Showing posts with label திருச்செந்தூரில் பிரகாரத்தில்-no 1. Show all posts
Showing posts with label திருச்செந்தூரில் பிரகாரத்தில்-no 1. Show all posts

Saturday, July 6, 2024

திருச்செந்தூரில் பிரகாரத்தில்

திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும், ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க,

அவர் லேசான புன்னகையுடன் சொன்னார், ""ஐயா நான் தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன், என்னை போல் எவரும் கடவுளையும், கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்""
 .
""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலுக்கு குளிக்க வந்தேன். அலையின் சுழற்சியில் உள்ளே சென்று விட்டேன், என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்""

""என்னையும் மறந்து, முருகா... முருகா... முருகா... என்று கத்தினேன். யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன், அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன்""

""எழுந்து நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் எவரும் தென்படவில்லை, கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு, உரத்த குரலில், ""முருகா... முருகா... முருகா..."" என சொல்லிக் கொண்டே முருகப்பெருமான் சன்னதியில் விழுந்து வணங்கினேன்.

அன்று முதல் நான் கடலில் விழுந்து பிழைத்த நாளையே, ""எனது பிறந்தநாளாக"" கொண்டு, ஒவ்வொரு வருடம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்கி மகிழ்கிறேன் என்று அந்த பக்தர் சொல்ல, 

எங்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். 
திருச்செந்தூரில் இருந்து.....

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...