Friday, February 10, 2023

சதுரகிரி வரலாறு

சதுரகிரி வரலாறு:

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட் டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவன து பெற்றோர் தில்லைக்கோன், திலகமதி. மனைவி சடைமங்கை. 

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடு த்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். 

சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இது பற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவி த்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித் தான். 

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல்இரக்கம் கொண்ட அவர் அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக் கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந் தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவ ர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். 

பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்த து. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேட த்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். 

இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சை மால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெ ருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத் தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்ல தேவன். நீ யாழ்மீட்டி என்னைபாடி மகிழ்வி ப்பாய். 

சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர் களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். 

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந் தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலை யில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். அனைவரும் சுந்தர மஹாலிங்கம் தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும்…

சதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும் 

இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்க ளும் வாழ்கின்றன.

சுந்தரமூர்த்தி: 

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தர மூர்த்தி லிங்கம் ஆகும்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்பமலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரான ந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. 

அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். 

சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணி யளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம்: 

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலி ங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தி யைக் கவனிக்காமல் போய் விடுவார். 

எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்தி ருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையி ல் லிங்க பூஜைசெய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்த நாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. 

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். 

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகா சிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகி ன்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங் கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 

18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண் பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்துகொடுக்கிறார்கள். இங் கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை:

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிர ந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவி ல் எழுந்தருளினாள். 

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

நோய் தீர்க்கும் மலை: 

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்க ளும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கி னால் உடலில் உள்ள வியர்வை வெளியே றி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோ ய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். 

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொ ய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரகதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

பிலாவடி கருப்பர்: 

 வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடிய வில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். 

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநா தரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்க ளை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். 

இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமி யை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள் ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

இரட்டை லிங்கம்: 

ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்த து. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். 

இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன் பு சிவன் தோன்றினார். சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. 

சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். 

இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியி ல் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இர ட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதே வ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பெரிய மகாலிங்கம்: 

நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத் திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: 

மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென் று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப் பாறை) அடையலாம். 

இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். 

பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தி ல் உள்ளது. 

பார்வதி இத்தலத்துக்கு தவம்செய்ய வந்த போது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித் ததால் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது. 

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய் யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படி யான துவாரம் உள்ளது. 

உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இத னுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள் ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென் று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். 

இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படு கிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங் கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். 

இதற்கு அடுத்துள்ள ஏசி பாறையின் கீழ் அமர்ந்தால், கடும்வெயிலிலும் மிகக் குளு மையாக இருக்கும். தவசிப் பாறையிலிரு ந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியி ல் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ள து. பார்ப்பதற்கு விநாயகர்போல் தெரியும்.

இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரை யடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. 

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்கு த்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங் குத்தான பாதை. அதனால், அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

வாழ்க்கையில் அனைவரும் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டிய கோவில் – சதுரகிரி மலை கோவில்

ஓம் நமசிவாய....
28.06.2022... நேசமுடன் விஜயராகவன்....

Tuesday, February 7, 2023

சித்தர்களின்அற்புதபழமொழிகளும்விளக்கமும்.

சித்தர்களின்
அற்புத
பழமொழிகளும்
விளக்கமும்.

1) பிறந்தன இறக்கும்;
இறந்தன பிறக்கும்.
2) தோன்றின மறையும்;
மறைந்தன தோன்றும்.
3) பெருத்தன சிறுக்கும்;
சிறுத்தன பெருக்கும்….
4) உணர்ந்தன மறக்கும்;
மறந்தன உணரும்.
5) புணர்ந்தன பிரியும்;
பிரிந்தன புணரும்.
6) உவப்பன வெறுப்பாம்;
வெறுப்பன உவப்பாம்

1) பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2) தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3) பெருத்தன சிறுக்கும்
சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4) உணர்ந்தன மறக்கும்
மறந்தன உணரும்,,

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5) புணர்ந்தன பிரியும்
பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6) உவப்பன வெறுப்பாம்
வெறுப்பன உவப்பாம்.

விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது.

பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.

சித்தமெல்லாம்
எனக்கு சிவமயமே.
சரணம் சரணம்.

மனிதப்பிறவி என்பதே மிகப் பாவியானது என்கிறார்கள் யோகிகள்

பரிகார ஸ்தலங்கள் ஒரு பார்வை!
மனிதப்பிறவி என்பதே மிகப் பாவியானது என்கிறார்கள் யோகிகள். எனவேதான் இன்னும் ஒரு பிறப்பு என்பதே வேண்டாம். இறைவா உன்னிடத்தில் என்னை சேர்த்துக் கொள். மீண்டும் என்னை இப்பூவுலகில் பிறக்க வைத்து ஊன் உடலால் உழல விடாதே என்று வேண்டி தவமிருப்போர் பலர்.

மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை.

இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் (கடலூர்) சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா, திருப்புவனம் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்

Monday, February 6, 2023

கவியரசரின் மகளுக்கு திருமணம்

கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை .

மிகுந்த கவலையில், தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம். உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார்.

"மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா "! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன், ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். 

மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது.

மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. 

இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. 

குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். 
ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர்  கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.

அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. 

உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்...

"சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்..

கவியரசர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று 
மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன், வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...

கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .

இணையத்திலிருந்து..

பூவரு கங்கை


இந்த நடராசர் தாண்டவம் கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.
இந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம். ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்புத நடனம்....

Saturday, February 4, 2023

சந்தனத்திற்கு இயற்கையாகவே தங்கத்தை ஈர்க்ககக்கூடிய சக்தி உள்ளது

ஆன்மீகம் இந்த ஒரு பொருள் இருந்தால் போது வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்! ஆன்மீகம் இந்த ஒரு பொருள் இருந்தால் போது வீட்டில் ஒரு சேர்ந்து கொண்டே இருக்கும்! நம் வீட்டில் குண்டு மணி அளவிலாவது தங்கம் இருக்க வேண்டும் என்று தான் நாம் முன்னோர்கள் சொல்லி வந்தார்கள். அதே போல் நாம் அழகுக்காகவும் ஒரு முதலீடாகவும் தங்கம் வாங்குவது என்றாலும் நாம் சாதாரணமாக வாங்கிட முடியாது. அதற்கு ஸ்வர்ண லட்சுமியின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் வீட்டில் தங்கம் சேர்க்க முடியும். அதே மாதிரி பெரும்பாலானவர்கள் தங்கம் வாங்க நினைப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கு சமுதாயத்தில் அவர்களின் கௌரவத்தை நிலைநாட்ட தங்கம் வாங்கிக் கொள்வார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் எந்த ஒரு வீட்டில் குண்டு மணி அளவில் தங்கம் இருக்கிறது அந்த வீட்டில் நிரந்தரமாக, சந்தோசம், மகிழ்ச்சி, மனநிம்மதி என அனைத்தும் நிலையாக இருக்கும். சந்தனம் அதனால் உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் திருமணத்திற்கு நகை சேர்க்கவும், ஏதாவது ஒரு பெரிய செலவு வந்து விட்டால் போதும் நம் வீட்டில் இருக்கும் தங்க நகை அடகு வைத்து விடுவோம். அப்படி நாம் அடகு வைத்த நகையை மீட்டெடுத்து தங்கம் நிரந்தரமாக நம் வீட்டிலேயே இருப்பதற்காக செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் நாம் இன்று இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். இப்படி நாம் வீட்டில் தங்கம் சாதாரணமாக சேர்வதற்கு. நாம் வீட்டில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அது என்னவென்றால் அது சந்தனம் தான். சந்தனத்திற்கு இயற்கையாகவே தங்கத்தை ஈர்க்ககக்கூடிய சக்தி உள்ளது. சந்தன கட்டை அப்படி இந்த சந்தன கட்டையை வைத்து என்ன செய்வது என்று கேள்வி எழுகிறதா ? நீங்கள் ஒரு சுத்தமான ஒரிஜினல் சந்தன கட்டையை வாங்கி கொள்ளுங்கள். பின்பு அந்த சந்தனக்கட்டையை இழைத்து அதிலிருந்து கிடைக்கும் சந்தன மரத்துகள்களை பெண்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இவ்வாறு இழைத்து வைத்திருக்கும் சந்தனத்தை பன்னீரில் கலந்து வீட்டில் நாம் வைத்திருக்கும் சாமி படங்களுக்கு சந்தன பொட்டு வைத்து அதன் மேல் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பீரோவில் வையுங்கள் அது மட்டும் இல்லாமல் கடைகளில் வாங்கும் போது சின்ன சின்ன சந்தன கட்டை துண்டுகளாக சிறிது வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி நாம் வாங்கிய அந்த சிறிய சந்தன கட்டை துண்டுகளை ஒன்று பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் அல்லது வீட்டில் பணம் வைத்து எடுக்கும் பணப்பெட்டிகள் எந்த இடங்களிலும் சந்தன கட்டைகள் ஒன்று போட்டு வைக்கலாம். மேலும் நீங்கள் தங்க நகைகள் வைக்கும் இடத்தில் தங்க நகையுடன் படுமாறு சந்தனக்கட்டையை போட்டு வைக்கலாம். நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் கல்லாப்பெட்டியில் ஒரு சந்தனக்கட்டை போட்டு வைக்கலாம். தங்கம் இல்லாதவர்கள் கூட அவர்கள் வீட்டு பீரோவில் இந்த சந்தனக்கட்டையை போட்டு வைத்தால் சிறிது நாட்களில் தங்கம் வாங்கக்கூடிய யோகம் கூடி வரும். அடகு நகை அதன் பின் நீங்கள் அடகு வைத்த தங்க நகை மீட்க வேண்டும் என்று விரும்புகீறீர்களா. நீங்கள் தங்க நகைகளை அடமானத்துக்கு வைக்கும் போது ரசீது கொடுத்திருப்பார்கள் அல்வா. அந்த ரசீதுக்கு நடுவில் சந்தன கட்டையை வையுங்கள் சீக்கிரமாகவே நீங்கள் அடகுமானத்திற்கு வைத்த நகையே மீட்டு எடுத்து வரலாம். அந்த நகை மீண்டும் கூட அடமானத்திற்கு செல்லாமல் இருக்கும். அப்படி நீங்கள் அடமானத்தில் வைத்த நகையே மீட்டு எடுத்தபின் மீதம் இருக்கும் தங்க நகையுடன் வைத்து விடாதீர்கள். அடமானத்திலிருந்து மீட்டு வந்த தங்க நகையை முதலில் மஞ்சள் தண்ணீரில் முக்கி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் சந்தனம் கலந்த தண்ணீரில் கொஞ்சம் நனைத்து. உங்கள் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு சிறிது நேரம் அதை தங்க நகை போட்டு வைத்துவிட்டு அதன் பின் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நினைவில் வையுங்கள் இப்படி நீங்கள் உங்கள் வீட்டில் சந்தனத்தினால் செய்யப்பட்ட பொருள், சந்தன கட்டைகள், சந்தனத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் தங்க நகைகள் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதேபோல் அடகு நகைகளை மீட்பதற்கும், மீட்ட அடகு நகைகளை மற்ற தங்க நகைகளுடன் சேர்த்து வைப்பதற்கு முன்பாகவும் மேலே சொன்ன பரிகாரங்களை நினைவில் வைத்து கொண்டு இதுபோல் செய்து பாருங்கள் இதனால் தங்கத்தின் மீது தோஷம் இருந்தால் கூட அது நீங்கிவிடும் சந்தன கட்டைசந்தனம்தங்கம்பரிகாரம்பூஜை  வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர! இந்த இரண்டு பொருள் வீட்டில் இருக்க வேண்டும்!  இந்த 10 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் பண வரவு அதிகரிக்கும்!

Silent Night music ,Travel music

 


Anbe Sivam YouTube channel




அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனத்தின் சக்தி

*அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனத்தின் சக்தி*

 உங்கள் ஆழ்மனத்தின் சக்தி அளவிட முடியாதது.

 அது உங்களுக்கு உத்வேகமூட்டி உங்களை வழிநடத்துகிறது.

 உங்கள் நினைவுப் பெட்டகத்திலிருந்து தெளிவான விலாவாரியான காட்சிகளை நினைவு கூர்கிறது.

 உங்களுடைய இதயத்துடிப்பையும் ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 உங்கள் செரிமானத்தையும், வளர்சிதை மாற்றத்தையும், கழிவு நீக்கத்தையும், ஒழுங்குபடுத்துகிறது.

 நீங்கள் ஒரு ரொட்டித் துண்டைத் தின்றால் அதை திசுக்களாகவும், தசைகளாகவும், எலும்புகள் ஆகவும், இரத்தமாகவும் உருமாற்றுகிறது.

 உடலின் அனைத்து இன்றியமையாய் செயல் முறைகளையும் செயற்பாடுகளையும் நடத்துகிறது.

Friday, February 3, 2023

குரு கிடைத்து விடுவார்!!!


5.2.2023  ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  12.38 முதல் 6.2.2023 திங்கட் கிழமை அன்று மதியம் 3.07 வரை 
   அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் வருகிறது.   

உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம் 

"ஓம்   ஹ்ரீம் அகத்தியமகரிஷி  நமக" என்று அல்லது  " ஓம்  ஹ்ரீம் அகத்தீசாய நமஹ"   என்று ஜெபிக்கவும்.

முருக கடவுள் அவதாரம் எடுக்கும் முன்பே நமது தாய் தமிழ் மொழி தோன்றி விட்டது.

முருக கடவுள் அவதாரம் எடுத்த பிறகு அவருக்கு தாய் தமிழ் மொழியினை அண்ணாமலை  என்ற சிவ பெருமான் போதித்தார்!

அதன் பின்னர் அகத்தியர் சித்தருக்கு முருக கடவுள் தாய் தமிழ் மொழி சொல்லி கொடுத்தார் !!!

அகத்திய சித்தர் நாம் வாழ்ந்து வரும் பூமி முழுவதும் பயணம் செய்து எல்லா பகுதியிலும் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியை சொல்லி கொடுத்தார்!!!

கடந்த 28,55,124 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேசப் பட்டு வரும் ஒரே மொழி நமது தமிழ் மொழி !!!

இன்று பாரத நாட்டில் தமிழ்நாடு மாநிலத்திலும் இலங்கை நாட்டிலும் முழுமையாக இன்று வரையிலும்  ஆன்மீக தமிழ்  பேசப்பட்டு எழுதப்பட்டு வருகிறது.

இது தவிர உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வரும். தமிழ் மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் 22,000 தீவுகளுக்கு தமிழ் மக்களால் மட்டுமே சென்று வர. முடியும். வேறு யாராலும் அங்கே  போக முடியாது.இவை அனைத்தும் ஆன்மீக ரகசியம் சார்ந்த  தீவுகள் ஆகும் .

 இதனால் நம்முடைய ஆதிமூல முதல் குரு அகத்தியரின் அருள் நமக்கு கிடைக்கும்!!!

தகுந்த ஆன்மீக குரு வேண்டும் என்று தேடல் நம்மில் பலருக்கு இருக்கிறது.

அவர்களுக்கு தகுந்த மற்றும் உண்மையான குரு இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் தினமும் ஒரு மணி நேரம் வரை " ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக " என்ற மந்திரம் ஜெபித்து வர வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை இவ்வாறு ஜெபம் செய்து வந்தால் குரு கிடைத்து விடுவார்!!!

ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்

*ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம் பற்றிய பதிவு 

ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது என்பதால், ஸ்படிகம் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஸ்படிகத்தில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கூடுதல் சிறப்புண்டு. 

ஒரு முறை கயிலாய மலையை நோக்கி ஆதிசங்கரர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் கொடுத்தனுப்பினார். அவை,

1. முக்தி லிங்கம், 
2. வர லிங்கம், 
3. மோட்ச லிங்கம், 
4. போக லிங்கம், 
5. யோக லிங்கம் 

ஆகிய அந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களையும், சிவபெருமானின் ஆணைப்படி, ஐந்து இடங்களில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அவற்றில், முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா மாநிலம் சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சிபுரத்திலும் அமைக்கப்பட்டன. 

தமிழ்நாட்டில் சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயங்களில் உள்ள ஸ்படிக லிங்கங்கள் சிறப்புக்குரியவை. 

இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த ஸ்படிக லிங்கம் விபீஷணனால் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. 

ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசித்து விட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனார் கோவில் ஆகியவற்றிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...