Showing posts with label அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?. Show all posts
Showing posts with label அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?. Show all posts

Friday, February 21, 2025

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

 

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1.அதன் உற்பத்தி பரப்பளவு குறைவு.
2.அதன் விலைமதிப்பற்ற மருத்துவப் பயன்.
இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.
இந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் (Critically Endangered) உள்ள தாவரமாக, ஐ.யு.சி.என். (IUCN)என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது.
செம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.
மருத்துவப் பயன்கள்
ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன
மலட்டுத்தன்மைக்கு…
இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.
அண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...