Monday, July 31, 2023

இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள்

இன்று பிரதோஷம் !எப்போது பிரதோஷம் என்றாலும் சிவபுராணம் அவசியம் அனைவரும் ஓத வேண்டும் !பிரதோஷ வேளையில் இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள் அன்று அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம் இந்த ஒரு பாடலுக்கு சிவபெருமான் மகிழ்ந்து நம் அடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை அருளி செய்வார் !முக்தி அருள்வார் !
சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

 
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபெருமானின் தந்தை யார்

சிவபெருமானின் தந்தை யார்? 
மகாதேவன் பிறக்காதவர் . அவர் நித்தியமானவர். அவருக்கு பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. அவர்தான் அனந்த். யாரும் அவருடையதந்தையும் அல்ல, அவருடைய தாயும் அல்ல. அவர் அனைவருக்கும் தந்தை ஆனால் யாரும் அவருக்கு தந்தை இல்லை.
சிவபெருமானின் தாய் யார்?
சிவன் சுயம்பு (அவன் தன்னை உருவாக்கினான்).

சிவனுக்கு தாய் யார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சிவனுக்கு அம்மா இருந்திருந்தால்

சிவனின் கழுத்தில் பாம்பை அணிவதை அவள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள், அதற்குப் பதிலாக சிவன் அணிந்திருக்கும் புலித்தோலை விட விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆடைகளை சிவனுக்கு அணிவிப்பாள்!
சமுத்திர மந்தனிலிருந்து கசிந்த விஷத்தை சிவபெருமான் குடிக்க ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
அழகிய சிவனின் உடலில் சாம்பலைப் பூச அனுமதிப்பதை விட, அவள் சந்தனப் பொடியைப் பூசியிருப்பாள்!
சிவனை ருத்ர_க்ஷேத்திரத்தில் (புதைகுழியில்) உறங்க விடாமல், தினமும் அவருக்கு தாலாட்டுப் பாடி, அவரை தொட்டிலில் தூங்கச் செய்திருப்பார்.
அகதௌ_பிதரவ் வந்தே பார்வதி பரமேஸ்வரம்

பிரபஞ்சத்தின் தந்தையும் தாயுமான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நான் வணங்குகிறேன்.

பிறந்தவருக்கு அப்பா அல்லது அம்மா இருப்பார்கள், இல்லையா?

ஆனால் சிவன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்காததால் பிறக்காதவர், எனவே அவருக்கு தந்தை அல்லது தாய் இல்லை.

சிவன் சுயம்புவாக இருப்பதால் (அவர் தன்னை உருவாக்கினார்) மற்றும் நினைவு வடிவில் பழங்காலத்திலிருந்தே (ஆதி, அனந்த்) இருக்கிறார். ஆக, சிவன் எதுவும் இல்லாதபோதும் இருப்பார், எல்லாம் இல்லாமல் போனாலும் கூட.

10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில்



சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.🍂 *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு 🍂.சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம் பொறுமையாக படித்து சிவத்தின் பெருமை பற்றி தெரிந்து கொள்வோம் 

சிவார்ப்பணம்

சிவனின்றி அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகளாவிய அமைப்பு.

🍂 சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்
*🍂 " ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப..." என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

* 🍂 மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன்

நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

* 🍂தென்னக சிவாலயங்களில் இருப்பவை, ஓங்கோல் ரக மாடுகளின் தோற்றமுடைய சிற்பங்களே. கவர்ச்சியும் மிடுக்கும் மிக்க இந்த ஓங்கோல் ரக மாடுகள் ஆந்திர மாநிலத்தின் பெருமைக்குரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

*🍂சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.

* 🍂நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

*🍂 சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

*🍂 நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

* 🍂மராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோயிலில்தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது. நாட்டிலேயே இங்குள்ள சிவனுக்குத்தான் நந்தி தேவர் இல்லை.

* 🍂தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்.

* 🍂சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமாந்தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் வணங்க வேண்டும்.

* 🍂பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

*🍂 பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

* 🍂பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

* 🍂சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால்தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.

Monday, July 17, 2023

தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள்

 பணக்கார மாவட்டங்கள் எவை ?


தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள் 

எவை என்று கேட்டாலே நாம் அனைவரும் முதலிடத்தில் #சென்னையோ அல்லது 

#கோவையோ தான் இருக்கும் எனச்

சொல்லத் தோன்றும். 


ஆனால் தமிழகத்தின் முதல் ஐந்து பணக்கார மாவட்டங்களின் பட்டியலிலும் இந்த இரண்டு மாவட்டங்கள் இல்லை !!!


வேறு எந்தெந்த மாவட்டங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன்ன என்று பார்ப்போமா?


இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 

தமிழ்நாடு இரண்டாம் இடத்தில்

உள்ளது ! தமிழ்நாடு ஒரு வளமான மாநிலமாக இந்தியாவில் இருப்பதற்கு

தொழில்துறை, ஏற்றுமதி, விவசாயம் என அனைத்திலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதுதான் காரணம்.


ஆனால் இந்த நற்பெயர் எல்லாமே தமிழகத்தின் மாவட்டங்களை தான் சேரும். தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி, விவசாயம் என மாவட்டத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த வருமானத்தையும் ஒன்று கூட்டி அதனை அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால் சராசரி தனி நபர் வருமானம் தெரிந்துவிடும். அதில் எது மிகுதியாக இருக்கிறதே அதுவே பணக்கார மாவட்டமாகும்.


முதலிடத்தில் ஏன் சென்னை இல்லை

பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், உற்பத்தி ஆலைகளும், மேலை நாட்டு கலாச்சாரத்துடன் அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே, ஏன் சென்னை முதலிடத்தில் வரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். 


சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் இங்கு வாழ்வதால் தனி நபர் வருமானமும் குறைகிறது.


தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களில்.......


#முதலிடம் வகிப்பது #கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழுகின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான், அதே மாதிரி இந்த மாவட்ட மக்கள் கேரள அரசுப் பணிகளிலும் நிறைய பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் இந்த ஊர் மக்கள் தான். ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுடன், மீன்வளம், விவசாயம், சுற்றுலா என எல்லாவற்றிலும் கன்னியாகுமரி கலக்கி வருகிறது. கன்னியாகுமரியின் தனிநபர் வருமானம் ரூ.81,094, இது தான் தமிழகத்திலேயே தனி நபர் வருமானம் ஆகும்.


#இரண்டாம்இடத்தில்

'#டாலர்_நகரம்' என்று பிரபலமாக அறியப்படும் 

#திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ளது. இந்தியாவின் இந்த பின்னலாடை தலைநகரில் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாக இருந்த திருப்பூர் இப்போது இரண்டாவது பணக்கார மாவட்டமாக வளர்ந்துள்ளது. திருப்பூரின் தனிநபர் வருமானம் ரூ.72,479 ஆகும்.


#மூன்றாம் இடத்தில் உள்ள

#திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நம்பியே உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில் சுமார் நாற்பத்தேழு சதவீதம் பேர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது மட்டுமே திருவள்ளூரின் வாழ்வாதாரம் இல்லை, ஆவடி, அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் இருக்கும் மெட்ராஸ் ரிஃபைனரீஸ், மெட்ராஸ் ஃபெர்டிளைசர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், MRF, அசோக் லெய்லேண்ட், பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற மாவட்டங்கள் திருவள்ளூரை மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது. ரூ.70,778 திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானமாகும்.


தமிழ்நாட்டின் #நான்காவது பணக்கார மாவட்டமாக #விருதுநகர் ரூ.70,689 தனி நபர் வருமானத்தை கொண்டுள்ளது. விருதுநகர் நான்காவது இடத்தில் நம்மில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ஆயில், காபி, தானியங்கள் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்வதுடன், ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகளுடன் விருதுநகர் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.


#ஐந்தாம் இடத்தில் இருப்பது #காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நீண்ட காலமாக இந்தியாவின் புனித நகரமாக கிட்டத்தட்ட ஆயிரம் கோயில்களைக் கொண்டுள்ளது, மெதுவாக அது ஒரு சாதகமான வணிக தலமாகவும் மாறி வருகிறது. முக்கியமாக விவசாயம் மற்றும் பட்டு தொழில் துறைகள் காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மற்றொரு முக்கிய தொழில் சுற்றுலாத் துறையாக இருக்கிறது. காஞ்சிபுரத்தின் தனிநபர் வருமானம் ரூ.70,667 ஆகும்.


#ஆறாம் இடம்: கோவை - ரூ.65,781, 


#ஏழாம் இடம்: திருச்சி - ரூ.65,011, 


ரூ 63,467 தனி நபர் வருமானம்

உள்ள தூத்துக்குடி #எட்டாம் இடம்பெறுகிறது


ஜவுளி நகராம் #ஈரோடு (ரூ.61,631)

#ஒன்பதாம் இடத்தைப் பிடிக்கிறது 


கைத்தறி நகராம் எங்கள் கரூர் (ரூ.61,181) 

பத்தாம்_இடத்தில் பத்திரமாக இருக்கிறது.


*நாமக்கல் (ரூ.58,133) பதினொன்றாம்

இடத்தில் பக்குவமாக இருக்கிறது.


தலைநகர்_சென்னை - ரூ.57,706 தனிநபர் வருமானத்துடன் 12 ஆம் இடத்தில்

தடுமாறிக்கொண்டிருக்கிறது. 


பாவம் பிற மாவட்டங்கள் முன்னும்

பின்னும் அல்லாடிக்கொண்டுள்ளன.


மாவட்டங்கள் வளமாக இருக்கட்டும்,

ஆனால், அனைத்து மக்களும் சமமான

வருமானத்துடன் வளமாக வாழ்கிறார்களா

என்பது பெரிய கேள்விக்குறியாகவே

இருக்கிறது !!!???

KiteSurfing Courses From Beginner to Advanced-Aqua out pack

From Beginner to Advanced

Aqua Outback is the perfect venue to progress your kiteboarding skills to the next level.

Tuticorin is one of India's best situated spots for wind based water sports
 Consistent Strong winds & shallow, flat blue waters of the lagoon.

Top Quality kite gear from North, Ozone, Cabrinha, f one, duotone   & Mystic.

The Team are well experienced IKO certified instructors, including National Championship Winners.
India's only IKO affiliated school

Modern Teaching Methodologies using Helmets, flotation impact vest. Photo and Go-Pro services.

Safety is a Priority, with well trained support staff & rescue boats on standby.

Individual or Small Group Kite Courses and Lessons.

Special Discounted Room Rates available with Kite Surf courses

 Book this season

Use promo code AQUA10 AND GET DISCOUNTS ON YOUR KITESURFING STAY
     

Warm Regards,
Team Aqua Outback
Veppalodai
Thoothukudi
Tamilnadu
India
+91 96007 88789
 info@aquaoutback.com


சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி..



*சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி..*

*அம்மன் கோவில்களில் கொண்டாட்டம்.. என்னென்ன விஷேசங்கள் :-*

*மிகவும் சக்தி வாய்ந்த ஆடி மாத சிறப்புகளை இரத்தின சுருக்கத்தில் இதோ உங்களுக்காக...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



ஆடி மாதம் தமிழ் மாதங்களில் நான்காவது மாதம்.

சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். 

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் என்னென்ன சிறப்பான திருவிழாக்கள் எந்த நாளில் கொண்டாடப்பட உள்ளது என்று பார்க்கலாம்...

💜💙🩵🩷❤️🧡💛🤍🩶🤎💜

*ஆடி புராண கதை:-*

ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்...

சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். 

தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார்...

அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

🌳🌳🌳🌴🌴🪴🌴🌴🌳🌳🌳

*வேப்பமரம்:-*

மேலும்... அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. 
எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார். அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும்...

அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்...

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது.!

நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை....

🍎🍏🍊🍋🥥🍍🥭🍇🫐🍓🍑

*ஆடி மாத பிறப்பு:-*

ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. உயிர்களைக் காக்கும் சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிக் கொள்கிறார். 

ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். 

ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை உள்ளது.!

பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். 

ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்...

எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்...

🌐🌀💠❇️⚜️🔱⚜️❇️💠🌀🌐

*ஆடி பண்டிகை:-*

 தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது.

அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.!

மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்...

ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔

*திருமண வரம்:-*

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். 

ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். 

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். 

அதே போன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். 

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.

🌕🌖🌗🌑🌑🌑🌓🌔🌕

*ஆடி அமாவாசை: -*

ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்ந வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனுடன் தொடர்பு ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும். 

அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆடி 1 ஜூலை 17, 
ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆடி 30ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த 2023 ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது.

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*ஆடிப்பூரம்:-*

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்...

*இந்த ஆண்டு ஆடிப்பூரம்:-*

ஜூலை 22 ஆம் நாள் ஆடி 06ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

*ஆடி பதினெட்டாம் பெருக்கு:-*

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். 

காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகஸ்ட் 3 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

🏮🏮🏮🏮📿📿📿🏮🏮🏮🏮

*ஆடி கிருத்திகை:-*

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. 

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். 

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். 

இந்த மாதம் ஆடிக்கிருத்திகை 
ஆடி 24, ஆகஸ்ட் 09ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

🐘🐘🐄🐄🦚🦜🦚🐄🐄🐘🐘

*ஆடி தபசு:-*

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இன்றைக்கும் பாரம்பரியமாக இந்த விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 

ஆடி 16 ஆகஸ்ட் 01ஆம் தேதி பௌர்ணமி பூஜை கொண்டாடப்படுகிறது.

🌐🌀💠✳️🔆🔱🔆✳️💠🌀🌐

*கடைசி ஆடி:-*

 ஆடி மாதம் முதல்நாள் எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆடி மாத கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை. 
இந்த ஆண்டு ஆடி 32 நாளாகும். ஆகஸ்ட் 17ஆம் நாள் கடைசி ஆடி கொண்டாடப்படுகிறது.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    

*ஆடி மாதம் முன்னிட்டு...*
*ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் உருகி வழிபாடுகள் செய்வோம்...!!!*

🍎🍏🍊🍋🥥🍍🥭🫐🍇🍓🍑

*வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.!*

*ஓம் சக்தி பராசக்தி*
*ஓம் சக்தி ஆதிபராசக்தி*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

Thursday, July 13, 2023

As we are outside and chilling we shouldn't forget this illustration

 As we are outside and chilling we shouldn't forget this illustration



ஞாயிற்றுக்கிழமை எனும் சொர்க்கம்:-old Tamilian memories

ஞாயிற்றுக்கிழமை எனும் சொர்க்கம்:
ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பிலும் ஒரு ஞாயிற்றுக்கிழமை உண்டு.
மற்ற நாட்களில் உழைத்து களைத்த நாம், உற்சாகம் பெறும் நாள் இந்த ஞாயிறு.
இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமைகள் தந்த
சந்தோசமும், உற்சாகமும் இன்று நினைத்தாலும் இனிக்கும்.
சனிக்கிழமை ராத்திரியே நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற சந்தோசம் நமக்குள் பரவும்.
என்றுமே தூக்கத்திலிருந்து விழிக்க தயங்கும் நாம், ஞாயிறுகளில் மட்டும் விடியற்காலையில் விழிப்போம். அந்த காலை எழுந்ததுமே நமக்குள் ஒரு பரபரப்பு வரும்.
காலையில இட்லியோ தோசையோ ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டுல சாப்பிட கிடைக்கும். மத்தநாள் எல்லாம் காலையில சோறுதான்.
ஞாயிறு விடியற்காலை நேரத்திலேயே கறிக்கடைகள் நிரம்பி வழியும்.
கறினாலே அப்பலாம் ஆட்டுக்கறி தான். இப்ப இருக்குற மாதிரி சிக்கன் வாங்குறவங்க அப்ப கம்மிதான்.
மதிய நேரத்தில் எல்லா வீட்டிலிருந்தும் கறிக்குழம்பு கொதிக்கும் மணம் வரும்.
நான் சின்ன பையனா இருந்தப்ப ஒரு கிலோ ஆட்டுக்கறி 90 ரூபாய்க்கு வாங்கியிருக்கேன்.
தெருக்களில் சிறுவர்கள். கில்லி, கோலி, பம்பரம், பாண்டி தாண்டுதல், என அந்தந்த காலத்தில் உள்ள சீசன் விளையாட்டுக்களை விளையாடுவர்.
தாத்தாக்களும் , பாட்டிகளும் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஊர்க்கதை பேசுவதை கேட்பதே தனி சுகம்.
கிழவிகள் வெற்றிலை உரலில் வெற்றிலை இடிக்கும் சத்தமே தனி இசை.
கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் தென்னை மட்டையில் செய்த கிரிக்கெட் பேட்டினை வைத்து மும்மூரமாய் கிரிக்கெட் விளையாடுவர்.
காலையில் டிவியில், பட்டிமன்றமும், அரட்டை அரங்கமும் அனல் பறக்கும்.
சினிமா டாப் டென் பார்த்து எந்த படம் எந்த இடத்தில் உள்ளதென்று விவாதம் கிளம்பும்.
மதிய நேர கறிச்சோறு தின்ற பின்னர் ஒரு சுகமான உறக்கம் அழையா விருந்தாளியாய் வந்து சேரும்.
சில நாள்களில் விளையாட்டு ஆர்வத்தில் மதிய சாப்பாடு சாப்பிட சாயங்காலம் ஆகிவிடும்.
சாயங்காலம் தியேட்டருக்கு சென்று புதுப்படம் பார்த்து, இடைவேளையில் தின்ற பண்டங்கள் கூட இன்னும் மறக்கவில்லை.
தியேட்டருக்கு செல்லாத நாட்களில், ஞாயிற்றுக்கிழமை மாலை நேர டிவி திரைப்படங்கள் நம்மை மகிழ்விக்கும்.
ஞாயிறு மாலை இருட்டியதும், மறுநாள் திங்கள்கிழமை என்ற சோர்வு நம்மை தொற்றிக் கொள்ளும்.
ஆனாலும் , திங்கள்கிழமை காலை முதல் நாட்களை எண்ணத் தொடங்குவோம், அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று..!

Old age.... Let us save ...

When hotel owner bent down to serve rice the elderly man asked....

How much do you take for lunch......
Said the owner ...
50 with fish curry,
20 rupees without fish....
He took a torn shirt from his pocket and extended it to the owner....
This is what I have in my hand.....
Put as much as you can for this....
Even if it is the food you get...
So hungry.
Haven't eaten anything since yesterday
His words that hesitate to say that.
Even the throat is shaking.... *
Hotel owner with fish gravy... He handed everything to him.
I stopped watching him eat....
Tears leaked thinly from his eyes...
Why are you crying ...?
The person who heard that word said it with his eyes closed...
I'm shedding tears remembering my past life....
I have three kids, two boys and one girl.....
All three are in a good job....
Spent every penny I collected on their promises. I migrated losing my youth and 28 years of physical life for that...
Immigration over all my wife left me alone at old age....
My sons and daughters have started putting me away since I started dividing property.
I'm slowly starting to realize the burden of them.
Slowly they are starting to put me away....
Am I old now....?
Shouldn't I respect at least for my age?
I go to dinner after they all eat so no wrong with scolding and yelling food was mixed with tears and salt
The grandchildren never talk to me. In the fear of whether parents will beat us if we see...
The same agony when you can live anywhere in the oven, the...
This house is built with bricks bought with the money she and I collected by sweat all day and night without sleeping, without eating, without eating to stomach...
But what do I do? I was stamped as a thief - in an excuse - for stealing the gold of my daughter-in-law... Son got angry, good job he didn't extend his hand. He did not commit that sin.
That is my luck. Could have happened if I was there.
Woke up in the middle of a meal.
Extended 10 rupees in front of owner..
No owner, keep it in the bag, let it be....
You can come here anytime...
You can always eat lunch..
That man put 10 rupees there itself....
Very happy for your help....
What do you think...
Self respect don't leave me. When I said they are coming, they took a small bag and started slowly towards an unknown place...
The wound that man caused my heart has never healed till today.
That's why it is said that every drop will be ripe one day.
Elders like ripe skins should be protected like eyes.
Such a day for us..???
Share those who want to share everything whether you like it or not..
If anyone changes their mind..... "Enough is "
Let the change begin with us. Today itself.....

Even if the civilization is completely destroyed in the world-Thirukural

 


உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்.''

- கால்டுவெல்
#தமிழன்_பெருமை


 "Even if the civilization is completely destroyed in the world, it is enough to have Thirukural; it can be renewed again. ''

- Caldwell
தமிழன்_பெருமை

Wednesday, July 12, 2023

Memories of childhood

 p

                                            


வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா???
இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்
கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது
நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்
ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..
ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..
ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..
ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..
கண்டதை உண்டாலும் செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..
பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்
உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்
ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..
எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..
வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..
பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..
கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..
மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..
ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..
படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்
தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தலை வைத்து
நாம் உறங்கிய தருணம் கண்டோம்
பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய
பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..
அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..
பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..
பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்
ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்
செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது
தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்
காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்
ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்
ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..
மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...
ஆமாம் தானே???

All reactions:
10

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...