, அது கடலில் இருந்து வெளியே வந்து கடற்கரையில் தன் முட்டைகளை இட்டுவிட்டு அதை மணல் கொண்டு மூடிவிட்டு, உடனே கடலுக்குள் சென்று விடும் !!

அதன் அன்றாட வாழ்வை / பயணத்தை மேற்கொண்டு இருக்கும்,

ஆனால் அதன் சிந்தை அந்த முட்டைகள் மீதே இருக்கும், 

அது எத்தனை கடல் கடந்து இருந்தாலும் அதன் சிந்தனை அந்த முட்டைகள் மீதே இருக்கும் !!

இந்த சிந்தை என்ற எண்ணம் எங்கோ இருக்கும் அந்த முட்டைகள் உள் ஓர் தாயின் அரவணைப்பை கொடுத்து அந்த முட்டைகளை உயிர் பெற செய்யும் !!

அதுபோலவே 

நம் இறைவனின் படைப்புகள், 
நாம் எங்கு இருந்தாலும், 
எப்படி இருந்தாலும் 
என்ன செய்து கொண்டு இருந்தாலும் 
நம்மை படைத்த இறைவன் நம்மை எப்போதும் இடைவிடாது இந்த பிரபஞ்ச பேற்றால் வழியே நம்மை நோக்கி கொண்டே இருக்கிறான் !!

அவன் எங்கும் நிறைந்து எப்போதும் நம் மீது நமக்கே இல்லாத அக்கறையோடு காத்தருளிகொண்டு இருக்கிறான் என்ற மெய்யை உணர்த்தவே !!

ஆமையை கொண்டு நமக்கு அறிவுறுத்துகிறார்கள் நாம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டின் வழியே !!

ஏதோ இவன் அறிவுக்கு எட்டிய வரையே !!
எட்டவைத்தவன் திருவருளால் !!

திருச்சிற்றம்பலம் 

நற்றுணையாவது நமச்சிவாயவே 


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...