ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....
(2) ஆதியில் குபேரன் இங்கு வழிபாடு இயற்றியதாக வரலாறு....
(3) தொடர்ச்சியாக 8 மணிநேரம் இலங்கையில் அடர்ந்த யாள மோனராகலை காட்டுக்குள் பல சிற்றாறுகள், வனங்களை கடந்து பயணித்தால் இயற்கையே கோயிலாக அமைத்த ஒரு அற்புத சித்தர்கள் வனம்...
(4) எந்த வித வெளியுலக தொடர்புமே இல்லாத சித்தர்களின் புனித பூமி
(5) முருக பெருமான் தவமியற்றி, அற்புத சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி ஒளியில் கலந்த அற்புத இடம்....
(6) நவகோடி சித்தர்களுக்கும் முருக பெருமான் தவத்தை கற்று கொடுத்த இடம்.....
(7) போகர் பெருமான் ஆதியில் தவமியற்றிய தபோவனம்
(
கதிர்காமத்தில் ஆதியில் இருந்த போகர் பெருமான் நவ பாஷாணங்களை கொண்டு உருவாக்கிய நவ பாஷாண வேல், நவாக்ஷரி யந்திரத்தை மறைத்து வைத்த இடம்...

(9) கஜபாகு மன்னன் முதல் முதலில் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடத்திய இடம்....
(10) இன்று வரை இலங்கையில் சிம்மாசனத்தில் அமரும் அரசர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் இங்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பதவியில் அமர்வது சாசனமாகவே உள்ளது. (முதல் முதலில் சிங்கள வரலாற்றில் துட்டகைமுனு இங்கு தொடங்கி வைத்தான். இந்த விதிமுறையை....
(11) முறையாக ஒருமாத காலம் விரதமிருந்து குறிப்பிட்ட விதிமுறைக்கமைய சென்று வழிபாடு நடத்தினால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் அற்புத இடம்... (இது வரை என் அனுபவத்தில் பல்லாயிரம் பேரிடம் பார்த்த அனுபவம்....
(12) இன்று வரை வேற்று கிரக வாசிகள் வந்து இறங்கும் அற்புத இடமாக இந்த இடம் போற்ற படுகிறது....
1ம் நாள்:-
---------------
உகந்தை மலை நோக்கி பயணித்து மாலை உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைதல்.
இரவு 7 மணிக்கு உகந்தை மலையில் வேல் பூஜை, 210 சித்தர்கள் வேள்வி, சிறப்பு அறிவுறுத்தல்கள் இரவு உணவை எடுத்தல், பயணம் பற்றிய அனைத்து அறிவுறுத்தல்கள் விடயங்களை பகிரல், தொடர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்தல்.
2ம் நாள்:-
----------------
அதிகாலை 5.30க்கு உகந்தை ஆலயத்தில் பயணம் சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடுகள்...
காலை 6.00 மணிக்கு விசேட ஜீப் மூலம் உகந்தையில் இருந்து கபிலவத்தை பயணம் ஆரம்பம். குமண சரணாலயத்தை கடந்து குமுக்கன் அம்மன் ஆலயத்தை அடைதல்.
காலை 8 மணிக்கு குமுக்கன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள "மிக சக்தி வாய்ந்த வன தேவதைக்கு சிறப்பு பொங்கல், சிறப்பு மடை பூஜைகள், சிறப்பு வன தேவதைகளுக்கு வன பூஜை"
தொடர்ந்து கபிலவத்தை நோக்கி பயணம்.....
காலை 11 மணிக்கு கும்பகர்ணன் ஆறு என்று சொல்லப்படும் குமுக்கன் ஆறு உற்பத்தியாகும் கும்பக கர்ப்ப பாறையில் அனைவரும் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தல். தொடர்ந்து மதிய உணவை எடுத்து கொண்டு அனைவரும் கபில வத்தை நோக்கி பயணம்.....
மாலை 4மணியளவில் கபிலவத்தை சித்தர்கள் வனத்தை அடைதல். அனைவரும் ஓய்வெடுத்து சித்தர்கள் வனங்கள் அனைத்தும் சுத்தி பார்த்தல்.
மாலை 5 மணிக்கு புண்ணிய ஆத்மாக்கள், வன தேவதைகள் அனைத்தும் வாசம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கும் அபூர்வ மூலிகை சக்திகளை கொண்ட கபில நதி எனப்படும் கபிலவத்தை "கங்கையில் மரகத லிங்கத்துக்கு மாபெரும் ருத்ர அபிஷேகம்"
இரவு 7 மணிக்கு இரவு போசனங்கள் எடுத்தல், பயணத்தில் அனைவரின் அனுபவங்களை பகிரும் கலந்துரையாடல்....
இரவு 12 மணிக்கு நள்ளிருளில் அனைத்து தேவதைகளும் உலா வரும் சித்ரா பௌர்ணமி நன்னாளில் அற்புத நேரத்தில் கபில வன கங்கை கரையில் "இந்த உலகத்தை ஆளும் 210 சித்தர்களின் அதி சக்தி வாய்ந்த சித்தர்கள் வேள்வி, சிறப்பு வன பூஜை," சிறப்பு கூட்டு வழிபாடு. தொடர்ந்து கங்கை கரையில் அனைவரும் உறங்குதல்.....
3ம் நாள்:-
----------------
காலை 5 மணிக்கு நதியில் நீராடி நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற சப்த கன்னிகைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு, விசேட பொங்கல் பூஜை, இந்த உலகை நவகோடி சித்தர்களின் அருளாட்சியின் கீழ் முருக பெருமான் வாசம் செய்யும் கபில வன புளியமர நிழலில் கீழ் மாபெரும் கூட்டு வழிபாடு. தொடர்ந்து வனபோஜனம் செய்து வனத்தில் இயற்கை உணவை உட்கொள்ளல்....
காலை12 மணிக்கு அனைத்து வழிபாடுகளும் நிறைவு பெற்று கபிலவத்தையில் இருந்து மீண்டும் உகந்தை நோக்கி பயணித்தல்.
மாலை 6மணிக்கு உகந்தை ஆலயத்தில் இருந்து மீண்டும் நம் இல்லங்களுக்கு பயணித்தல்.
ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து முக்கியமான நம் சித்தர்களின் . நண்பர்களுடன் மட்டும் அங்கு சென்று நான் தரிசிக்கும் அபூர்வ பயணம்...
தொடர்ந்தும் அவன் அழைப்பான்... பயணிப்பேன்....
அவன் அழைப்பு இல்லாமல் கனவிலும் கூட யாரும் இங்கு சென்று சக்திகளை அடைய முடியாது....
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி.....
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்