ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள்
ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்)
தயாரிக்கும் முறைகள்
Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha System
History of Resarch
முற்காலத்தில் "வேதியியல்'' என்றால் "ரசவாத முயற்சிகள்' மட்டுமே. செம்பைப் பொன்னாக்கும் ஆர்வம்தான் பலருக்கும் உயிர்த்து எழுந்தது. அந்நாளில் "" இரசவாதம்'' என்பது கார உலோகங்களைத் தங்கமாக உருமாற்றும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. "" உகந்த வானவியல் சூழ்நிலைகள் நிலவுமானால், காரீயத்தீனை பொன்னாக மாற்ற முடியும்'' என்று பண்டைய இரசாவதியர் நம்பினர்.
வெம்மையூட்டுவதலாலும், பல்வேறு வேதியியல் முறைகளில் சுத்தீகரிப்பதாலும் இந்த உருமாற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்று கருதினர். ஆயினும் இந்த ரசவாத முயற்சிகள்யாவுமே மிகுந்த ரகசியமாப் பாதுகாக்கப்பட்டன.
பண்டைய நாளில் சீனா, இந்தியா தொடங்கி, கிரீஸ் வரை பெரும்பாலான நாடுகளில் இந்த முறை வழக்கி“ல இருந்தது. ஹெல்லியக் காலகட்டத்தில் இரசவாத ஆர்வம். எகிப்திற்கும் பரவிற்று. பின்னர் அரபி மொழிப்பெயர்ப்புகள் பலவும் இலத்தீன் மொழிமாற்றம் பெற்றதால் 12ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் புத்துயிர் பெற்றது.
மத்தியக் கால ஐரோப்பிய இரசவாதியர் பலரும் கனிமஅமிலங்கள், ஆல்கஹால் போன்ற நிகழ்த்தினர். இந்த ஆய்வு எழுச்சி பாராசெல்சஸ் என்பவரின் முயற்சியினால் மருந்தியல் என்னும் துறை உருவானது. இதுவே நவீன வேதியல் துறை மல வழிவகுத்தது. இவ்வாறாக, 19ஆம் நுற்றாண்டு வரை ரசவாதியின் இத்தகைய தங்கம் உருவாக்கும் நம்பிக்கை மறையவில்லை.
சாதாரண உப்புகள், கனிமங்கள், தாதுக்கள் யாவும் உயிரற்று பொருள்களில் இருந்து எளிதில் பெறப்படுவை. ஆனால் ""சர்க்கரைச் சத்து, மாவுப்பொருள், கொழுப்புகள், எண்ணெய்கள், புரதங்கள், மூலிகைச் சத்துக்கள் போன்ற சிக்கலான பொருள்கள் ஒருவித உயிர் விசை உடையவை என்று வேதியிலார் கருதினார். 1807ஆம் ஜான்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ் எனும் சுவீடன் வேதியியலார் தாவரம், விலங்கு போன்ற உயிரிகளில் காணப்படும் பொருளுக்கு "ஆர்கானிக் என்று பெயரிட்டார்.
இத்தகையக் கரிமப் பொருள் சோதனையில் ஈடுபாடு மிக்கவர் ஃப்ட்ரீச் வோஹ்லர் (1800-1882) என்னும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர். வெறும் 28 வயது மாணவர். வினோதமாக. ஒருமுறை தனது சிறுநீருடன் நாயின் சிறுநீரும் கலந்து ஆராய்ந்து வந்தார். அதில் யூரியா கிடைத்ததில் ஆச்சரியமில்ø. ரத்தம், சிறுநீர் ஆகிய உயிரிப் பொருள்களில் யூரியா அடங்கி உள்ளதென இன்று அறிந்ததே. சிறுநீரில் லிட்டருக்கு ஏறத்தாõழ இரண்டரை கிராம் வரையிலும், அதில் ஐந்திலொரு பங்கு அளவு ரத்தத்திலும் யூரியா காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்குள் வளர்சிதை மாற்றங்களால் விளையும் உப்பு இது.
ஆனால் நடந்தது. வேறு கதை, 1828ஆம் ஆண்டு அம்மோனியம் சயனேட்டு எனும் உப்பு தயாரிக்க முனைந்தவர் அம்மோனியம் சயனேட்டும், பொட்டாசியம் சயனேட்டு ஆகிய உப்புகளைச் சேர்த்துச் சுட வைத்தார்.இரட்டைச் சிதைவு முறையில் பாத்திரத்தில் அம்மோனியம் சல்பேட்டு எஞ்சி இருக்க வேண்டும். ஆனால் கரைசல் வற்றி எஞ்சியது பொதுக் கழிவறைகளில் அடிக்குமே அதே நெடி வீம் உப்பு சிறுநீரில் கிடைத்த உப்பு அல்லவா? அம்மோனியம் சயனேட்டு மாதிரியே ஒரே அளவு கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் அணுக்கள் அடங்கிய புதியதோர் கூட்டுப்பொருளா? பெர்சீலியஸிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை "சமகூறுகள் எனும் பொருள்பட ஐசோமர் என்று அதற்குப் பெயரிட்டார். புதிய கலைச்சொல் அறிமுகம் ஆனது.
கனிமப் பொருள்களில் இருந்து ஒரு கரிமப் பொருள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறுதான். பதினேழாம் நூற்றாண்டில் ஹென்னிங் பிராண்டு என்னும் ஜெர்மானிய வணிகர் சிறுநீரையே வாலையில் இட்டுக் காயச்சினார் செம்பை பொன்னாக்கும் முயற்சியாம் இன்றைய ராசிக் கல் மாதிரி அன்றைக்கு விஞ்ஞானக் கல் ஒன்றே பணம் ஈட்ட உகந்த வழியாகக் கருதப்பட்டது. அதற்கான விஞ்ஞானக்கல் ஒன்றை கண்டுபிடிக்கிற முனைப்பு, அந்நாளில் ஃபிலாசஃபர் என்றால் விஞ்ஞானி என்று பொருள், அதனால்தான் ஆய்வாளர்களுக்கு இன்றும் "மாஸ்டர் ஆஃப்பி என்றே பட்டம் வழங்கப்படுகிறது.
அந்த வாலையில் எண்ணெய் பிசுக்குள்ள திரவம் மிஞ்சியது அதை மேற்கொண்டு சூடாக்கியதில் கருத்த வீழ்படிவு கிடைத்தது. ஆனால் அது விஞ்ஞானக் கல் இல்லை. ஆத்திரத்தில் வாலையில் ஒரு பிடி மண்ணை வாரி போட்டார். பக்கத்தில் இருந்த கரித்தூள் டப்பாவையும் காலால் உதைத்து வாணலியில் தட்டினார். என்ன ஆச்சரியம்? வாலையில் பிரகாசான ஓளிர்பொருள் ஒன்று மினுங்கியது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. தாம் எதிர்பார்த்த "மந்திரக் கல் கிடைத்து விட்டது. என்று மனம் வானம் வரை துள்ளியது . ஆனாலும் செம்பைப் பொன்னாக மாற்ற இயலவில்லை.
மனம் முறிந்த ஹென்னிங் கொஞ்ச காலம் அறிவியல் துறவறம் பூண்டார். தமது பரிசோதனைகள் பற்றி எவரிடமும் வாயே திறக்கவில்லை தம் கண்டுப்பிடிப்பை வெகுநாள் மறைத்து வைக்கவும் விரும்பவில்லை. "விஞ்ஞானக் கல் பற்றிய வியப்பை அறிவிது விட்டார்.இயற்கையாகவே இருளில் ஒளிரும் பொருளுக்கு கிரேக்க மொழியில் "பாஸ்பரஸ்' என்று பெயர் ஃபாஸ் என்றால் ஒளி ஃபேராரோ என்றால் சுமந்த என்பது பொருள், ஒளியேந்திய பாஸ்வரத்திற்கு வேதியியல் சூரியன் என்கிற செல்லப் பெயரும் உண்டு.
எப்படியோ இந்தப் பாஸ்வரம் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கவனத்தில் சொக்குப் பொடிதூவிற்று, பிரசித்தி பெற்ற ரசவாதியான ஜோஹன்குங்கெல் (கி.பி. 1630-1702) என்பவர் ஹென்னிங்பிராண்டிடம் பாஸ்வர ரகசித்தைத் தட்டிவரத் திட்டம் இட்டார். இதற்காகத் தம் உதவியாளர் ஜோஹன் டானியல் கிராஃப்ட் என்பவரை ஹாம்பார்க் நகருக்கு அனுப்பினார். எவ்வளவு விலை கொடுத்தாவது அதனைப் பெற்றுவரும்படி கட்டளை. கூடனே பணமும் கொடுத்து அனுப்பினார். தமிழகத்தின் அரிமர்த்தனப் பாண்டியன் மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்க பணம் கொடுத்த மாதிரி.
ஆனால் இந்த கிராஃப்ட் ஒரு தந்திரசாலி, ஹென்னிங் பிராண்டிடம் தாம் பெற்று வந்த கொஞ்சம் "அரைகுறை' ரகசியத்தை ஆசானிடம் ஓப்படைக்கவில்லை. பாஸ்வர ஒளியில் மயங்காதோர் யாரோ? தாமே பாஸ்வரம் தயாரிக்கக் தொடங்கினார். தொடர்ந்து நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆலாப் பறந்து சென்று "பாஸ்வர வெளிச்சம்' பாஸ்வரத்தை உருட்டிக் காட்டி இலண்டன் அரசவைக் கழகத்தினரிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
இதற்கிடையில் அரசவைக் கழக ஆஸ்தான விஞ்ஞானியான ராபர்ட் பாயில் எனும் வேதியிலார் இது குறித்து வினவினார். அது ஒரு சாதாரணப் பாதரசம் என்றும், மனித உடல் சார்ந்த என்றும் மட்டும் கோடு காட்டினார் டேனியல் கிராஃப்ட் அப்புறம் என்ன, ராபர்ட் பாயில் சுயமாக பரிசோதனைகள் தொடங்கினார். பாஸ்வரக் கண்டுபிடிப்பில் வெற்றியும் பெற்றார். பிற்காலத்தில் ஹாம்பர்க் நகரம் வந்த லீப்னிட்ஸ் எனும் கணித மேதையும், ஹென்னிங் பிராண்டிடம் நட்பு கொண்டு பாஸ்வரம் தயாரிக்க கற்றுக் கொண்டார். ராபர்ட் பாயிலுக்குப் பிறகு இத்தகையப் புதுப்பொருள் தேடும் ரசவாத முயற்சிகள் குறைந்து போயின.
ALCHEMY- METHODS OF MAKING GOLD
ரசவாதம் (alchemy) என்றால் என்ன? தங்கத்தை செயற்கையாக தயாரிக்க முடியுமா?
ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்ற முடியுமா?
தங்கம் தயாரிக்க உதவிய மூலிகைகள் என்னென்ன?
தங்கம் தயாரிக்க சித்தர்கள்(Tamil
Alchemists) கூறியுள்ள வழிமுறைகள் என்னென்ன? தெரிந்துகொள்ளுவோம்
ரசவாதம்(RASAVAATHAM/ALCHEMY
MEANING)என்றால் என்ன?
உலோகத்தை தங்கமாகும் வித்தையை ரசவாதம் என்பார்கள். அக்காலத்தில் பாதரசம்
இந்தச் செயல்பாட்டில் மிக முக்கிய
பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ‘ரசவாதம்’(#RASAVAATHAM #ALCHEMY) என்று அழைத்தனர். பழங்காலத்திலிருந்தே பிற உலோகங்களைத் தங்கமாக்குதல் மனிதனுக்கு ஒரு
கனவு.. நம் நாட்டில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் அந்தக் காலத்தில்
ரசவாத முயற்சிகள் மிகப் பிரபலம்., ரசவாத முயற்சிகளில் பிறந்ததுதான்
வேதியியல் என்ற துறை என்று ஜெர்மனியில் சொல்வார்கள்.
உலகளவில் ரசவாதம் (RASAVAATHAM/ALCHEMY)
பழங்காலத்தில் கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற
நாடுகளில் தங்கம் தயாரிக்கும் முறைகள்(ALCHEMY METHODS) குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி
ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர்(ALCHEMIST) கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில்
பல்வேறு ரசவாதிகளை(ALCHEMIST) வர வழைத்து, அவர்களை சோதனைகள் செய்ய வைத்து,
அவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்து
கௌரவித்திருக்கிறார்.
ரசவாதம்-சித்தர்களின் அறிவு
நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை
திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவற்றை
லிங்க உருவாக்கி வழிபட்டனர். பல ஆலயங்களிலும் மக்கள் வழிபாட்டிற்காக ஸ்தாபித்தனர்.
எரியும் கற்பூரத்தை எரியா
மருந்தாக்கல். ஓடும் பாதரசத்தை ஓடாத திடபொருளாககி குளிகை மற்றும் மருந்து செய்தல்.
வேதையின் ஒருபகுதி தங்கம் செதய்தல் என்று சித்தர்கள் பாடி உள்ளார்கள் இதற்கு
அடிப்படையாக முப்பூ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். (முப்பு பற்றி
அறிந்துகொள்ள கர்ப்பமுப்புக் குருநூலைப் படிக்கவும்)
ரசவாதம்-சாத்தியமா?
பொதுவில் இரசவாத முறை இரெண்டு நிலைகளைக்
கொண்டது. ஒன்று பாதரசத்தை தின்மமாக்கல்.
மற்றது மட்டமான உலோகங்களான ஈயம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு போன்றவற்றை உயர் உலோகமான
தங்கமாக மாற்றுவது.
உலோகங்கள் என்பவை பாதரசமும் கந்தகமும் பல அளவில்
சேர்ந்து உண்டானவைகளே என்பதாகவும், தங்கத்திலேயே மிகவும் குறைந்த கந்தகம்
இருப்பதாகவும் பண்டைக் காலத்தில் எண்ணினர்கள். செம்பு முதலிய வற்றிலுள்ள
கந்தகத்தில் பெரும் பகுதியை வெளியே போய்விடும்படி செய்து விட்டால் செம்பு
தங்கமாகிவிடும் என்று நம்பினர்.
எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை.
அந்த அணுக்களின் மூலக் கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு
பொருளாக மாற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால் இரும்பை அந்த முறையில் தங்கமாக
மாற்றுதல் சாத்தியமில்லை என்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.
தாவரங்கள் எல்லா இடத்திலும் பச்சையாகவே
இருப்பதில்லை. இந்த பச்சையின் நிறம் மாறுபடும், ஏன் சில இடங்களில் சிவப்பான தாவரங்களைக் கூட காண முடியும். இந்த
நிறத்தை நிர்ணயிக்கும் நிறமிகளின் பின்னால் இருப்பது அந்த தாவரத்தில்
மிகுந்திருக்கும் உலோக உப்புகள் என்பது தாவர இயலில் நிரூபிக்கப் பட்ட உண்மை.
ஆக
குறிப்பிட்ட ஒரு உலோகம் அந்த செடியால் ஜீரணிக்கதக்க வகையில் உப்பாக
இருக்கிறது. வேறு வகையில் சொல்வதானால் இயற்கையாகவே உலோகம் உப்பாக உருமாறி தாவரம்
ஜீரணிக்கத்தக்க நிலையை அடைந்துள்ளது. உலோகம் உப்பாக மாற முடியுமானால், உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?
மேலும் இரும்பைக் காய்ச்சி
நல்லெண்ணையில் இடும்போதும், அதையே தவிட்டில் இடும்போதும், உப்புநீரில் இடும்போதும் வேவேறான தன்மையை அடைவதை காணமுடிகிறது. எனவே
உலோக மாற்று என்பது சாத்தியமான ஒன்றாகவே தோன்றுகிறது.
பழங்காலத்திலிருந்தே தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
தங்கம் பொதுவாக ஆழமான சுரங்கங்களிலிருந்தே வெட்டி எடுக்கப்படுகிறது. இயந்திரங்கள்
இல்லாத காலங்களில் எவ்வாறு தங்கம் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டி
ருக்கக் கூடும்? எனவே தங்கம் வேறு வழிகளில்
தாயாரிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை ஏற்க வேண்டியிருக்கிறது.
சித்தர் இலக்கியங்களில்
-இரசவாதம்-
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல
சதகம் (கொங்குமண்டல வரலாறு) என்னும் நூலில்,
யோக வயித்தியம் சொல் ரசவாதம் எலாக்
கலையும்
தேக நிலைபெறும் காயகற்பங்கள் எண்
சித்தியும் சொல்
போகருடன் புலிப்பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகாநகர் கொங்கு மண்டலமே. 36
யோகம், மருத்துவம், ரசவாதம், தேகத்தை நலமாக்கிக்கொள்ளும் காயகற்பம், எட்டு வகையான சித்தி முறைகள் ஆகியவற்றை யெல்லாம் சொல்லும் போகர்,
புலிப்பாணி முதலான புண்ணியர் எல்லாரும்
அமர்ந்திருந்தது வைகாநகர் (வையாவிக்கோ-நகர், பழநி). இந்த நகர் இருப்பதும் கொங்குமண்டலமே.
தோற்றிய செம்பு தரா வீயம் பித்தளை சூழ்
பச்சிலைச்
சாற்றுடனாக ரசங் கந்தகமிட்டுத்
தந்திரமாய்
தேற்றும் தவம்பெற்ற கொங்கணச்
சித்தர்முன் செம்பொன் செய்து
மாற்றுரை கண்டது பொன்னூதியூர் கொங்கு
மண்டலமே. 37
செம்பு, தாமிரம், ஈயம், பித்தளை ஆகியவற்றில் பச்சிலைச் சாறு, ரசம், கந்தகம் ஆகியவற்றைக் கலந்து
தந்திரமாகத் தங்கம் ஆக்கியவர் கொங்கணச் சித்தர். இவர் வாழ்ந்த பொன்னூதியூர்
இருப்பதும் கொங்குமண்டலம். என்று கொங்குமண்டலத்தின் சிறப்பினை கூறும் பாடல்
வரிகளில் கொங்கணச் சித்தர், போகர், புலிப்பாணி சித்தர்கள் தங்கம் தயாரித்ததாகக் கூறியுள்ளார்.
பாதரசம், காரீயம், பிலாட்டினம், வெள்ளி ஆகியவற்றின் அணுத் தொகுப்பை, மூலக்கூறு அணுவை, அணுச்
சிதைவு மூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம். அவ்வாறு உலோகங்களின் அணு
நிறையை மாற்றி தங்கம் செய்வதற்கு பல ஆண்டுகால மனித உழைப்பு விரயமாவதுடன், பலகோடி டாலர்கள் செலவிட வேண்டிவரும்
என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரசவாதத்திற்குப் பயன்படும்
மூலிகைகள்/ராசவாத பச்சிலைகள்
திருமூலர் , போகர் , கொங்கணர், கருவூரார், சிவவாக்கியர் மற்றும் பல சித்தர்கள்
ரசவாதம் மூலம் தங்கம் செய்தார்கள் என்ற குறிப்பு உள்ளது இந்தப் பொன் மாற்று
வேலையைச் செய்யச் சில மர இனங்கள்பயன்படுத்தப்பட்டுள்ளன. அயம், இரும்பு, எஃகு, ஈயம், காரீயம், துத்தநாகம், உப்பு, கல்லுப்பு, நவச்சாரம், காயம், காவிக்கல், இரசம், மனோசிலை, காந்தம், கந்தகம், செம்பு, தங்கம் முதலிய ஒன்பது உலோகங்களையும் -
உலோகஞ் சார்ந்த அல்லது உலோகம் போன்ற பொருள் களையும் திரித்தும் மாற்றியும்
பொடித்தும் பயன் உண்டாக் குகிற சில
மூலிகைகள்/ராசவாத பச்சிலைகள் மர
தாவரங்களின் பட்டியல் வருமாறு:
அயத்துக்கு உருக்கி = இரத்த மண்டலப்
பூண்டு
அயத்தை ஈயமாக்கி = iழிச் செடி
அயம் உருக்கி = காட்டா மணக்கு (செடி
வகை)
இரசம் தாக்கும் மூலிகை = பெரிய
முள்ளங்கி (செடி)
இரும்பு அறுப்பி = கல்லி இரும்பிலை
இரும்பு நீற்றி (இரும்பைப்
பொடியாக்குவது) = எருக்கிலை
இரும்பைத் தங்கமாக்கி = இரும்பிலிச்
செடி (மலையகராதி)
ஈயங் கட்டி = இரும்பிலி இலை
ஈயங் கொல்லி = கரிய போளப் பூடு
ஈயத்தை நாச மாக்கி = கொடிக்கள்ளி
(செடிவகை)
ஈயத்தைப் பற்ப மாக்கி = ஆராக்கீரை
ஈயமாக்கி - காட்டாமணக்கு (செடிவகை)
இங்கே தமிழ் இலக்கியங்களில் தங்கம்
தயாரிக்கும் முறை குறித்து உள்ள சில பாடல்களை தருகிறேன். ஆராய்சி அறிவுடையோர் முயன்றுபார்த்து வெற்றி பெறட்டும்
”கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே…”
பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே”
என்கிறது ஒரு பழம்பாடல்
சில ராசவாத முறைகள் (Alchemy methods)
1. நாத வேதை மூலம் தங்கம் - கொங்கணவர்
2. காந்தரசம் மூலம் தங்கம் - போகர் வைத்தியம் 700
3. பித்தளையை தங்கமாக்கல் -அகத்தியர் பரிபூரணம்
4. செம்பில் இருந்து தங்கம்
5. இரும்பை செம்பாக்கும் ரசவாதம்
1. நாத வேதை மூலம் தங்கம்
மலை காடுகளின் ஊடான பயணத்தின்
போது பல்வேறு பாஷாணங்கள், உப்புகளை கரைத்துக் கொண்டு, காடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும்
தன்மையும் செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும்
குறுகலாகவும் உள்ள குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில்,இடி ,மின்னல் போன்ற பருவ மாற்றங்களினால்
வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமான, சக்திவாய்ந்த ,
ஆற்றல் மிக்க நீர்மை பொருளான திரவமாக
ஆகிவிடும்.இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.
இந்த நீரில் விழும் இலை கூட
கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும் கிடைத்து விடாது
என்றும், இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை
என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக
நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பௌதீக தன்மை உடையவனாகவும் இருப்பதில்லையாம்.
இத்தகைய உதக நீரைப் பற்றி ”போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்” போன்ற நூல்களில் விரிவாக கூறப்
பட்டிருக்கிறது. இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு
பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான
பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்
"காணு நீ நாத வேதைக்
காட்டுகின்ற முறைமைக் கேளு
பூணு நீ சூதங் கட்டிப்
புகட்டிச் சாரணைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத் தட்ட
வாமினி சாத்தான் கேட் கில்
அம்மட்டும் வேதையாமே"
"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"
- கொங்கணவர்
நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்க்கு
முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாக
கேட்க்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது
செங்கல், சுக்கான் கல், மணல், போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை
தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர்.
2. காந்தரசம் மூலம் தங்கம் தயாரித்தல்
போகர் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர்
கூறுகிறார்.
"ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே"
"எடுத்திட்ட அயக்குறட்டால்
பிடித்துக்கொண்டே
இதமாகக் கிண்ணத்தில் தட்ட தட்ட
அடுத்திட்ட ரசமெல்லாம் சாம்பல் போலே
அப்பனே காந்த ரசம் இறங்கும் பாரே
கடுத்திட்ட காந்தம் ஒரு பலத்துக்கு
அப்பா
கால்வாசி இறங்கி நிக்கும் திரட்டி
வாங்கு
வெடித்திட்ட குடக் கரியில் இட்டு
நீயும்
வெண்காரம் இட்டு உருக்கு கனகம்
ஆமே"
"கனகத்தை கண்டு நீ மகிழ்ந்தி டாதே
கைசெலவு கற்பத்துக்கு இல்லாவிட்டால்
கனகமாஞ் செலவுக்கு கற்பத் துக்குக்
காணவே கொஞ்சமாய் செய்து கொண்டு
கனகமாம் அந்தி சந்தி கந்தன் பூசை
கருதி நீ செய்து கொண்டு அனுபவிப்பாய்
கனகமாம் உலகத்தில் வெளி செய்யாமல்
கண்டவர்முன் ஊமையை
போல்இருந்திடாயே"
- போகர் வைத்தியம் 700 -
ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக்
கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்து, அதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பி,
மூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில்
மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால், சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக்
குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாக
தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இதை சேகரித்து
வைத்துக் கொள்ளுங்கள் இதுவே காந்த ரசம் என்று போகர் குறிப்பிடுகிறார். இந்த காந்த
ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கம்
ஆகிவிடுமாம்.
3. பித்தளையை தங்கமாக்கல்
அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையை தங்கமாக
மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார். அந்த விவரம் பின் வருமாறு.
பதிவாக இன்னமொரு கருமானங்கேள்
பதிவான பிருதிவியைப் பழச்சாற்றாலே
கெதியாகத் தானரைத்து மைந்தாகேளு
கெணிதமுடன் துருசுவெடி சாரங்கூட்டி
மதியான சருகுடனே பூரஞ்சேர்த்து
மைந்தனே பழச்சாற்றா லரைத்துருட்டி
விதியான பித்தளையைத் தகடுசெய்து
விரும்பியந்த மருந்ததிலே சேர்த்துமூடே.
சேர்ந்துநன்றாய் மூடியபின் மைந்தாகேளு
சிவசிவா நிதானமுடன் புடத்தைப்போடு
பார்த்திபனே புடமாறி
யெடுத்துப்பார்த்தால்
பத்தியுள்ள பித்தளைதான் செம்பாய்ப்போச்சு
போற்றியந்தச் செம்பதனைப் பதனம்பண்ணி
புண்ணியனே வெள்ளிதனில் நாலுக்கொன்று
வாத்திமிகத் தாங்கொடு உருக்கிப்பார்க்க
மயங்காதே மகத்தான பொன்தான்பாரே.
பஞ்ச பூதங்களுள் மண்ணை
முன்னிலைப்படுத்தும் ஒரு மூலகத்தை எடுத்து அத்துடன் பழச்சாறு சேர்த்து அரைத்து,பின்னர் அதனுடன் துரிசும், வெடிசாரமும்,
பூரமும் சம அளவில் சேர்த்து மீண்டும் அதே
பழச்சாறு கொண்டு அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்.
பித்தளையை தகடாக செய்து அதன் மீது மேலே சொன்ன
உருண்டைகளை பூசி நன்கு கவசமிட வேண்டுமாம். பின்னர் அதை புடமிட்டு, புடம் ஆறிய பின்னர் எடுத்துப் பார்த்தால் அந்த பித்தளையானது செம்பாக
மாறியிருக்குமாம். பின்னர் அந்த செம்பின் எடைக்கு நான்கில் ஒரு பங்கு வெள்ளி
சேர்த்து உருக்கினால் அது தங்கமாக மாறிவிடும் என்கிறார்.
எளிய முறைதானே!, ஆனாலும் இங்கே சில விவரங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது
மண்ணை முன்னிறுத்தும் மூலகம் எது என்பதையும், எந்த வகையான புடம் போடவேண்டும் என்பதையும் அகத்தியர் இந்த நூலில்
குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தகவல்கள் அகத்தியர் அருளிய மற்றொரு நூலான
"அகத்தியர் 12000" என்னும் நூலின் ஒன்பதாவது காண்டத்தில்
வரும் 637வது பாடலில் குறிப்பிடப்
பட்டிருக்கிறது.
‘கரு மருவு குகையனைய காயத்தின் நடுவுட்
களிம்புதோ செம்பனை யான்
காண்டக விருக்க நீ ஞான அனல்மூட்டியே
கனிவு பெற உள்ளுருக்கிப்
பருவமறிந்துநின் னருளான குளிகைகொடு
பரிசித்து வேதி செய்து
பத்து மாற்று தங்கமாக்கியே பணி கொண்ட
பட்சத்தை என் சொல்லுவேன்?’
4. செம்பில் இருந்து தங்கம் தயாரித்தல்
தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும்
தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை
நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர். இந்த பச்சை நிற
களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும். அனால் கூத்தன் குதம்பை
என்று சித்தர் எதை இங்கு குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது.
5.இரும்பை செம்பாக்கும் ரசவாதம்
இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல்
கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து
சேகரிக்கப் பட்டது.
கல்தாமரை அல்லது கற்றாமரை ஒரு கொடி
வகையைச் சேர்ந்த மூலிகை..( நீர்கொழும்பு பகுதியில “குடபாடு” என்னும் பகுதியில் இருப்பதாக கேள்வி)
இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து
சுத்தம் செய்து, நன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை
அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய்
சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் அந்த ஊசியை எடுத்தால் அது
செம்பாக மாறியிருக்கும்.என்று கூறப்படுகிறது
No comments:
Post a Comment