பாண்டி நாட்டிலிருந்த #கடம்பவனத்தில் புலிகள்
மிகுதியாயிருந்தன. ஆதலின் மானினம் அருகி வந்தது. இறுதியில் பெண்மான் ஒன்று கன்றுபோட்டு, அதனை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டுத் தண்ணீர் பருக ஒரு குளக்கரை சென்றது. அப்பொழுது ஒரு #வேட்டுவன், அதனை அம்பெய்து கொன்று வீழ்த்தினான். அது கீழே விழும்போது தன் கன்றை நினைந்து உயிர் விட்டது. அதனையறிந்த அருட் கடலாகிய #ஆலவாயண்ணல், அக் காட்டில் வேறு பெண்மான் இல்லாமையால் ஒரு #பெண்_புலியை அதற்குப் பாலூட்டி. வளர்க்குமாறு அதன் உள்ளத்தில் கடுமை களைந்து கருணையைப் பெருகச் செய்தார். பெண்புலி #மான்_கன்றுக்கு முலைப் பாலூட்டி வளர்த்தது.
அமைவிடம்: #திருப்பரங்குன்றம்_சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில்.