கோவிட் 3 வது அலை இந்தியாவில்
வருமா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா, கோவிட் 19 இன் 3 வது அலை ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளது, ஆனால் அதைத் தவிர்க்கலாம் என்றார். ... மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்கக்கூடும், ஆனால் அது தவிர்க்க முடியாதது அல்ல
ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவரான டாக்டர் சமிரன் பாண்டா கூறுகையில், மூன்றாவது அலை ஒரு தனித்துவமான சாத்தியக்கூறு, இது தவிர்க்க முடியாதது என்றாலும், இது பொருத்தமான பொது சுகாதார நடவடிக்கைகளின் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தது.கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3ம் அலை உருவாகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.உலகை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையில்மேலும்வேகமெடுத்துள்ளது. பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் தாக்கும்கொரோனாவுக்கு இரையானோர் ஏராளமானோர்.
பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்
இரண்டாம் அலை பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், தினசரி நோய் தொற்றின் எண்ணிக்கை
கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. இது ஆறுதலான செய்தி என்றாலும், கொரோனா 3வது அலை உருவாகுமா என்ற
கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிரிட்டன், காங்கோ
உள்ளிட்ட நாடுகளில் கொரோனா 3ம் அலை பாதிப்பு தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் மூன்றாம் அலை
பாதிப்பில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. இது
மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை விதைத்துள்ளது.இந்நிலையில், கொரோனாவின்
மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று கொரோனா தடுப்பு நிர்வாகக்குழுவின் உறுப்பினர்
வி.கே.பால் தெரிவித்துள்ளார். குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க
பெற்றோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெருமளவு தடுப்பூசி
போடப்படாததால், மூன்றாம்
அலைக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கணேஷ்குமார்.