Thursday, January 16, 2025

நிலக்கடலை சக்கரையை கொல்லும்

 



May be an image of baked beans




















நிலக்கடலை

சக்கரையை கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு

 

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு, இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர்

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒச்சாப்பு கல்லு எனும் இடம் அமைந்துள்ளது. வில்பத்து எனும் அடர்ந்த காட்டின் மத்தியில் ஒச்சாப்பு கல்லு அமைந்துள்ளது. வில்பத்து காட்டின் மத்தியில் ஓடும் மோதரகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிலாமடு தேக்கம் எனும் சிறிய அணைக் கட்டின் தெற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் இவ்விடம் காணப்படுகிறது.
வில்பத்து இலங்கையின் முதலாவது மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். இது 1317 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட அடர்ந்த வனமாகும். இலங்கையில் அதிகளவில் சிறுத்தைப் புலிகள் இங்குதான் வாழ்கின்றன. பல புராதன வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வனம் 1905 ஆண்டு ஆங்கிலேயரால் வனவிலங்குகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வனம் 1938 ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது பெருங்கற்கால மையம் என அழைக்கப்படும் பொம்பரிப்பு என்னுமிடம் இவ்வனத்தில் தான் அமைந்துள்ளது. இவ்வனத்தில் மொத்தமாக பண்டைய வழிபாட்டுப் பாரம்பரியமிக்க 32 இடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தான் ஒச்சாப்பு கல்லு என்னுமிடமாகும். இங்கு மொத்தமாக 106 வில்லுக் குளங்கள் அமைந்துள்ளன. இதனால் தான் இப்பிரதேசம் வில்பற்று அல்லது வில்பத்து எனப் பெயர் பெற்றது. இவற்றில் பிரதான வில்லுக் குளங்கள் மற்றும் இடங்கள் ஆகியன தூய தமிழ்ப் பெயர்களைக் கொண்டவையாகும்.
அவையாவன: இலவன் குளம், மாக்கிளான் மடு, நடு நாவல், மூலைக் கண்டல் வெளி, பொன்பரப்பி, கருவாட்டுக் குடா, இலந்தை மோட்டை, தலை வில்லு, கொம்பன் சாய்ந்த வில்லு, உடும்பு வில்லு, செங்கட்படு வில்லு, பணிக்கர் வில்லு, ஆலம் வில்லு, வீரக்குட்டி வில்லு, ஆத்தாள் வில்லு, மறிக்கரம் வில்லு, காஞ்சுரம் வில்லு, கட்டெறும்பு வில்லு, கொக்காரி வில்லு, நல்ல தண்ணி வில்லு, சின்ன உப்பு வில்லு, பெரிய உப்பு வில்லு, பெரிய நாகவில்லு, சின்ன நாகவில்லு, வண்ணாத்தி வில்லு, மகிழம் வில்லு, இரணை வில்லு, தம்மனா வில்லு, நமதா வில்லு, குமுட்டு வில்லு, குருத்துப் பாண்டி வில்லு, பெரிய வில்லு, காளி வில்லு, மரை வில்லு, மண வில்லு, மயில் வில்லு, காய மோட்டை வில்லு, அமுதவல்லி வில்லு, தங்க வில்லு, குமிழ வில்லு, கார வில்லு, பொருப்பன் வில்லு, நாவலடி ஊற்று, மாணிக்கப்பளை ஊற்று, பட்சி ஓடை, மதுர ஓடை, பலகைத் துறை, மட்டி மடு, மாவலங்கை மோட்டை, கொக்கு மோட்டை, கட்டக் கண்டல் குளம், பட்டி வெளிக் குளம், குதிரை மலை, குதிரை மலை முனை, ஒரு சாய்ப்புக் கல் ஆகிய இடங்களாகும்.
இவற்றைத் தவிர நெலும் வில்லு, தெமட்ட வில்லு, லுமா வில்லு, திம்பிரி வில்லு, கும்புக் வில்லு, குடா பெதஸ்ஸ வில்லு, மஹா பெதஸ்ஸ வில்லு ஆகிய வில்லுக் குளங்களும் இங்கு உள்ளன. இப்பெயர்களில் பொன்பரப்பி என்பது பொம்பரிப்பு எனவும், ஒரு சாய்ப்புக் கல்லு ஒச்சாப்பு கல்லு எனவும் திரிபடைந்துள்ளன. இங்குள்ள கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள முக்கியமான பாறை ஒரு பக்கமாகச் சாய்ந்து காணப்படுவதால் இப்பெயர் உருவாகியிருக்கலாம். ஒச்சாப்பு கல்லு வில்பத்து காட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் இங்கு செல்வதற்கு குறிப்பிட்ட நிரந்தரமான, சீரான பாதை எதுவும் கிடையாது. ஆனால் ஐந்து வழிகளின் ஊடாக இவ்விடத்திற்குச் செல்லலாம்.
புத்தளம் நகரில் இருந்து வடக்கு நோக்கி வில்பத்து காட்டின் ஊடாக மன்னாருக்குச் செல்லும் வீதியில், கலா ஓயா, பொம்பரிப்பு ஆறு, பொம்பரிப்பு, பெரிய உப்பு வில்லு, பெரிய வில்லு, பெரிய நாக வில்லு, மலை வில்லு ஆகியவற்றைக் கடந்து வில்பத்து காட்டின் வட எல்லையில் ஓடும் உப்பாறு எனும் மோதரகம் ஆற்றையும் கடந்து, சிறிது தூரம் சென்றதும் வலது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதையில் வேப்பம் வில்லுக்குச் செல்லும் பாதை வழியாக சுமார் 8 கி.மீ பயணம் செய்து, கொக்குமோட்டை என்னுமிடத்தில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால், ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
இரண்டாவது பாதை : மன்னாரில் இருந்து தெற்கு நோக்கி நானாட்டான், அரிப்பு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஊடாக மறிச்சுக்கட்டி பழைய பள்ளிவாசலைக் கடந்ததும் இடது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக மேலே குறிப்பிட்ட வேப்பம் வில்லு ஊடாக 8 கி.மீ பயணம் செய்து கொக்குமோட்டையில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால் ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
மூன்றாவது பாதை : புத்தளத்தில் இருந்து அனுராதபுரத்துக்குச் செல்லும் வீதியில் உள்ள பஹல மஹரகஹ வெவ என்னுமிடத்தில் உள்ள வில்பத்து சந்தியில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள ஹுனுவிலகம என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து வில்பத்து காட்டுக்குள் நுழைந்து, வீரன் சோலை, மரதன் மடு, உப்பு வில்லு ஆகிய இடங்களைக் கடந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 6 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
நான்காவது பாதை : அனுராதபுரத்தில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள ஒயா மடு, பேய் மடு, மகாவிலச்சி ஆகிய இடங்களைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் புகுந்து சின்னடியா வில்லு ஊடாக மகாவெவ ஆறு, மொறகொல்ல ஆறு ஆகியவற்றைக் கடந்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
ஐந்தாவது பாதை : மேலே குறிப்பிட்டுள்ள அரிப்பு பாதை வழியாக பேய் மடுவைக் கடந்து மகா விலச்சி வாயில் ஊடாக வில்பத்து காட்டுக்குள் புகுந்து, அரிப்பு வீதியில் 21 ஆவது மைல் கல் அருகில் மேற்குப் பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக தேக்கம் அணைக்கட்டை அடைந்து அங்கிருந்து மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக சுமார் 2 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
இத்தனை பாதைகள் இருந்தாலும் இவை அனைத்தும் சீரான, இலகுவான பாதைகள் அல்ல. மிகவும் கடினமாக, ஒரு வழிகாட்டியின் துணையுடனேயே இப்பாதைகள் ஊடாக பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடைய முடியும்.
ஒச்சாப்பு கல்லு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். இதே காலப்பகுதியில் இங்கு பொறிக்கப்பட்டுள்ள நாகர் தொடர்பான பிராமிக் கல்வெட்டுகள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இலங்கையின் மேற்குக் கரையில் தான் பண்டைய நாக இராச்சியங்களான மாந்தை, குதிரை மலை, கல்யாணி ஆகியவை அமைந்திருந்தன. இவற்றில் குதிரைமலை இராச்சியத்திற்குட்பட்ட பகுதியில் ஒச்சாப்பு கல்லு காணப்படுகிறது.
ஒச்சாப்பு கல்லு தட்டையான பாறைகள் நிறைந்த காட்டுப் பகுதியாகும். இங்குள்ள மூன்று தட்டையான பாறைகளின் மீது வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள பிரதான கற்குகையின் பின்பக்கம் செவ்வக வடிவில் இருந்த ஒரு கட்டடத்தின் கருங்கல் அத்திவாரமும், அதில் சில கற்தூண்களும், இதன் அருகில் குழிக்கற்கள் சிலவும் காணப்படுகின்றன. புராதன கால செங்கட்டிகள் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன.
ஒச்சாப்பு கல்லு பகுதியில் சுமார் 15 இற்கும் மேற்பட்ட இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பல குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ள கற்குகைகளில் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 6 முற்கால பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பாறையில் எழுதப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றுமாக மொத்தம் 7 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் இரு பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னன் மற்றும் இளவரசன் கண்ணன் அல்லது கணேசன் பற்றிக் கூறும் கல்வெட்டு
ஒச்சாப்பு கல்லில் காணப்படும் முற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றில் மிக முக்கியமான விடயம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கண்ணன் அல்லது கணேசன் பற்றியதாகும்.
இக்கல்வெட்டில் “ரஜ கணச புத ரஜபுத கணச லேனே அகட்ட அனகட சட்டுதிச சகச” என எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள கணச எனும் சொல்லை ‘கண்ண’ என பேராசிரியர் எஸ். பரணவிதான கூறியுள்ளார். அதேசமயம் இதை ‘கணேச’ எனவும் பொருள் கொள்ளலாம். இதன்படி இவ்வாக்கியத்தின் பொருள் “அரசன் கண்ணன் அல்லது கணேசனின், அரச புதல்வன் கண்ணன் அல்லது அரச புதல்வன் கணேசனின் குகை” என்பதாகும். இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதி கிடைக்கவில்லை.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின்படி கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்துள்ளான் என்பதும், அவனுக்கு கண்ணன் அல்லது கணேசன் என இதே பெயரைக் கொண்ட மகனும் இருந்துள்ளான் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மகாவம்சம் கூறும் இலங்கை மன்னர்களின் பட்டியலில் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயரில் மன்னர்கள் யாரும் குறிப்பிடப்படவில்லை. எனவே கல்வெட்டுக் குறிப்பிடும் கண்ணன் அல்லது கணேசன் என்பவன் இப்பிரதேசத்தின் சிற்றரசனாக இருக்கவேண்டும். எனவே, வில்பத்து எனும் காடுகள் நிறைந்த வடமேற்கு இலங்கைப் பிரதேசத்தை 2300 ஆண்டுகளுக்கு முன் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட தமிழ்ச் சிற்றரசன் ஆட்சி செய்துள்ளான் என்பதே இக்கல்வெட்டுக் கூறும் செய்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையாகும்.
நாகனின் குகை பற்றிய கல்வெட்டு
ஒச்சாப்பு கல்லு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளில் இரண்டு நாகர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளாகும். இவ்விரண்டில் ஒன்று மட்டுமே முற்கால பிராமிக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
“நாகஹ லேனே”
இதன் பொருள், “நாகனின் குகை” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The cave of Naga” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுக் காணப்படும் கற்குகை சங்கத்தார்க்கு தானமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதியும் கிடைக்கவில்லை.
நாக மகாராஜன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
ஒச்சாப்புகல்லில் நாகர் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பொ.ஆ. 167 முதல் 186 வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த கனிட்ட தீசன் எனும் மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டதாகும்.
எட்வர்ட் முல்லர் 1883 இல் இக்கல்வெட்டுப் பற்றி முதன்முதலாக தனது நூலில் குறிப்பிட்டார். அவருக்குப்பின் ஹென்றி பார்க்கர் 1909 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு பற்றிய விவரங்களையும், கல்வெட்டின் பிரதியையும் தனது நூலில் பதிவு செய்தார். அதன் பின்பு கொட்ரிங்டன் இக்கல்வெட்டுப் பற்றி தனது ஆய்வுக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். 1941 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் இக்கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்தது.
இக்கல்வெட்டு பிரதான கற்குகையின் பின்பக்கம் உள்ள கற்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. பாறையில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ள பகுதி 7 அடி 8 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும். 5 வரிகளில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:
சித்தம் நாக மஹாரஜஹ புத மலி திச ம
ஹாரஜக மகன-நகரயஹி வவளவி மிதயஹ சுடதக வாவிய க
ஜபோ அவியிக மதக அவியிக தலவன அவியிக மே எதக வவியி
போஜியபதி கர கடய குப விஹரகெஹி ப[க] செடஹிதெல ஹுட முல கட[முத] வெடி
ய ஜின படி சதரிய கொடு தினி
கல்வெட்டில் உள்ள வாசகங்களின் பொருள், “மகாராஜா நாகனின் மகனான மகாராஜா கனிட்ட தீசன், மகன நகரத்தில் வாழும் வவளவி மித்தயனின் குடதக்க வாவி, ஜபோ வாவி, மதக்க வாவி, தலவன வாவி ஆகிய குளங்களின் மூலம் கிடைக்கும் மேலதிகமான வருமானத்தில் செலுத்தவேண்டிய தொகையை, குபே விகாரையில் உள்ள ஐந்து தூபிகளுக்கும் தேவையான எண்ணெய் மற்றும் ஏனைய செலவீனங்களுக்காகவும், தூபிகளின் உச்சியில் உள்ள சத்ர கல்லுக்கு கம்பளம் வாங்கி விரிப்பதற்காகவும் வழங்க வேண்டும் என்பதாகும்.

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்

 *விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.*

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.
62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
*அந்த நாடுகள்*
அங்கோலா
பார்படாஸ்
பூடான்
பொலிவியா
பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
புரூண்டி
கம்போடியா
கேப் வெர்டே தீவுகள்
கொமோரோ தீவுகள்
கூக் தீவுகள்
டிஜிபவுட்டி
டொமினிகா
எல் சால்வடார்
எத்தியோப்பியா
பிஜி
கபோன்
கிரீனடா
கினியா பிசாவு
ஹைதி
இந்தோனேஷியா
ஈரான்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகஸ்தான்
கென்யா
கிரிபாட்டி
லாவோஸ்
மகாவோ
மடகாஸ்கர்
மலேஷியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிஷியானா
மொரிஷியஸ்
மான்ட்செரட்
மொசம்பிக்
மியான்மர்
நேபாளம்
நையூ
ஓமன்
பலாவு தீவுகள்
கத்தார்
ருவாண்டா
சமோவா
செனகல்
சீசெல்ஸ்
சியாரா லியோன்
சோமாலியா
இலங்கை
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட்லூசியா
செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
தான்சானியா
தாய்லாந்து
தைமூர்
டோகோ
டிரினாட் மற்றும் டோபாகோ
துனிஷியா
துவாலு
வனுடு
ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய

 ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

🍁
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.
தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.
சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.
இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.
உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.
உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.
அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.
ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.
உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.
நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.
உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.
இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.
இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.
வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.
உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.
இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.
அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.
நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.
என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.
அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.
உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.
நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.
நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.
ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.
நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.
நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
இலவசமாக உணவு கிடைக்காது.
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.
நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.
நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.
இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.
இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.
இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.
அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

அகத்திக்கீரை !

 அகத்திக்கீரை !

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்
அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்
கீரையில், 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் தாது உப்புகள் மட் டுமின்றி, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின், ஏ, சி ஆகிய சத்துக்களும் உள்ளன. அகத்தி என்றால், 'அகம் தீ' என்று பொருள்.
அகத்திக்கீரை உடலில், ரத்த ஓட்டத்தை சமப்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்தை தருவதாலேயே, அதற்கு 'அகத்தி' என்று பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு. இந்தக்கீரை உடலின் உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தும் பணியினைச் செய்கிறது. இந்தக்கீரை பெரும்பாலும், வெற்றிலைக்கொடிக்கால்களில், வெற்றிலைக்கொடி படவர்வதற்கும், மிளகுத்தோட்டத் தில் மிளகுக்கொடி படர்வதற்காகவும் துணையாக, சிறுமரமாக வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி என பல வகை இருந்தாலும், பொதுவாக இதில் 2 வகை உண்டு.
ஒன்று வெள்ளை நிறப்பூக்களையும், மற்றொன்று சிவப்பு நிறப்பூக்களையும் கொண்டது. இவற்றின் இலை, பூ, பட்டை மற்றும் வேரும் மருந்தாக
பயன்படும் அருங்குணங்களை கொண்டதாகும்.
அகத்தியின் அருங்குணம்: இந்த அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால், எளிதாக ஜீரணமாகும். பித்த நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் சிக்கலின்றி வெளி யேறும். மன இறுக்கம் தளர்ந்து மனக்கோளாறுகளும் சரியாகும். 'அல்சர்' குணமாக அருமையானதொரு மருந்தாகும். கீரையுடன், சின்ன வெங்காயம்,மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் எளிதாக குணமடையும்.
இந்த கீரையின் சாற்றை, சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது, கீரையை மட்டும் அரைத்துத்தடவி வந்தால், விரைவில் ஆறிவிடும். தேமல் வந்த இடத்திலும், அகத்தி இலையை தேங்காய் எண்ணெய் விட்டு, வதக்கி சிறு சிறு விழுதுகளாக அரைத்துப்பூசி
வந்தால், விரைவில் குணமடையும். இந்தக்கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து, மருக்களின் மீது தொடர்ந்து பூசிவந்தால், அவை காய்ந்து உதிர்ந்து மறையும். அகத்திப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால், கண் எரிச்சல், தலைசுற்றல், நீர்கக்கடுப்பு சரியாகும். பீடி, சிகரெட் குடிப்பவர்கள் இந்த அகத்திக்கீரை மற்றும் பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடலில் ஏறியிருந்த விஷம் மலத்துடன் சேர்ந்து வெளியேறும்.
புகைப்பிடிக்கும் ஆர்வமும் குறையும். அகத்திக்கீரையுடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், இதய படபடப்பு, இதயவீக்கம், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் கூட கட்டுக்குள் வரும். அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து, இடித்து, 8 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால், அம்மை நோய் கூட இறங்கி விடும்.
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே, சித்தமருந்துகள் சாப்பிடும் போது, அகத்திக்
கீரையை சாப்பிடக்கூடாது. இந்தக்கீரையுடன், கோழிக்கறி சாப்பிடக்கூடாது. மது அருந்தி விட்டு அகத்திகீரையை சாப்பிட்டால், மாரடைப்பு ஏற்படும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, மேற்கண்ட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

ரிஷியாக மாறிய மார்கண்டேயன்

 "இந்த மரணம் என்னை என்ன செய்யும்"?

#மிருகண்டர் என்பவர் ஒரு மகரிஷி. அவருடைய மனைவி #மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை.
அதற்காக #சிவபெருமானை வேண்டினார்கள். ஒருநாள் மகரிஷி முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழும் #முட்டாள்களாக இருக்க போகும், #நூரு குழந்தைகள் வேண்டுமா? அல்லது #பதினாறு_வருடங்களே வாழப்போகும் #புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த #புத்திசாலி_மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறிமறைந்தார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான் அவனுக்கு #மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான், வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "#தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான்.
அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார்! நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய்! இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி #கண்ணீருடன் கூறினார்.
உடனே மார்கண்டேயன் "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது நீங்காத #அன்பு உண்டு, அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள்! அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் #புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். #கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான்.
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான #எமன் ஒரு எருமையின் மீது ஏறி அங்கு வந்து, மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. #மரணத்திற்கு_தயாராக_இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார்! அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது பாசக்கயிறு சிவலிங்கத்தில் பட்டு அந்த #சிவலிங்கம்_வெடித்தது! அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறி எமனை #நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான்....
"எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! இவன் என் #மனம்_கவர்ந்த_பக்தன். இவன் என்றும் 16 வயது முடியாத #சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். அந்த #ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடியும்.
இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய #ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்...

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...