Showing posts with label காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே. Show all posts
Showing posts with label காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே. Show all posts

Saturday, February 22, 2025

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

 

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ?
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே ?
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே ,
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ?
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை ,
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை !
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
- கவியரசு கண்ணதாசன் .

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...