நமது வாழ்க்கையை நாம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக, பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்கிறோம் என்பதைப் பொருத்தே, நமக்கு வாழ்க்கையும் அமைகிறது.
அதில், நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வாழ்க்கை பார்க்கும் நமது கண்ணோட்டம், அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் என ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் குறிப்பாக நமது அனுபவம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
"ஒரு அனுபவம் நமக்குப் பாடமாகும்
ஒன்றிலேயே கிடைக்கும்
ஆயிரம் அனுபவம் நமக்கு ஒரு திறமையாகும்."
திறமை கிடைத்து விட்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லை.
அனுபவம் கிடைத்தாலும் அதை நாம் சரியான அனுபவமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அது நம் வாழ்க்கையை சரியாக நகர்த்திச் செல்லும்.
அந்த அனுபவம் நல்லதாக, நல்லதிற்காக இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.
எனவே,
நல்லதையே எண்ணுவோம்!
நல்லதையே பேசுவோம்!
நல்லதையே சிந்திப்போம்!
நல்லதையே உணர்வோம்!
நல்லதையே செய்வோம்!
நல்லதே நடக்கும்...!