RBI Update: 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரூ. 500 தொடர்பான புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு மக்களின் பதற்றம் அதிகரித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது முதல், இன்னும் பல ரூபாய் நோட்டுகள் பற்றிய பல வித செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டு பற்றி பல வதந்திகள் கிளம்பியுள்ளன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.