Thursday, September 22, 2022

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*
😁😁😁😁😁😁😁😁

*கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து*
_பல் விளக்கச்சொன்னபோது_ ,

*பட்டிக்காடு* என *இளித்த பற்கள்*
*இன்று வேரற்று போனபோது*...

*ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*...

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*வெந்தயமும் சிகைக்காயும்*
*வடிதண்ணீரில் அரைத்து*
*தேய்த்துக்குளி என்றபோது* ,

*பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்*

*இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்*
_சீகைக்காய் வாங்க_......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*பாசிப்பயறோ*
*கடலை மாவோ*
*அரைத்துக்குளி* என்ற போது ,

*லிரில்* ,
*லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்*
*அழகு சோப்*
என *கைகாட்டிய* *கட்டிகளை*
*எல்லாம் போட்டு*,,
*தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*..

*ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*இருமலோ தும்மலோ*
*வந்தபோது*...
*துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* ,

*முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* ,

*ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*வயிற்று வலி என்றபோது*
*வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*..

*சீறித் தூக்கி எறிந்து* ,
*ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு*
*கருப்பை பழுதடைந்த பின்பு* ,
_ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி*
*மணமாய் தந்தபோது* ,

*சன்ஃபிளவர் ஆயில்* *பார்*
*முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,*
*பதிலுரைத்துவிட்டு*,

*இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* .....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்....

*மண்பானை சமையல்*
*மண்பானை குளிர் நீரை*
எல்லாம் மாற்றி விட்டு ,

*ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து*
*சவமான பின்பு ஓடுகின்றேன்*

*மண்பானை வாங்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

*படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*..

*குருகுலக்கல்வியை*
*கோடிக்கணக்கான ரூபாய்*
*கல்வியாக்கி* ,

*கொல்லைப்புற துளசியின்*
*வைத்தியம் மறந்து* ,
*மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு*
*இலட்ச இலட்சமாய்க்கொட்டி* 
*நடைப்பிணமாக வாழும்*
*வாழ்வில் எங்கே சுதந்திரம்*
*ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள் .......

*மூத்தோர் சொல்லும்*
*முது நெல்லிக்காயும்*
*முன்னே கசக்கும்* ,
*பின்னே இனிக்கும்*

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும்.

தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30 - 12.00 ] ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள்

ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்:

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில்உள்ளஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும் , மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

வெள்ளி கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 -12.00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...