Showing posts with label ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு. Show all posts
Showing posts with label ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு. Show all posts

Thursday, February 8, 2024

ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு

 கீழே படத்தில் நீங்கள் காண்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு


ஆகா இது நீங்கள் நினைப்பது போல் அரபுநாட்டு எண்ணை கிணறல்ல


வானமாமலை திவ்யதேச பகவானுக்கு தினமும் சாற்றுபடி (அபிஷேகம்) ஆகும் தைலகாப்பு ( நல்லெண்ணை அபிஷேகம்) தேக்கி வைக்கபடும் கிணறு போன்ற ஒன்று

அதாவது பகவான் ஶ்ரீவானமாமலை தெய்வநாயக பெருமாள் ஜீயர்ஊற்றில் (சேற்று தாமரை என்னும் குளத்தில் உள்ள ஒரு இடம்) ஸ்வமாயாக தோன்ற  திருவுள்ளம் கொண்டு பகவானே கருடன் மூலம் காட்டி கொடுத்த (ஸ்வயம்வக்த சேத்ரம் மொத்தம் 8 அந்த எட்டில் முதன்மையான ஸ்தலம் நம் வானமாமலை) இடத்தை தோண்டும் போது தவறுதலாக தோண்ட உபயோகித்த ஆயுதம் பகவான் தலையில் பட்டு அதன் காரணமாக பகவான் தலையில் இருந்து வடிந்த திரவத்தை தடுக்க எண்ணி அவருக்கு சிறப்பு தைலம் சாற்ற 

அன்றுமுதல் இன்றை வரை பகவானுக்கு தினமும் சாற்றுபடி ஆகும் தைலம் மற்றும் பால் இளநீர் போன்ற இதர அபிஷேக தீர்தங்கள் கோயில் கருவரை கோமுகி வழியாக உட்பிராகரத்தில் இருக்கும் ஶ்ரீராமர் சன்னதி அருகே வந்து சேரும் அந்த தைலத்தை தகர டப்பாக்களில் பிடித்து இந்த கிணற்றில் (கிணறு போன்ற இடத்தில்) கொட்டி வைத்து காலம் காலமாக பாதுகாக்க படுகிறது இதனையே இவ்வூரில் எண்ணைகிணறு என பழங்காலத்தில் இருந்தே அழைக்கின்றனர்

இந்த பகவானுக்கு அபிஷேகம் செய்து சேர்த்து வைக்கும் எண்ணை கிணற்றுக்கு சில வருடம் முன்பு வரை மேற்கூரை கிடையாது  ஆகையால் வெயில் மழை என இதன் மேல் பட்டு பட்டு இந்த எண்ணை காலப்போக்கில் இயற்கையாகவே மேலும் மேலும் பக்குவமடைவதால் சிறந்த மருத்துவ தைலமாக மாறி விடுகிறது இதனை சஞ்சீவினி தைலம் ( எண்ணை) என்பர்

அதாவது இந்த எண்ணையை ஒருமண்டலம் உடலில் நன்கு தெப்ப தெப்ப தேய்த்து உடலை நன்கு ஊரவைத்து நீராடிவர உடலில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வியாதிகள் குணமாவதாக அதீத நம்பிக்கை மற்றும் பலரது அனுபவமும் கூட

இந்த தைலத்தை தினமும் ஒருசிறு அளவில் உள்ளுக்கு உட்கொண்டு வர உடலின் உள்ளே ஏற்பட்ட பல தீராத உடல் வியாதிகள் தீருகிறது என்பது நம்பிக்கை பலர் அனுபவத்திலும் கண்டு உள்ளனர்

கோயிலிலேயே இந்த தைலம் சிறு சிறு பாட்டிலில் கிடைக்கிறது (விலை ₹25/- என நினைக்கிறேன் முன்பு ₹15 ஆக இருந்து)

தற்போது இந்த எண்ணை கிணற்றுக்கு மேல் வெளிச்சம் படுமாறு வெள்ளை நிற கூரை வேய்ந்து உள்ளதால் மழைஜெலம் விழுவதில்லை சூரிய கதிரும் முன்புபோல் விழுவதில்லை

பகவான் அபிஷேக தைலம் கோமுகியில் இருந்து மோட்டார் மூலம் கிணற்றுக்கு செல்கிறது

ஆனாலும் இதன் மருத்துவகுணம் இன்றும் மாறவில்லை

பகவானுக்கு அனுதினமும் நடக்கும் (21/2 லிட்டர் தைலம் கொண்டு) தைல காப்போடு அன்றைய தினம் ஏதாவது அபிமானிகள் பக்தர்கள் தங்களது பிறந்தநாள் திருமணநாள் அல்லது உறவினர் நண்பர் மற்றும் தங்களது குழந்தைகளின் நட்சத்திரம் போன்ற வைபவத்துக்காக பிரார்தனை செய்து காணிக்கையாக தரும் எண்ணையை (கோவிலில் பணம் கட்டிவிட்டால் அவர்களே நல்ல செக்கில் உருவாக்கபட்ட நல்எண்ணையை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர் அதில் இருந்து தேவைக்கு எடுத்து கொள்வர்) கொண்டும் தைல காப்பு நடைபெறும் 

இது போக வருடத்துக்கு தற்காலத்தில் சில வருடங்களாக 6 முறை ஒருகோட்டை (256 லிட்டர்) எண்ணையால் அபிஷேகம் நடைபெறும் இதனை ஒருகோட்டை எண்ணை காப்பு என்பர்

இந்த வருடம் இந்த தை மாதம் அமாவாசை (01/2/2022 திங்கட்கிழமை) அன்று இவ்வூர் அதாவது வானமாமலை திவ்யதேச அபிமானிகள் சிஷ்யர்களால் இன்றைக்கு சுமார் 43 ஆண்டுக்கு முன் வானமாமலை மடம் /திருவல்லிகேணி வானமாமலை மடம் ஆகிய இடங்களில் அப்போதைய ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழிகாட்டுதல் படி கூடி பேசி வானமாமலை வித்வான்கள் பெரியோர்கள் அன்றய இளைஞர்களால் ஏற்படுத்தபட்ட  ஶ்ரீவானமாமலை ஶ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபா மூலம் இவ்வருடம் தொடர்ச்சியான 43வது வருட ஒருகோட்டை எண்ணை காப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது

(01/2/2022) இரண்டு வருடங்களுக்கு முன் திங்கட்கிழமை பல்வ வருட தைமாத ( சேஷம்)அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் அன்று காலை 8.45 மணி அளவில் வானமாமலை ஶ்ரீமடத்தின் வர்த்தமான ஜீயரான(31வது பட்டம்) ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் முனலனிலையில் நடைபெற தொடங்கும் தைலகாப்பு சுமார் 9.15 மணி அளவில் நிறைவடையும் அதை தொடர்ந்து பால் இளநீர் சந்தனம் திருமஞ்சனதிரவியம் வெள்ளி தங்க குடதீர்தம் என அபிஷேகம் 9.45 வரை நடைபெறும் தொடர்ந்து பகவத்அலங்காரம் அர்ச்சனை தூபதீப ஆராதனை சேவகாலகோஷ்டி ஆசாரியர் மரியாதை ஆசாரியர் மற்றும் கோஷ்டி பகதர்கள் என முறையே தீர்தம் சடகோபம் திருத்துழாய் ஜீரான்னபிரசாத விநியோகம் என வரிசையாக சுமார் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்

அன்றய தினம் ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி தீர்தம் நாள் (ஸ்வாமி பரம்பதித்த திதி) எனவே அன்று ஶ்ரீமடத்தில் விசேஷ சேவகாலம் கோஷ்டி தீர்தம் சடகோபம் மற்றும் அபிமானிகள் பக்தர்களுக்கு விசேஷ ததியாராதனை {தினமும் ததியாராதனை உண்டு ( ஜீயர் மடத்தில் எழுந்தருளி உள்ள காலங்களில்)} என நடைபெறும் (ததியாராதனை அநேகமாக மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்)

அன்றய தினம் வானமாமலை ஊரே கோலகாலமாக இருக்கும்

மாலை கோவிலில் ஶ்ரீமடத்தில் அல்லது முன் மண்டபத்தில் விசேஷ உபன்யாசம் மற்றும் ஆடல் பாடல் விசேஷ வாத்யம் மற்றும் இரவு ஶ்ரீதோதாத்ரி ஸ்வாமி கருடவாகனத்திலும் தாயார்கள் முறையே அன்னவாகனம் கிளிவாகனம் என விசேஷபுறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

அனைத்து வைபவங்களும் முடிய மறுநாள் அதிகாலை 2.00 மணி ஆகிவிடும்

முடிந்தால் அன்பர்கள் வந்தருளி கண்டு பகவத் க்ருபைக்கும் ஆசாரியன் க்ருபைக்கும் ஒருமுறையாவது பாத்திரமாகும் படி கேட்டு கொள்கிறோம்


ஜெய் ஶ்ரீராம்!

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...