நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்!
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து மார்ச் 10,12 & 17ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதே போன்று நாகர்கோவிலில் இருந்து 11,13 & 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் செல்லும்.