Saturday, March 15, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16328 குருவாயூர் இருநது மதுரை

#குருவாயூர் to #மதுரை 

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16328 குருவாயூர் இருநது மதுரை தினசரி விரைவு ரயில் உள்ளது குருவாயூர்:5:50Am
திருச்சூர்புங்குனம் :6:12Am
திருச்சூர் :6:17Am ஒல்லூர் :6:28Am புதுக்காடு:6:38Am இரிஞ்சாலகுடை :6:48Am சாலக்குடி :6:55Am அங்கமாலி ஃபார் காலடி:7:12Am
அலுவா:7:23Am
களமசேரி:7:32Am
இடப்பல்லி:7:42Am
எர்ணாகுளம் டவுன் :7:58Am
திரிபுனிதிடுர:8:18Am
முலன்டுருட்டி:8:28Am
பிரிவோம் ரோடு:8:38Am
வைகோம் ரோடு:8:48am
குருப்பந்த்தரா:8:56Am
எட்டுமனுர்:9:05Am
கோட்டயம்:9:35Am
சங்கனாச்சேரி:9:54Am
திருவல்லா:10:03Am
செங்கன்னூர்:10:13Am
மாவேலிக்கரை:10:26Am
கயங்குளம்:10:40Am
கருணாகப்பள்ளி:10:57Am
சாஸ்தான்கோட்டா:11:08Sm
கொல்லம் ஜங்சன்:12:10Am
கிலிகொல்லுர்:12:23pm
சாந்தனடொப் ஹல்ட் :12:28pm
குன்டர :12:35pm
குன்டர ஈஸ்ட் :12:39pm
ஏழுகொனெ:12:45pm
கொட்டாரக்கரா:12:54pm
குரி:1:04pm
ஆவ்னெஸ்சரம்:1:10pm
புனலூர்:1:20pm
எடமன்:1:44pm
ஓட்டுக்கள்:2:02pm
தென்மலை:2:14pm
கழுத்துருட்டி:2:24pm
எடபாளயம் ஹல்ட்:2:31pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:2:38pm
ஆர்யன்காவு:2:48pm
பகவதிபுரம்:3:10pm
செங்கோட்டை:3:40pm
தென்காசி சந்திப்பு:3:56pm
கடையநல்லூர்:4:12pm
பாம்பகோவில் சந்தை:4'24pm
சங்கரன்கோவில்:4:36pm
இராஜபாளையம் : 4:58pm
ஸ்ரீவில்லிபுத்தூர்: 5:12pm
சிவகாசி:5:29pm
திருத்தங்கல்:5:37pm
விருதுநகர் சந்திப்பு :6:03pn
கல்லிகுடி:6:15pm
திருமங்கலம்:6:26pm
திருப்பரங்குன்றம்:6:39pm
மதுரை சந்திப்பு:7:10pm                              
மறு மார்க்கம் அட்டவணை கீழ கொடுக்கப் பட்டது 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
பயணிகள் கனிவான கவனத்திறகு எண் 16327 மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது மதுரை சந்திப்பு : 11:35Am
திருப்பரங்குன்றம் :11:44Am
திருமங்கலம் :11:54Am
கல்லிகுடி :12:03pm
விருதுநகர் சந்திப்பு :12:13pm
திருத்தங்கல்:12:29pm 
சிவகாசி :12:39pm ஸ்ரீவில்லிபுத்தூர்:12:54pm
இராஜபாளையம் : 1:03pm   
சங்கரன்கோவில் :1:29pm
பாம்பகோவில் சந்தை:1:39pm
கடையநல்லூர்:1:49pm 
தென்காசி சந்திப்பு:2:13pm
செங்கோட்டை:3:15pm
பகவதிபுரம்:3:34pm 
ஆர்யன்காவு:3:54pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:4:04pm
எடபாளயம் ஹல்ட்:4:10pm
கழுத்துருட்டி:4:19pm
தென்மலை :4:31pm ஓட்டுக்கள்:4:42pm
எடமன்:5:01pm
புனலூர் :5:55pm
ஆவ்னெஸ்சரம்:6:10pm
குரி :6:17pm
கொட்டாரக்கரா :6:27pm
ஏழுகொனெ :6:34pm
குன்டர ஈஸ்ட் :6:40pm
குன்டர :6:49pm
சாந்தனடொப் ஹல்ட் :6:57pm
கிலிகொல்லுர் :7:05pm
கொல்லம் ஜங்சன்:7:40pm
சாஸ்தான்கோட்டா:8:04pm
கருணாகப்பள்ளி:8:14pm
கயங்குளம் சந்தி:8:33pm
மாவேலிக்கரை:8:44pm
செங்கன்னூர் :8:56pm
திருவல்லா :9:06pm
சங்கனாச்சேரி:9:16pm
கோட்டயம் :9:42pm
எட்டுமனுர் :9:57pm
குருப்பந்த்தரா :10:05pm
வைகோம் ரோடு:10:13pm
பிரிவோம் ரோடு:10:22pm 
முலன்டுருட்டி:10:36pm
திரிபுனிதிடுர :10:54pm
எர்ணாகுளம் டவுன்:11:32pm
இடப்பல்லி:11:44pm
களமசேரி:11:54pm
அலுவா:12:04Am
அங்கமலி:12:19Am
திருச்சூர் :1:23Am
குருவாயூர்:2:10Am குறிப்பு (இந்த ரயில் பல வருடங்களாக ஓடி கொண்டு இருக்கிறது அதைப் போல தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்து விட்டதா கடந்து போங்கள் நம்முடைய நோக்கம் ரயிலை முழுமையாக பயன்படுத்த வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Palani to kodaikannal bus time

 


ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் Iynthuveetuswamy Temple- Chettiyapathu-4

 


கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...

 



கேரள மாநில நில அமைப்பின் காட்சி...
கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...
மேற்கு தொடர்ச்சி மலையும் கடலும் ஒரு சேர இருப்பது கேரள கடற்கரைகளின் பேரழகு...
வால் போன்ற அமைப்பை கொண்ட ஒரு சிறிய மாநிலம் கேரளா...
கேரளா மாநிலம் 35% மட்டுமே நிலப்பரப்பை கொண்டது....
மீதி 65% மலைகளும் காடுகளும் கொண்டது...
கேரளாவில் 35% நிலப்பரப்பில் 60% மக்களும் 65% மலைப் பகுதிகளில் 40% மக்களும் வாழ்கிறார்கள்...
கேரள மாநிலத்தில் தென்கிழக்கில் பெரிய மலைக் காடாக தெரிவதுதான் இடுக்கி மாவட்டம்...
கேரளாவின் மிகப்பெரிய மாவட்டம் இடுக்கி...
கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டமும் இதுதான்.

தூத்துக்குடியின் அடையாளமாக இருப்பதுதான் மக்ரூன்

 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு அடையாளமாகத் திகழ்கிறது. தூத்துக்குடியின் அடையாளமாக இருப்பதுதான் மக்ரூன்.

வெண்மை நிறத்தில் சிறிய பிரமிடு வடிவத்தில் அமைந்த ஒரு வித்தியாசமான இனிப்பு மக்ரூன். மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல். இது முதன்முதலில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அறிமுகமானதால் இது ‘தூத்துக்குடி மக்ரூன்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது தூத்துக்குடியில் பல பேக்கரிகள் மக்ரூன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடிக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக மக்ரூன்கள் தூத்துக்குடிக்கு அறிமுகமாயின என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மக்ரூனை தயாரித்து விற்பனை செய்து அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்தியவர் அருணாசலம் பிள்ளை என்பவர். தூத்துக்குடி மாவட்டத்தில் சின்ன நட்டாத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கிருந்த ஒரு போர்த்துகீசியரிடமிந்து மக்ரூன் தயாரிப்பினைக் கற்று அதை தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் புகழ்பெறத் தொடங்கிய மக்ரூன் பின்னர் தமிழ்நாடெங்கும் பரவியது.
முட்டையின் வெள்ளைக்கரு, பெரிய முழு முந்திரிப்பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கபடுவது இந்த மக்ரூன். முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது மஞ்சள் கரு கலந்து விட்டாலோ அல்லது முந்திரிப்பருப்பின் தரம் குறைந்தாலோ மக்ரூனின் சுவையே மாறிவிடும். எனவே, இந்த மூலப்பொருட்களை கவனமாகக் கையாண்டு மக்ரூன் தயாரிக்கப்படுகிறது.
இனி, மக்ரூன் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம். முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பிளெண்டர் கொண்டு நன்றாக அடிக்க வேண்டும். நுரை போன்று ஆனவுடன் அதனுடன் சர்க்கரை மற்றும் இடித்துத் தூளாக்கப்பட்ட முந்திரி பவுடரைச் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்டர் மூலம் அடிக்க வேண்டும். நன்றாக அடித்ததும் மாவு பதத்திற்கு வரும். ஒரு காகிதத்தை கூம்பு வடிவத்தில் மடித்து அதற்குள் மக்ரூன் மாவை ஊற்றி பொட்டலத்தின் மேற்பகுதியை மூடி கூம்புப்பகுதியை சிறிது கத்தரித்து ஒரு தட்டின் மீது கூம்பு வடிவத்தில் மக்ரூனைப் பிழிய வேண்டும். பேக்கரி அடுப்பில் வைத்து சுமார் நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் வேக வைத்து பின்னர் எடுக்க வேண்டும். இப்போது மக்ரூன் ரெடி.
இனிப்புப் பண்டமான மக்ரூன் மொறுமொறுப்பாக இருக்கும். கூம்பு வடிவில் வெண்மை நிறத்தில் உள்ள ஒரு மக்ரூனை எடுத்து வாயில் போட்டு கடித்துத் தின்றால் அதன் சுவை நம்மை அடிமையாக்கிவிடும். முழு பாக்கெட் மக்ரூனும் மளமளவென காணாமல் போகும். மக்ரூனை வாங்கிய உடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையென்றால் காற்று புகாமல் வைத்துப் பாதுகாக்க வேண்டும். காற்று கலந்து விட்டால் மக்ரூன் இறுகி அதன் மொறுமொறுப்புத் தன்மையை இழந்து விடும். இதன் பின் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்காது. காற்று புகாத டப்பாக்களில் வைத்தால் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும் என்று கூறுகின்றனர்.
தற்போது தூத்துக்குடி மட்டுமின்றி, சென்னை, திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூர் முதலான பகுதிகளிலும் மக்ரூனைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், இன்று வரை தூத்துக்குடி மக்ரூனின் சுவை தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
தூத்துக்குடி சென்றால் மறக்காமல் மக்ரூனை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாங்கி வந்து பரிசளியுங்கள்.

அழகான இந்த உழவுக்காட்சி 1877 ஆம் ஆண்டு ஆஸ்கார் மல்லிட்


 சீரான வரிசை மற்றும் ஒரே அளவில் ஆழமுடன் நிலத்தை உழுவதற்கு பயன்படும் பழங்கால விதைக்கலப்பை கருவியை கொண்டு உழவர்கள் விவசாயம் செய்வதை ஒரு ஆங்கிலேயர் மேற்பார்வை செய்கிறார்!!!

❤️🇮🇳🙏
அழகான இந்த உழவுக்காட்சி
1877 ஆம் ஆண்டு ஆஸ்கார் மல்லிட் oscar Mallite என்பவரால் அலகாபாத்தில் எடுக்கப்பட்டது!!!
இந்த கருவி ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் சீரான வரிசைகளில் விதைகளை நடுகின்றன, இதனால் கைமுறையாக விதைப்பதை விட முளைப்பு விகிதமும் பயிர் விளைச்சலும் அதிகரிக்கும்!!!

SpiceJet புதிய அறிவிப்பு! ✈️ 2025 மார்ச் 30 முதல், தினமும் 2 முறை சென்னை - தூத்துக்குடி

 


🦉SpiceJet புதிய அறிவிப்பு! ✈️
2025 மார்ச் 30 முதல், தினமும் 2 முறை சென்னை - தூத்துக்குடி விமான சேவைகளை SpiceJet தொடங்குகிறது. இதனால், இந்த வழித்தடத்தில் (sector) மொத்தம் 7 விமானங்கள் தினசரி இயக்கப்படும்!
🔥 எதிர்பாராத வளர்ச்சி! தூத்துக்குடிக்கு இத்தனை விமானங்கள் இயக்கப்படும் என யாருக்குத் தெரியும்?
💼 வணிகப் பயணிகள், சுற்றுலா பயணிகள், மற்றும் மீன்பிடி தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி!

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...